About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 31 October 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.1

ஸூத உவாச|
ஜக்³ருஹே பௌருஷம் ரூபம் 
ப⁴க³வாந் மஹதா³ தி³பி⁴:|
ஸம்பூ⁴தம் ஷோட³ஸ² கலம் 
ஆதௌ³ லோக ஸிஸ்ரு க்ஷயா||

  • ப⁴க³வாந் - இறைவனான வாஸுதேவன்
  • லோக ஸிஸ்ரு க்ஷயா - உலகத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பத்தால்
  • ஆதௌ³ - முதலில் 
  • மஹதா³ தி³பி⁴ஹி ஸம்பூ⁴தம் - மஹத், அஹங்காரம் என்ற பஞ்சதன் மாத்ரைகளோடு கூடியதும்
  • ஷோட³ஸ² கலம் - பதினாறு கலைகளோடு கூடியதுமான 
  • பௌருஷம் ரூபம் - விராட் ஸ்வரூபத்தை 
  • ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்

ஸூதர் கூறுகிறார் - பகவான் வாஸுதேவன் முதன் முதலில் இவ்வுலகத்தைப் படைக்கக் கருதி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பதினாறு கலைகள் அடங்கிய விராட் புருஷ திருவுருவை மேற்கொண்டார்.

பதினாறு கலைகளாவன: அறிப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, ஐம்பூதங்கள் மற்றும் மனது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment