About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 20 October 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.1 

ஸஞ்ஜய உவாச।
தம் ததா² க்ரிபயா விஷ்டம் 
அஸ்²ரு பூர்ணா குலேக்ஷணம்| 
விஷீ த³ந் தமித³ம் வாக்யம்
உவாச மது⁴ஸூத³ந:||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் கூறினான் 
  • தம் - அர்ஜுநனிடம் 
  • ததா² - இவ்வாறாக 
  • க்ரிபயா - இரக்கத்தால் 
  • விஷ்டம் - நிறைந்து 
  • அஸ்²ரு பூர்ண குல - கண்ணீர் நிறைந்தது 
  • ஈக்ஷணம் - கண்கள் 
  • விஷீ த³ந்தம் - கவலை கொண்டு 
  • இத³ம் - இந்த 
  • வாக்யம் - சொற்களை 
  • உவாச - கூறினார் 
  • மது⁴ஸூத³நஹ - மது எனும் அரக்கனை அழித்தவர்

ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறாக இரக்கத்தினால் நிறைந்து, கண்களில் கண்ணீர் நிறைந்து, கவலை கொண்ட அர்ஜுநனிடம், மது எனும் அரக்கனை அழித்த, மதுசூதனரான கிருஷ்ணர், பின்வரும் சொற்களை கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment