||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
006. திருப்பேர் நகர்
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
4 ஆழ்வார்கள் – 33 பாசுரங்கள்
1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
------------
2. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 3860 - 3870 - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி
------------
3. பெரியாழ்வார் - 2 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 173 - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் – 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 205 - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்
------------
4. திருமங்கையாழ்வார் - 19 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 12 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1428 - 1437 - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1851, 1857 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - (4 & 10) - 2 பாசுரங்கள்
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2048, 2050 - இரண்டாம் திருமொழி - 7 & 9 பாசுரங்கள் (17, 19)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 3 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2059, 2060 - முதலாம் திருமொழி - 8 & 9 பாசுரங்கள் (8, 9) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2070 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19) - 1 பாசுரம்
4. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
5. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2774 - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - (62
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர்
- போம் மானை எய்து - தனக்கு முன்னே மாயமாக ஓடிச் சென்ற மாரீசனாகிய பொன் மானை அம்பெய்து கொன்றும்
- பொரும் ஆனை கொம்பு பறித்து - யுத்தஞ் செய்ய வந்த குவலயாபீடமென்னும் யானையினது தந்தங்களைப் பிடுங்கியும்
- ஆம் ஆனை மேய்த்து - மந்தையாகத் திரண்ட பசுக்களை மேய்த்தும்
- உவந்த - மகிழ்ந்த
- அம்மானை - ஸ்வாமியும்
- தாமம் செழுந் திருப்பேரானை - வளப்பமமைந்த திருப்பேர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான திருமாலை
- சிறுகாலை - சிற்றஞ் சிறு காலையில்
- சிந்தித்து - தியானித்துக் கொண்டே
- எழுந்திருப்பேற்கு - எழுந்திருக்கும் எனக்கு
- இடர் - பிறவித் துன்பம்
- உண்டோ - உள்ளதாகுமோ? இல்லை
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment