||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
077 நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே|
நீரோருகம் என்பது தாமரை மலரைக் குறிக்கும்.
புனித ஸ்தலமான காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான். ஸ்ரீமன் நாராயணனின் தீவிர பக்தனான அவன், அனுதினமும் குளத்திலிருந்து தாமரை மலரை, தானே பறித்து, எம்பெருமானை அலங்கரித்து, வணங்குவான். சிறந்த நீச்சல் வீரனான சிங்கனின் நீச்சல் திறமை, நாளுக்கு நாள் வளர, விளைவாக, அவனுள் அகந்தையும் மலர்ந்தது.
கங்கை நதியின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிக்கும் அளவிற்கு, திறமையும் வளர்ந்தது. ஒரு சமயம், சிங்கன் நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான். கங்கை அவனை அடித்துச் சென்றது. அவனது நீச்சல் திறமை கை கொடுக்காமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் தொடங்கினான்.
தனது அகந்தையே தனது இந்நிலைமைக்கு காரணம் என்பதை உணர்ந்த சிங்கன், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைக் காத்த நாராயணனின் நினைவு வர, "நாராயணா! முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைப் போல், அகந்தையில் சிக்கியுள்ள நானும் உன்னிடம் சரணாகதி அடைகிறேன். என்னை காப்பாற்று.”, என்று சரணாகதி அடைந்தான்.
காற்று பலமாக வீச, நதியில் ஒரு பெரிய அலை எழுந்து வந்து அவனை கரையில் சேர்த்தது. இறைவனின் அருள் தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன், அகந்தையை விட்டொழித்தான். அன்று முதல், அனுதினமும் ஸ்ரீமன் நாராயணனை மலர்களால் அலங்கரித்து, அகந்தையின்றி சேவைப் புரிந்து வாழ்ந்தான்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "காசி சிங்கனைப் போல தினமும் ஸ்ரீமன் நாராயணனை தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment