About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 24 November 2023

திவ்ய ப்ரபந்தம் - 62 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 62 - வெண்ணெய் உண்ட கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

தாழியில் வெண்ணெய்* 
தடங்கையார விழுங்கிய* 
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்* 
உன்னைக் கூவுகின்றான்* 
ஆழி கொண்டுன்னை எறியும்* 
ஐயுறவில்லை காண்* 
வாழ உறுதியேல்* 
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!

  • தாழியில் - பானையிலே சேமித்து வைத்திருக்கிற
  • வெண்ணெய் - வெண்ணெய் முழுவதையும்
  • தட - தன் பெரிய 
  • கை ஆர - கையால் நிறைய அள்ளி எடுத்து
  • விழுங்கிய - ஒரே வாயில் விழுங்கி அமுது செய்த
  • பேழை வயிறு - பெரு வயிற்றை உடையவனான 
  • எம்பிரான் கண்டாய் - என் கண்ணபிரானைப் பார்
  • உன்னை கூவுகின்றான் - உன்னைக் கூவி அழைக்கிறான்
  • ஆழிகொண்டு - நீ வராததால் தன் சக்கராயுதத்தை அனுப்பி
  • உன்னை எறியும் - உன்னை கொல்லப்போகிறான்
  • ஐயுறவு இல்லை - இதில் சந்தேகமே இல்லை;
  • வாழ உறுதியேல் - உனக்கு உயிர் வாழ விருப்பம் இருந்தால்
  • மா மதீ! மகிழ்ந்து ஓடி வா! - புகழுடைய சந்திரனே! மகிழ்ந்து ஓடி வா

பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி அமுது செய்த பெருவயிற்றை உடையவனான என் கண்ணபிரான் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான். இதில் சந்தேகமே இல்லை. உனக்கு உயிர் வாழ விருப்பம் இருந்தால், மாமதியே! மகிழ்ந்தோடி வந்து என் மகனுடன் விளையாடுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment