About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 24 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.15

ரூபம் ஸ ஜக்³ருஹே மாத்ஸ்யம் 
சாக்ஷு ஷோத³தி⁴ ஸம்ப் லவே|
நாவ்யா ரோப்ய மஹீ மய்யா
மபாத்³ வைவஸ் வதம் மநும்||

  • சாக்ஷு ஷோத³தி⁴ - சாக்ஷு ஷமன் வந்தரத்தில்
  • ஸம்ப் லவே - ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில்
  • ஸ - அந்த பகவான்
  • மாத்ஸ்யம் - மத்ஸ்ய
  • ரூபம் - உருவத்தை
  • ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்
  • மஹீ மய்யாம் நாவி - பூமி ரூபமான ஓடத்தில்
  • வைவஸ் வதம் மநும் - வைவஸ்வத மனுவை
  • ஆரோப்ய - ஏற்றுக் கொண்டு
  • அபாத்³ - காப்பாற்றினார்

பத்தாவதாக, சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மகாபிரளயத்தில் 'மத்ஸ்யாவதாரம்' எடுத்து, வைவஸ்வத மனுவை பூமி ரூபமாக வந்த தோணியில் ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார்.

குறிப்பு: மன்வந்தர முடிவில் பிரளயம் இல்லாவிட்டாலும், ஸத்ய விரத மனுவிற்குத் தனது மாயையைக் காண்பிப்பதாகச் செய்த திருவிளையாடல் போலும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment