||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
076 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே|
நல்ல அடை மழையுடன் கூடிய இரவுப் பொழுது. ஸ்ரீநம்பிள்ளை, தனது சீடர்கள் சிலருடன் ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார். மழை மற்றும் எதிர்காற்றின் காரணமாக, படகினை படகோட்டியால் விரைவாக செலுத்த இயல முடியாது திணறினார். ஆற்றில் வெள்ளம் கூடும் அறிகுறி தென்பட, படகோட்டி, "படகின் பாரம் அதிகமாய் உள்ளது. யாரேனும் நீந்தத் தெரிந்தவர் நீரில் குதித்தால் மற்றவர்களை காப்பாற்ற இயலும்" என்றார்.
அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகோட்டியிடம், "எங்கள் ஆசாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள். நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்” என வாழ்த்தி விட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டார். படகும் கரை சேர்ந்தது. நம்பிள்ளைக்கோ, தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள், "ஸ்வாமி! நான் பத்திரமாக இருக்கிறேன். சிறு தீவு ஒன்றிருக்க, அதில் ஏறிக் கொண்டேன். தாங்கள் கவலைப்பட வேண்டாம்", என்றார். நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார். படகோட்டி படகை எடுத்துச் சென்று அவரைக் காப்பாற்றி அழைத்து வந்தார்.
கணப்புரத்தாள், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "ஸ்வாமி! தாங்கள் தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள். கணப்புரத்தாளுக்கு அனைத்தும் தனது ஆசார்யராய் தெரிந்தது. அவரது உலகமே ஆசார்யர் குறித்த எண்ணங்களால் நிறைந்திருந்தது. அதனால், அவரது உயிரைக் கூட பொருட்படுத்தாது, தனது ஆசார்யருக்காக உயிர் விட துணிந்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "கணப்புரத்தாளைப் போல் உயிரை துச்சமென எண்ணி, ஆசார்யரை உலகமாய் நினைத்தேனா? ஆசாரியாரின் உயிரைக் காப்பாற்ற நீரில் குதித்த கணப்புரத்தாளைப் போல நான் செய்தேனா? இல்லையே! ஆகவே நான் இங்கிருந்தால் என்ன! வெளியேறினால் என்ன! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment