||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
011. திருஆதனூர் (கும்பகோணம்)
பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 2781 - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்*
மடவார் மயக்கின் மயங்கார்*
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்*
நான் எனது என்னார் அமலன்*
ஆதனூர் எந்தை அடியார்*
- அமலன் – குற்றமற்றவனும்
- ஆதனூர் எந்தை – திருஆதனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமாகிய எம்பெருமானது
- அடியார் – பக்தர்கள்
- இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – பலவகைத் துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்து இருக்குமாறு முயற்சி செய்ய மாட்டார்கள்
- மடவார் மயக்கில் மயங்கார் –இள மகளிரது மோக வலையிற் சிக்கித்து இயங்க மாட்டார்கள்
- கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் சுவர்க்க லோக இன்பத்தையும் விரும்ப மாட்டார்கள்
- நான் எனது என்னார் – அகங்கார மமகாரச் சொற்களையும் சொல்ல மாட்டார்கள்
------------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரம் - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் – 2781 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)
மூழிக்களத்து விளக்கினை*
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை*
நென்னலை இன்றினை நாளையை*
நீர் மலை மேல் முன்னவனை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment