About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 13 March 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.59
 
விஷயா விநிவர் தந்தே 
நிராஹாரஸ்ய தே³ஹிந:|
ரஸ வர்ஜம் ரஸோ ப்யஸ்ய 
பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே||

  • விஷயா - புலனுகர்ச்சிப் பொருள்கள்  
  • விநிவர் தந்தே - விலகியிருக்க பயிற்சி கொண்டு 
  • நிராஹாரஸ்ய - மறுப்புக் கட்டுபாடுகளால் 
  • தே³ஹிநஹ - உடலை உடையவன் 
  • ரஸ வர்ஜம் - சுவையை விட்டொழித்து 
  • ரஸ - இன்பத்தைப் பற்றிய எண்ணம் 
  • அபி - இருப்பினும்  
  • அஸ்ய-அவனது 
  • பரம் - உயர்ந்தவற்றை 
  • த்³ருஷ்ட்வா - அனுபவிப்பதால் 
  • நிவர்த்ததே - முற்றுப் பெறுகின்றது

உடலை உடையவன் மறுப்பு கட்டுப்பாடுகளால், புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து விலகி இருக்க பயிற்சி கொண்டு சுவையை விட்டொழித்தாலும் அவனது இன்பத்தைப் பற்றிய எண்ணம் இருக்கும். இருப்பினும் பரம்பொருளைக் கண்டதும், உயர்ந்தவற்றை அனுபவிப்பதால் முற்றுப் பெறுகின்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment