About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 13 March 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.12

ஸி²வாய லோகஸ்ய ப⁴வாய பூ⁴தயே
ய உத்தம ஸ்²லோக பராயணா ஜநா:|
ஜீவந்தி நாத் மார்த² ம ஸௌ பராஸ்² ரயம்
முமோச நிர்வித்³ய குத: களேவரம்||

  • யே உத்தம ஸ்²லோக பராயணா - எவர்கள் பகவத் பக்தர்களோ
  • ஜநாஹ - அந்த ஜனங்கள்
  • லோகஸ்ய ஸி²வாய - உலகச் க்ஷேமத்தின் பொருட்டும்
  • ப⁴வாய பூ⁴தயே - நன்மையின் பொருட்டும், ஸ்மிருத்தியின் பொருட்டும்
  • ஜீவந்தி - வாழ்கின்றனர்
  • ஆத்மார்த²ம் ந - சுயநலத்துக்காக அல்ல
  • அஸௌ - அவ்வாறு இருக்க இந்த பரீக்ஷித்
  • நிர்வித்³ய - வெறுப்பை அடைந்து
  • பராஸ்² ரயம் - பிறருக்கு நன்மை செய்யத் தக்க
  • களேவரம் - தனது ஸரீரத்தை
  • குதஹ் முமோச -  ஏன் விட்டான்?

பகவானிடமே மனத்தைச் செலுத்திய பக்தர்கள், இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் பெற்று நலமுடன் வாழக் கருதியே தான் வாழ்கிறார்கள்.  அதாவது, பிறருக்காகவே வாழ்கிறார்கள். தன்னலம் கருதி வாழ்வதில்லை. அவ்வாறிருக்க, இவ்வரசன் பிறர் நலங்கருதிக் காக்கப்பட வேண்டிய தனது உடலை ஏன் வெறுப்புற்று நீக்கக் கருதினான்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment