About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 129

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 99

உத்தாரணோ து³ஷ் க்ருதிஹா
புண்யோ து³ஸ் ஸ்வப்ந நாஸந:|
வீரஹா ரக்ஷண: ஸந்தோ
ஜீவநம் பர்ய வஸ்த்தி²த:|| |

  • 923. உத்தாரணோ - கரை ஏற்றுபவர். உயர்த்துபவர். துன்பங்களைக் கடக்க உதவுபவர்.
  • 924. து³ஷ் க்ருதிஹா - தீமை செய்பவரைத் தொலைப்பவர். தீயவர்களைக் கொல்பவர். 
  • 925. புண்யோ - பாபங்களைப் போக்குபவர். புண்ணியவர். தூய்மையாக்குபவர்.
  • 926. து³ஸ் ஸ்வப்ந நாஸநஹ - கெட்ட கனவுகளைப் போக்குபவர்.
  • 927. வீரஹா - பாசங்களை (தளைகளை) விடுவிப்பவர். சம்சாரத்தின் பந்தங்களை அறுப்பவர்.
  • 928. ரக்ஷணஸ் - காப்பாற்றுபவர். இரட்சகர்.
  • 929. ஸந்தோ - வளரச் செய்பவர். நீதியுள்ளவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்.
  • 930. ஜீவநம் - உயிரைக் கொடுப்பவர்.
  • 931. பர்ய வஸ்த்தி²தஹ - சூழ நின்றவர். அனைத்தையும் வியாபித்திருப்பவர். எல்லாவற்றையும் ஊடுருவி இருக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment