||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
032. திருமணிமாடகோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 12 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 12 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1218 - 1227 – மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1850 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சீரே தரும் கதியில் சேருகைக்கு நான் உன்னை*
நேரே வணங்கினேன் நெஞ்சே நீ பாரில்*
அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்*
மணி மாடக் கோயில் வணங்கு*
- நெஞ்சே – மனமே!
- சீரே தரும் கதியில் சேருகைக்கு – சிறப்பையே தருகின்ற நல்ல கதியில் முத்தி உலகத்தில் சென்று சேர்வதற்காக
- நான் - உன்னை – எனது நன்மை தீமைகட்குக் காரணமாக இருக்கின்ற உன்னை
- நேரே வணங்கினேன் – நன்றாகத் தொழுகின்றேன்
- நீ - யாது செய்ய வேண்டுமெனின்
- பாரில் – இந்த நில உலகத்தில்
- அணி மாடம் கோயில் அரங்கனார் – அழகிய மாட மாளிகைகளை உடைய கோயில் என்று சொல்லப் படுகின்ற
- ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள ரங்கநாதனது
- நாங்கூர் மணிமாடக்கோயில் – திருநாங்கூரைச் சார்ந்த திருமணிமாடக் கோயில் என்னும் திவ்ய ஸ்தலத்தை
- வணங்கு – தொழுவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment