About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 3 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 96

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமரின் மனநிலை|

அப்பொழுது மாளிகையிளிருந்து அவர் மனைவி ஓடி வந்து, அவர் காலில் விழுந்து கண்ணீர் விட்டாள், அவள் மிகவும் அழகாக மாறி, மிகவும் உயர்ந்த உடைகள் அணிந்திருப்பதைப் பார்த்தார். அந்த வீடு இந்திரனுடைய மாளிகை போலச் செல்வச் செழிப்புடன் ஒளி வீசியது. மிக்க விலையுயர்ந்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 


ஆனால் சுதாமர் இந்தப் பொருள்களை கண்டு மயங்கவில்லை. கிருஷ்ணரோடு தாம் இருந்த நேரங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று கிடைத்த இந்தப் பொருள்களை விடக் கிருஷ்ணருடைய கமல பாதங்களைத் தியானிப்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய மனைவியும் மிகுந்த உத்தமி. அவளும் கிருஷ்ணரைத் தியானிப்பதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்று அறிந்து கொண்டாள். 


ஆகவே பகவத் அனுக்கிரகம் பெற்ற இந்தத் தம்பதிகள், திரண்ட செல்வத்திற்கு இடையே இருந்தாலும், இப்பொழுதும் கிருஷ்ணரையே தியானித்துக் கொண்டு, மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment