About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 3 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.40

இத³ம் பா⁴க³வதம் நாம 
புராணம் ப்³ரஹ்ம ஸம்மிதம்|
உத்தம ஸ்²லோக சரிதம் 
சகார ப⁴க³வாந் ருஷி:||

  • உத்தம ஸ்²லோக சரிதம் - புண்ணிய புருஷரது சரிதத்தை உடையதும்
  • ப்³ரஹ்ம ஸம்மிதம் - வேத துல்லியமானதும்
  • பா⁴க³வதம் நாம - ஸ்ரீமத் பாகவதம் என்கிற
  • இத³ம் புராணம் - இந்த புராணத்தை
  • ப⁴க³வாந் - பகவத் ஸ்வரூபரான
  • ருஷிஹி - வ்யாஸர் என்ற மஹரிஷி
  • சகார - செய்தார்

இந்த புராணம் 'ஸ்ரீமத் பாகவதம்' என்றழைக்கப்படுகிறது. இது வேதத்திற்குச் சமமானது. மேலான புகழ் வாய்ந்த பகவானுடைய திரு விளையாடல்களைத் தன்னுள் கொண்டது. இதை வியாச மகாமுனிவர் அருளிச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment