||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 76 - மாயவன் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பொன்ரை நாணொடு* மாணிக்கக் கிண்கிணி*
தன்னரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்தாட*
என்னரை மேல் நின்றிழிந்து* உங்கள் ஆயர் தம்*
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி*
மாயவனே! கொட்டாய் சப்பாணி|
- பொன் - ஸ்வர்ண மயமான
- அரை நாணொடு - அரை நாணோடு கூட
- மாணிக்கம் கிண்கிணி - உள்ளே மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
- தன் அரை - தனக்கு உரிய இடமாகிய இடுப்பிலே
- ஆட - அசைந்து ஒலிக்கவும்
- தனி - ஒப்பற்ற
- சுட்டி - அழகுடைய சுட்டியானது
- தாழ்ந்து - திருநெற்றியில் தொங்கி
- ஆட - அசையவும்
- என் அரை மேல் நின்று - என்னுடைய மடியிலிருந்து
- இழிந்து - இறங்கிப் போய்
- உங்கள் - உன்னுடைய பிதாவான
- ஆயர் - இடையர்கட்கெல்லாம் தலைவரான
- தம் மன் - நந்த கோபருடைய
- அரை மேல் - மடியிலிருந்து கொண்டு
- சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்
- மாயவனே - அற்புதமான செயல்களைப் புரிபவனே!
- சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்
இடுப்பில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட அரைநாண் கயிற்றோடும் , மாணிக்கங்கள் வைத்துக் கட்டிய சதங்கைகள் அழகான ஒலியெழுப்ப, நிகரற்ற நெற்றிச்சுட்டி கீழே தொங்கிய படி அசைய, என் மடியில் இதுவரை அமர்ந்திருந்த கண்ணனே எழுந்து போய் ஆயர்களின் தலைவனான உன் தந்தை நந்தகோபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு கைகளைக் கொட்டு. திருமாலே ! நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும் ! கண்ணனின் அழகை முழுமையாக அநுபவிப்பதின் பொருட்டே, தன் எதிரில் நந்தகோபர் அமர்ந்திருப்பதாக பாவித்து, கண்ணனை அவர் மடியில் அமரும்படி ஆழ்வார் முறையிட்டதாக வியாக்யானம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment