||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.31
யதா² நப⁴ ஸி மேகௌ⁴ கோ⁴
ரேணுர்வா பார்தி²வோ நிலே|
ஏவம் த்³ரஷ்டரி த்³ருஸ்² யத்வம்
ஆரோ பிதம பு³த்³தி⁴பி:⁴||
- யதா² நப⁴ ஸி - எவ்வாறு ஆகாயத்தில்
- மேகௌ⁴ கோ⁴ - மேகக் கூட்டங்கள் உள்ளனவாகவும்
- அநிலே பார்தி²வோ - காற்றில் பூமியில் உள்ள
- ரேணுர் - பொடி படலம் உள்ளதாகவும் எண்ணப்படுகிறதோ
- அபு³த்³தி⁴பிஹி⁴ - புத்தியற்றவர்களால்
- ஏவம் - இவ்வாறு
- த்³ரஷ்டரி - பரம ஆத்மாவின் இடத்தில்
- த்³ருஸ்² யத்வம் - ஸரீரமானது
- ஆரோ பிதம் - ஆரோபிக்கப்பட்டது
மேகங்கள், ஆகாயத்தில் தோன்றி ஆகாயத்தையே மறைத்து விடுகின்றன. பூமியிலுள்ள தூசிகள், காற்றினால் மேல் எழுப்பப்பட்டுக் காற்றையே வியாபித்துக் கொள்கின்றன. அது போல, பகவான் உலகமாக விளங்குகிறார் என்பதை உணராத மந்தமான புத்தி உடையவர், இந்தப் பிரஞ்சத்தையே பகவான் மேல் ஆரோபித்துக் கூறுகிறார்கள். உண்மையில், கண்ணால் காணப்படும் இவ்வுலகம், பகவானின் ஸ்தூல வடிவமான 'விராட் ஸ்வரூபம்'.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment