||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
021. திருநந்திபுர விண்ணகரம்
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 1438 - 1447 ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை நெஞ்சே*
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி*
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்*
நந்தி புர விண்ணகரம் நாடு*
- நெஞ்சே - மனமே!
- செயற்கு அரிய செய்வோமை - செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை
- செய்யாமல் - செய்யவொட்டாமல்
- வலியால் மயக்குவார் - தமது வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய
- ஐவர் - ஐந்து புலன்கள் உன்னை நோக்கி
- ‘நயம் கலவி சிந்தி - இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்
- விண் நகரம் புர - ஸ்வர்க்க லோகத்தை அரசாட்சி செய்வாய்
- என்பர் - என்று துர்ப்போதனை செய்வார்கள். நீ அந்தப் பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக் கொள்ளாமல்
- திரு செங் கண் மால் - அழகிய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருக்கண்களை உடைய திருமாலினது
- நந்திபுர விண்ணகரம் - திருநந்திபுரவிண்ணகரம் என்னும் ஸ்தலத்தை
- நாடு - எப்போதும் விரும்புவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment