About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 18 January 2024

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

021. திருநந்திபுர விண்ணகரம் 
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1438 - 1447 ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை நெஞ்சே*
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி*
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்*
நந்தி புர விண்ணகரம் நாடு*

  • நெஞ்சே - மனமே! 
  • செயற்கு அரிய செய்வோமை - செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை
  • செய்யாமல் - செய்யவொட்டாமல்
  • வலியால் மயக்குவார் - தமது வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய
  • ஐவர் - ஐந்து புலன்கள் உன்னை நோக்கி
  • ‘நயம் கலவி சிந்தி - இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்
  • விண் நகரம் புர - ஸ்வர்க்க லோகத்தை அரசாட்சி செய்வாய்
  • என்பர் - என்று துர்ப்போதனை செய்வார்கள். நீ அந்தப் பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக் கொள்ளாமல்
  • திரு செங் கண் மால் - அழகிய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருக்கண்களை டைய திருமாலினது
  • நந்திபுர விண்ணகரம் - திருநந்திபுரவிண்ணகரம் என்னும் ஸ்தலத்தை
  • நாடு - எப்போதும் விரும்புவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment