||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.33
யத்ரே மே ஸத³ ஸத்³ ரூபே
ப்ரதி ஷித்³தே⁴ ஸ்வஸம் விதா³|
அவித்³ய யாத்மநி க்ருதே
இதி தத்³ ப்³ரஹ்ம த³ர்ஸ²நம்||
- யத்ர - எப்பொழுது
- இமே - இந்த
- ஸத³ ஸத்³ ரூபே - ஸ்தூல ஸூக்ஷமமான உருவங்கள்
- அவித்³யயா - அறியாமையால்
- ஆத்மநி - ஆத்மாவில்
- க்ருதே - கற்பிக்கப்பட்டவை
- இதி - என்ற காரணத்தால்
- ஸ்வஸம் விதா³ - நன்கு ஏற்பட்ட ஸ்வரூப ஞானத்தால்
- ப்ரதி ஷித்³தே⁴ - தடுக்கப்பட்டதுகள் ஆகிறதோ
- தத்³ - அப்பொழுது ஜீவன்
- த³ர்ஸ²நம் - ஞான ஸ்வருபமான
- ப்³ரஹ்ம - பிரம்மாவாக ஆகிறான்
காரிய ரூபமாகிய ஸ்தூல ஸரீரம், காரண ரூபமாகிய லிங்க ஸரீரம், இவையிரண்டையும் பரமாத்மாவிடம் ஏற்றிக் கூறப்படுவதற்குக் காரணம், அவித்யை என்கிற அறியாமையே. உண்மையில் ஆத்மாவிற்கு இவ்விரண்டின் சம்பந்தமே இல்லை. இந்த உண்மை ஸ்வரூப ஞானத்தை, ஜீவன் உணர்ந்த அக்கணமே, அவன் ஞான ரூபியான பிரும்மமாகவே ஆகிறான். ஸ்வரூப ஞானம் என்பது ஜீவாத்மாவை ஸ்தூல ஸூக்ஷம தேங்களுடன் சம்பந்தப்படுத்தாமல் இருப்பது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment