||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
013. திருவிண்ணகரம்
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 47 பாசுரங்கள்
1. பேயாழ்வார் - 2 பாசுரங்கள்
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2342, 2343 – ஏழாம் திருமொழி - 1 & 2 பாசுரங்கள் (61, 62)
----------
2. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 3249 - 3259 - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி
----------
3. திருமங்கையாழ்வார் - 34 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – 31 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1448 - 1457 - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி – 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1458 - 1467 - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1468 - 1477 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1855 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2080 - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை*
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா*
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்*
பெரு விண்ணகர் ஆளும் பேறு*
- ஐயா - தலைவனே!
- திருவிண்ணகர் ஆளா - திருவிண்ணகரம் என்னும் திருப்பதிக்குத் தலைவனே!
- கையும் - எனது கைகளும்
- உரையும் - வாக்கும்
- கருத்தும் - எண்ணமும் ஆகிய திரிகரணங்களையும்
- உனக்கே அடிமை செய்யும் படி - உன்னையே நினைத்து சரண் அடையும் படி
- நீ திருத்தினாய் - நீ திருத்தமான வழியில் போகச் செய்தாய். ஆதலால் இனிமேல்
- பெரு விண் நகர் ஆளும் பேறு - பெருமை பெற்ற தேவலோகத்தை அரசாளும் செல்வத்தையும் தேவேந்திர பதவியையும்
- சிந்தையிலும் எண்ணேன் - ஒரு பொருட்டாக மனத்திலும் நினைக்க மாட்டேன் யான்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment