About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 September 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.35

ஏதாந்ந ஹந்து மிச்சா²மி 
க்⁴ நதோபி மது⁴ஸூத³ந|
அபி த்ரை லோக்ய ராஜ்யஸ்ய 
ஹேதோ: கிம் நு மஹீக்ருதே||

  • ஏதாந்ந - இவர்களெல்லாம் 
  • ந - என்றுமில்லை 
  • ஹந் தும் - கொல்ல 
  • இச்சா²மி - எனக்கு விருப்பம் 
  • க்⁴நத - கொல்லப்படுவதால் 
  • அபி - கூட 
  • மது⁴ஸூத³ந - மது என்ற அரக்கனைக் கொன்ற கிருஷ்ணரே 
  • அபி - ஆனாலும் கூட 
  • த்ரைலோக்ய - மூவுலகிற்குள் 
  • ராஜ்யஸ்ய - ஆட்சிக்காக 
  • ஹேதோஹ் - மாற்றத்தில் 
  • கிம் நு - சொல்வதற்கு என்ன இருக்கின்றது 
  • மஹீக்ருதே - நாட்டிற்காக 

மதுசூதனா! என் முன் நிற்கும் உறவுகள் எல்லாம் சுயமிழந்து என்னை கொல்லும் பட்சத்திலும் நான் ஏன் அவர்கனை கொல்ல விரும்ப வேண்டும் மதுவை அழித்த மதுசூதனரே! ஆட்சிக்காக மூவுலகமும் கிடைப்பதாயினும் நான் போர் புரிய விரும்பவில்லை கௌரவர்களை கொல்வதால் எவ்விதானந்தம் பெறப் போகிறேன் ஜனார்தனரே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment