About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 30 July 2024

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1278 – 1287 - நான்காம் பத்து - நான்காம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி*
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்*
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்*
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர்* 

  • என் நெஞ்சே – எனது மனமே!
  • சென்றது காலம் – நமக்கோ வாழ்நாள் பெரும்பாலும் கழிந்திட்டது
  • திரை – தோல் சுருக்கமும்
  • நரை – மயிர் வெளுத்தலும்
  • மூப்பு – கிழத்தனமும்
  • ஆன – தோன்றியுள்ளன
  • இனி – இனிமேல்
  • சாவு – மரணம்
  • என்றுகொல் – என்றைக்கோ?
  • அறியோம் – அறிந்திலோம். ஆதலால் நமது ஆயுள் முடிவதற்குள்
  • ஓர் விளவின் அம் பலத்தை – ஒரு விளாமரத்தில் உள்ள அழகிய பழத்தைக் கண்டு
  • உருத்து – கோபித்து
  • கன்றால் – அசுர ஆவேசம் கொண்ட இளங்கன்றைக் கொண்டு
  • எற்றி – வீசியெறிந்து
  • வீழ்த்தான் – விழச் செய்தவனான திருமாலினது
  • திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • சேர் – இடைவிடாது தியானிப்பாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment