||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 1278 – 1287 - நான்காம் பத்து - நான்காம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி*
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்*
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்*
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர்*
- என் நெஞ்சே – எனது மனமே!
- சென்றது காலம் – நமக்கோ வாழ்நாள் பெரும்பாலும் கழிந்திட்டது
- திரை – தோல் சுருக்கமும்
- நரை – மயிர் வெளுத்தலும்
- மூப்பு – கிழத்தனமும்
- ஆன – தோன்றியுள்ளன
- இனி – இனிமேல்
- சாவு – மரணம்
- என்றுகொல் – என்றைக்கோ?
- அறியோம் – அறிந்திலோம். ஆதலால் நமது ஆயுள் முடிவதற்குள்
- ஓர் விளவின் அம் பலத்தை – ஒரு விளாமரத்தில் உள்ள அழகிய பழத்தைக் கண்டு
- உருத்து – கோபித்து
- கன்றால் – அசுர ஆவேசம் கொண்ட இளங்கன்றைக் கொண்டு
- எற்றி – வீசியெறிந்து
- வீழ்த்தான் – விழச் செய்தவனான திருமாலினது
- திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
- சேர் – இடைவிடாது தியானிப்பாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment