About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 3 March 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.55
 
ஸ்ரீ ப⁴க³வாநுவாச||
ப்ரஜ ஹாதி யதா³ காமாந் 
ஸர்வாந் பார்த² மநோக³ தாந்|
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட: 
ஸ்தி²த ப்ரஜ்ஞஸ் ததோ³ச் யதே||

  • ஸ்ரீப⁴க³வாநுவாச - ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
  • ப்ரஜ ஹாதி - துறந்து 
  • யதா³ - எப்போது 
  • காமாந் - புலனுகர்ச்சிக்கான ஆசைகள் 
  • ஸர்வாந் - எல்லாவிதமான 
  • பார்த² - பிருதாவின் மைந்தனே 
  • மநோக³ தாந் - மன கற்பனையின் 
  • ஆத்மநி - ஆத்மாவின் தூய நிலையில் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ஆத்மநா - தூய்மையான மனதால் 
  • துஷ்டஹ - திருப்தியடைந்து 
  • ஸ்தி²த ப்ரஜ்ஞஸ் - ஸ்திர புத்தியுடையவனென்று 
  • ததா³ - அப்போது 
  • உச்யதே - சொல்லப்படுகிறான்

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: அர்ஜுநா! எப்போது ஒருவன் மன கற்பனையின் எல்லாவிதமான புலனுகர்ச்சிக்கான ஆசைகளைத் துறந்து, தூய்மையான மனதால், ஆத்மாவின் தூய நிலையில், திவ்யமாக நிலைபெறுகிறானோ, திருப்தியடைகிறானோ, அப்போது ஸ்திர புத்தியுடையவன் என்று சொல்லப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment