About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 23 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 93 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 93 - மணிவண்ணன் வாசுதேவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* 
அருவிகள் பகர்ந்தனைய* 
அக்கு வடம் இழிந்தேறித் தாழ* 
அணி அல்குல் புடை பெயர* 
மக்கள் உலகினிற் பெய்தறியா* 
மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* 
தளர் நடை நடவானோ!

  • கரு - கரு நிறமான
  • சிறு - சிறிய
  • பாறை - மலையினுடைய
  • பக்கம் மீது - பக்கத்திலே மேடு பள்ளமுள்ள இடங்களில் பாய்கிற
  • அருவிகள் - நீரருவிகள்
  • பகர்ந்து அனைய - ப்ரகாசிப்பதை போலே 
  • அக்கு வடம் - திரு வரையில் சாத்திய சங்கு மணி வடமானது
  • இழிந்து - தளர்ந்து
  • ஏறித் தாழ - உயர்ந்தும் தாழ்ந்தும் ப்ரகாசிக்கவும்
  • அணி - அழகிய
  • அல்குல் - இடுப்பு (நிதம்பம்)
  • புடை - பக்கங்களிலே
  • பெயர - அசையவும்
  • உலகினில் - உலகத்திலுள்ள
  • மக்கள் - மனிதர்கள்
  • பெய்து அறியா - பெற்றறியாத
  • மணி குழலி - அழகிய குழந்தை 
  • உருவி்ன் - வழவத்தை உடையவனும்
  • தக்க மா மணிவண்ணன் - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை உடையவனும்
  • வாசுதேவன் - வஸுதேவ புத்திரனுமான தேவ பிரான்
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணனின் கருநிற இடையில் அணிந்திருந்த சங்கு மணி வடமானது தொடையில் பிரகாசித்து அங்குமிங்குமாக அசைந்தது எப்படியிருந்தது என்றால், கரும் பாறையிலிருந்து பிரகாசமான நீரருவிகள் மேடு பள்ளங்களில் விழுந்து ஓடி வருவது போல் இருந்ததாம். கண்ணனின் திருமேனியழகு இதுவரை மானிடம் கண்டிராதபடி இருந்ததாம். உயர்ந்த நீல ரத்தினம் போன்ற நிறத்தை உடையவனும், வசு தேவரின் புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment