About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 23 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 105

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தேவர்களின் விஜயம்| 

ஒரு நாள் பிரம்மா தம் பிள்ளைகளையும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்கு வந்தார். ஒரு சாதாரண மனிதனைப் போல வாழும் கிருஷ்ணரைப் பார்க்க அவர்கள் வந்தார்கள். கிருஷ்ணரின் அழகைப் பார்த்து அவர்கள் மோகித்து நின்றார்கள். மாலைகளால் அவரை மறைத்து, மிகுந்த பக்தியுடன் அவரைப் பூஜித்தார்கள். மிகச் சிறந்த பிரார்த்தனையான புருஷ சூக்தத்தைச் சொல்லி, பிரம்மா அவரை வணங்கினார்.


பிரம்மா பிறகு தம் கைகளைக் கூப்பிக்கொண்டு, கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே! நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தாங்கள் துஷ்டர்களை அழிப்பதற்காகப் பூலோகம் வந்தீர்கள். தாங்கள் அதைச் செய்து முடித்து, இப்பொழுது எங்கும் தர்மத்தை நிலைநிறுத்திவிட்டீர்கள். விரைவில் பிறக்கப் போகும் கலியுகத்தில் மக்கள் தங்கள் லீலைகளான கதைகளைக் கேட்பதனாலேயே மோட்சம் அடைந்துவிடுவார்கள். எவன் தங்களைத் தியானிக்கிறானோ, அவனுடைய துக்கங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவன் சுபிட்சத்துடன் வாழ்வான். தங்கள் பூலோகத்துக்கு வந்த காரியம் முடிந்துவிட்டது. இனி உலகில் உங்களுக்கு ஒரு காரியமும் இல்லை, ஆகவே தயவுகூர்ந்து இந்த உடலை விடுத்து, வைகுண்டம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

கிருஷ்ணர் "பிரம்மாவே! தாங்கள் இப்பொழுது என்ன கூறினீர்களோ, அதற்கு நான் முன்னமே ஏற்பாடு செய்து விட்டேன். யாதவர்களின் அழிவுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அது முடிந்ததும் நான் வைகுண்டம் திரும்பிவிடுவேன்" என்றார். 

இதைக் கேட்ட பிரம்மாவும் மற்றவர்களும் அவரை நமஸ்கரித்து விட்டுத் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment