||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
081 துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே|
சிதம்பரம் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார். பகவர் அந்தணரோ சந்நியாசியோ அல்ல.
ஆனாலும் அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டு விட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்.
ஒரு முறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும் துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்.
அதற்கு பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன். ராமானுஜரைப் பின்பற்றுபவன். நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம். ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள். இவை இரண்டும் ஒன்று சேராது. ஆகவே தான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " நான் அந்த பகவரைப் போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் முற்று பெற்றது
No comments:
Post a Comment