||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 98
அக்ரூர: பேஸ²லோ த³க்ஷோ
த³க்ஷிண: க்ஷமிணாம் வர:|
வித்³வத் தமோ வீத ப⁴ய:
புண்ய ஸ்²ரவண கீர்த்தந:||
- 915. அக்ரூரஃ - குரூரம் இல்லாதவர். இரக்கம் உள்ளவர். கோபம் இல்லாதவர்.
- 916. பேஸ²லோ - அழகன். வசீகரமானவர். அன்பானவர்.
- 917. த³க்ஷோ - வேகம் உள்ளவர். ஒரு நொடியில் தோன்றுபவர். சக்தி வாய்ந்தவர். தீய கூறுகளை மிக விரைவாக அகற்றுபவர். பிரபஞ்சமாக வளர்கிறவர். படைத்தல், வாழ்வாதாரம் மற்றும் அழித்தல் ஆகியவற்றில் சாமர்த்தியமாக இருப்பவர். எதிரிகளை அழிப்பவர்.
- 918. தக்ஷிணஹ - இனிய இயல்புடையவர். இரக்கம் உள்ளவர். அபாரமும், வீரமும், செயலில் வேகமும் கொண்டவர்.
- 919. க்ஷமிணாம் வரஹ் - பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்களில் உயர்ந்தவர். பக்தர்களின் பாதுகாப்புச் சுமையைத் தாங்குவதில் முதன்மையானவர்.
- 920. வித்வத்ததமோ - செயல் அறிவில் சிறந்தவர். என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்களில் சிறந்தவர்.
- 921. வீதபயஃ - யானையின் பயத்தைப் போக்கியவர். பயம் இல்லாதவர். எல்லாவற்றிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டவர்.
- 922. புண்ய ச்ரவண கீர்த்தநஹ - கஜேந்திர மோக்ஷத்தின் சரிதத்தைக் கேட்பது மிகவும் புண்ணியம் என்று அருளியவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment