||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1748 - 1757 - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை*
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்*
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்*
கண்ணங்குடியான் கருத்து*
- எண்ணம் – எனது மனத்தை
- குடி ஆய் – தான் வாழும் இடமாகக் கொண்டு
- இருந்தான் நின்றான் கிடந்தான் – அந்நெஞ்சினில் வீற்றிருத்தலையும் நிற்றலையும் சயனித்தலையும் செய்பவனும்
- கண்ணங்குடியான் – திருக்கண்ணங்குடி என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமான்
- என்னை – அடியேனை
- கூறு புகழ் தன் அடிக்கே கூட்டுவனோ – வேதங்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற கீர்த்தியை உடைய
- தனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்வனோ? அன்றி
- இன்னம் – இனி மேலும்
- வேறுபட – அவ்வாறு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுவதற்கு மாறாக
- பல் பிறப்பில் – பலவகைப் பிறப்புக்களிலும்
- வீழ்த்துவனோ – தள்ளி வருத்துவனோ?
- கருத்து – அவனது திரு உள்ளக் கருத்தை
- தேறுகிலேன் – இன்னதென்று அறியேன் யான்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment