About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 112 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 112 - வெண்கலத்தால் செய்த இலையை அணிந்த வாமனன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடிக்*
கண் பல பெய்த* கருந்தழைக் காவின் கீழ்ப்*
பண் பல பாடிப்* பல்லாண்டு இசைப்ப* 
பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான்* 
வாமனன் என்னைப் புறம் புல்குவான்|

  • பண்டு - முன்னொரு காலத்திலே
  • வெண்கலம் - வெண்கலத்தால் செய்யப்பட்ட
  • பத்திரம் -  இலையை
  • கட்டி - அரையில் கட்டிக் கொண்டு
  • விளையாடி - விளையாடி, மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று
  • பல கண் - பல மயில் பீலிக் கண்களைக் கொண்டு 
  • செய்த - செய்யப்பட்ட பெரிய குடை போன்ற
  • கரு தழை - அடர்ந்த சோலை 
  • காவின் கீழ் - நிழலின் கீழேயிருந்து 
  • பல பண் பாடி - அநுகூலரானவர்கள் பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
  • பல்லாண்டு இசைப்ப - மங்களாசாஸநம் செய்ய
  • பல மண் கொண்டான் - ஸகலமான லோகங்களையும் அளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • வாமனன் - வாமனப் பெருமான் 
  • என்னை - என்னுடைய 
  • புறம் புல்குவான் -  முதுகை கட்டிக் கொள்வான்

வெண்கலத்தால் செய்த ஆடையைக் கட்டிக் கொண்டும் , மயில் தோகை போன்றவற்றால் செய்த பெரிய குடையின் கீழ் இருந்து, விளையாடிய படியும், மகாபலியிடம் மூவடி மண்ணை பெற்று, பிறகு தேவர்கள் புகழ் பாட சகல உலகங்களையும் தன் வசமாக்கிக் கொண்டவன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்! வாமனன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment