About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 42 பாசுரங்கள்

1. குலசேகராழ்வார் - 1 பாசுரம் 
பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 725 - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்


2. திருமங்கையாழ்வார் - 41 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 38 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1188 - 1197 - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1198 - 1207 - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1208 - 1217 - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1329 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1519 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1733, 1735 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி – 6 & 8 - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1850 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2014 - பதினொன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2027 - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் - 1 பாசுரம்

2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2063 - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)

-------------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் அழன்று
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து 

  • அழன்று – கோபித்து
  • பொரு – போர் செய்த
  • வாலி – வாலிக்கு
  • காலன் – யமனாய் நின்றவனும்
  • பரகாலன் போற்றும் திருவாலி மாயனை – திருமங்கை ஆழ்வாரால் பாடித் துதிக்கப் பெற்ற திருவாலி திருநகரி என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான ஆஸ்சரிய குண சேஷ்டிதங்களை உடைய எம்பெருமானை
  • சேர்ந்து – உபாயமாகப் பற்றியதனால் 
  • கழன்றுபோம் வாயு வினை கட்டாமல் – உடம்பிலிருந்து வெளிச் செல்லுகின்ற மூச்சுக் காற்றைப் (பிராணயாமத்தால்) அடக்காமலும்
  • உழன்று போய் தீர்த்தம் ஆடாமல் – வருந்திப் பல இடங்களிலும் சென்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்காமலும்
  • உய்ந்தேன் – நற்கதி பெற்றேன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment