||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 1628-1637 - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று
- தாம் - திருவரங்க நாதர் தாம்
- கிருஷ்ணாவதாரத்தில் வாணனை மருவி - பாணாசுரனைக் கிட்டி
- தோள் சாய்த்த - போரில் அவனது ஆயிரந் தோள்களையும் அறுத்துத் தள்ளிய
- நாள் - காலத்தில்
- சேமம் உறு - அந்தப் பாணாசுரனுக்குக் காவலாக அமைந்தவனான
- புலி ஊர் வல் தோல் உடையான் - புலியானது மேற்கொண்டுள்ள வலிய புலித் தோலை ஆடையாக உடைய சிவபெருமான்
- சிறுபுலியூர் எந்தைமேல் சென்று - சிறு புலியூர் என்னும் ஸ்ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எமது தந்தையாகிய அவ்வெம்பெருமானை எதிர்த்துச் சென்று,
- உடைந்தான் - தோற்றோடினான். ஆதலால்
- ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் - கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களை விரும்பி மேய்த்த ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக எவர் தாம் எதிர்த்து நிற்க வல்லவர்? எத்தேவராலும் எதிர்த்து நிற்றல் முடியாது
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment