About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. குஞ்சிதை: குந்தலைர் 
பாஜமானானனம் 
ரத்ன மௌளிம் லஸத் 
குண்ட³லம் க³ண்ட³யோ:|
ஹார கேயூரகம் 
கங்கணப் ப்ரோஜ் வலம் 
கிங்கிணீ மஞ்சுளம் 
ஸ்²யாமளம் தம் ப⁴ஜே||

  • குஞ்சிதைஹ் - வளைந்த, சுருண்ட 
  • குந்தலைர் - தலை முடியால், கூந்தலால்
  • பாஜமான ஆனனம் - பிரகாசிக்கும் முகத்தை உடையவரை
  • ரத்ன - ரத்தினங்கள் பதித்த
  • மௌளிம் - கிரீடத்தை அணிந்தவரை
  • லஸத் - ஒளிர்கின்ற, பிரகாசிக்கின்ற
  • குண்ட³லம் - காதணிகள்
  • க³ண்ட³யோ: - கன்னங்களில், பிரதிபலிப்பவரை 
  • ஹார - முத்து மாலைகள், நெக்லஸ்கள்
  • கேயூரகம் - தோள்வளைகள், அணிகலன் 
  • கங்கண - கைகளில் அணியும் காப்புகள், வளையல்கள்
  • ப்ரோஜ் வலம் - மிக அதிகமாக பிரகாசிப்பவரை
  • கிங்கிணீ - சதங்கைகளின், கால் மணிகளின்
  • மஞ்சுளம் - இனிய ஓசையை உடையவரை
  • ஸ்²யாமளம் - கருநீல நிறமுடையவரை, மேகவண்ணனை 
  • தம் - அந்த இறைவனை
  • பஜே - நான் வணங்குகிறேன், துதிக்கிறேன்

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற  குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள்  தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment