About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிருந்தாவனம், வத்சாசுரன் வதம்|

ஒரு நீண்ட பயணத்திற்கு பிறகு அவர்கள் பிருந்தாவனம் அடைந்தார்கள். அங்குள்ள அழகிய காட்சிகளையும், கோவர்த்தன மலையையும், யமுனை நதியில் மணல் மேடுகளையும் கண்டு கிருஷ்ணனும் பலராமனும் மகிழ்ச்சி கொண்டனர். இவர்களின் குறும்புச் சேட்டைகளைக் கண்டு, கோபர்களும் கோபிகளும் மகிழ்ச்சியுற்றார்கள். 


இவர்கள் இருவரும் சற்றுப் பெரியவர்களானதும் முதலில் கன்றுகளை மேய்க்கும் வேலை, பிறகு பசுக்களை மேய்க்கும் வேலை என்று இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வேலை கிடைத்ததைப் பற்றி இந்த சிறுவர்கள் மகிழ்ச்சியே அடைந்தார்கள். ஏனென்றால் இப்போது மற்றச் சிறுவர்களுடன் ஊருக்கு வெளியே சுற்றலாம் அல்லவா!


மற்ற யாதவச் சிறுவர்களுடன் சேர்ந்து அவர்கள் கன்றுகளை வெளியே அழைத்துச் சென்றார்கள். தங்களுடன் கூட நிறைய விளையாட்டுக் கருவிகளையும் எடுத்துச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் நிறைய மயில்கள் இருந்தன. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலில் வாசிப்பான். மயில்கள் அவனுடைய கீதத்துக்கு இசைய நடனமாடும். அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


கிருஷ்ணனும் பலராமனும் கூட ஆடுவார்கள். அவர்களுடைய ஆட்டமும் அவர்களுடைய தண்டைமநிகளின் ஓசையும் அவர்களுடைய நண்பர்களை மகிழ்விக்கும். சில வேளைகளில், அவர்கள் தங்கள் உடலை கம்பளியால் போர்த்துக் கொண்டு, பசுக்களும், காளை மாடுகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைப் போல் நடிப்பார்கள். சில சமயங்களில் காட்டு மிருங்கங்களை போல ஒலி எழுப்புவார்கள். இப்படியாக, சாதாரண சிறுவர்களைப் போல அவர்கள் விளையாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள்

ஒரு நாள் யமுனைக் கரையில் மற்றச் சிறுவர்களுடன், பலராமனும் கிருஷ்ணனும் கன்றுகள் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக, வத்சாசுரன் என்ற ஓர் அசுரன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் ஒரு கன்றின் உருவம் எடுத்துக் கொண்டு மற்றக் கன்றுகளோடு கலந்து விட்டான். ஆனால் அவனால் கிருஷ்ணனின் கண்களிலிருந்து தப்ப முடியவில்லை. கிருஷ்ணன் அவனைக் கண்டு கொண்டு பலராமனுக்கு அடையாளம் காட்டினான்.


பிறகு கிருஷ்ணன் இயல்பாக போவது போல அந்தக் கன்றுக் குட்டியின் பக்கம் சென்று அதன் பின்னங்கால்களைப் பற்றி, சுற்று சுற்று என்று சுற்றி கடைசியில் ஒரு பெரிய மரத்தின் மீது அதை ஓங்கி அடித்தான். அடிப்பட்ட அசுரன் இறந்து தன் சுய உருவில் கீழே விழுந்தான். அத்தனை பெரிய உடலைப் பார்க்க, கூட இருந்த சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அவனுடைய சாமர்தியத்திற்காக அவர்கள் கிருஷ்ணனைப் பாராட்டினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 19 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 19 - அருந்தெய்வம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

வாயுள் வையகம் கண்ட* மட நல்லார்* 
ஆயர் புத்திரனல்லன்* அருந் தெய்வம்*
பாய சீருடைப்* பண்புடைப் பாலகன்* 
மாயனென்று* மகிழ்ந்தனர் மாதரே|

  • வாயுள் - பிள்ளையின் வாயினுள்ளே
  • வையகம் - உலகங்களை
  • கண்ட - பார்த்த
  • மடநல்லார் - குணவதிகளான
  • ஆயர் புத்திரன் அல்லன் - இவன் இடைப் பிள்ளை அல்லன்
  • அருந்தெய்வம் - பெறுதற்கு அரிய தெய்வம்
  • பாய சீர் உடை - பரம்பின புகழை உடையனும்
  • பண்புடை - எளிமையான குணங்களை உடையனுமான 
  • பாலகன் - இந்த சிறுப் பிள்ளையானவன்
  • மாயன் - ஆச்சர்யமான எம்பெருமான்
  • என்று - என்று ஒருவர்க்கு ஒருவர் சொல்லிக் கொண்டு
  • மகிழ்ந்தனர் - ஆனந்தித்தார்கள்
  • மாதர் - ஸ்த்ரீகளானவர்கள்

குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங் காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, பேதை பெண்டிதர்களும் எல்லா உலகங்களையும் கண்டு களித்தனர். அவர்கள் வெகு ஆச்சர்யத்துடன் ஒருவருக்கொருவர், ''இவன் ஆயர் குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், பெரும் கீர்த்தியும், கல்யாண குணங்களும் உடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மகத்தான மாய சக்தி படைத்தவன்" என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.19 

ஸ கோ⁴ ஷோ தா⁴ர்தராஷ்ட் ராணாம்
ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்:|
நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ
துமுலோ வ்யநு நாத³யந்:||

  • ஸ: - அந்த
  • கோ⁴ஷோ - முழக்கம்
  • தா⁴ர்தராஷ்ட் ராணாம் - திருதராஷ்டிரருடைய பிள்ளைகளின்
  • ஹ்ருத³யாநி - இதயங்கள்
  • வ்யதா³ரயத்து - சிதறின
  • நப⁴ஸ்² - ஆகாயம்
  • ச - மேலும்
  • ப்ருதி²வீம் - பூமி
  • ச - மேலும்
  • ஏவ - நிச்சயமாக
  • துமுலோ - நடுங்கின
  • வ்யநு நாத³யந்நு – எதிரொலியால்

பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறிப் போயின.

இவ்வாறு ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனிடம் கூறுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.3

ய: ஸ்வாநு பா⁴வம் அகி²ல ஸ்ருதி ஸாரம் ஏகம்
அத்⁴யாத்ம தீ³பம் அதிதி தீர்ஷ தாந் தமோ அந்த⁴ம்।
ஸம்ஸாரிணாம் கருணயா ஆஹ புராண கு³ஹ்யம்
தம் வ்யாஸ ஸூநும் உபயாமி கு³ரும் முநீநாம்॥

  • ஸ் - எந்த ஸுகர் 
  • அந்த⁴ம் தமோ - மிகவும் இருட்டாகிய பிறவி கடலை 
  • அதிதி தீர்ஷ தாம் - கடக்க விரும்புகின்றவர்களுக்கு 
  • அத்⁴யாத்ம தீ³பம் - ஆத்ம ஞானத்தை நேரில் விளக்குகிறதும் 
  • ஸ்வாநு பா⁴வம் - அஸாதாரணமான பிரபாவத்தை உடையதும் 
  • அகி²ல ஸ்ருதி ஸாரம் - எல்லா வேதங்களுக்கும் ஸாரமானதும் 
  • ஏகம் - அத்வீதியமானதும் 
  • புராண கு³ஹ்யம் - புராணங்களில் மிகவும் ரகசியமானதுமான ஸ்ரீமத் பாகவதத்தை 
  • ஸம்ஸாரிணாம் - ஸம்சாரிகளுக்கு 
  • கருணயா - கருணை பெருக்கால் 
  • ஆஹ - சொன்னாரோ 
  • தம் - அப்படிப்பட்ட 
  • முநீநாம் - மகரிஷிகளுக்கெல்லாம் 
  • கு³ரும் - குருவான 
  • வ்யாஸ ஸூநும் - வ்யாசரின் புத்திரரான ஸ்ரீ ஸுகரை 
  • உபயாமி - சரணமாக அடைகிறேன் 

பிறவிக்கடல் என்னும் பேரிருளைக் கடக்க இச்சை கொண்டவர்களுக்கும், வீடு வாசல் என்கிற சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களிடம் கொண்ட கருணையால் ஒப்புயர்வற்ற பெருமையுடையதும், உண்மைப் பொருளான ஆன்ம ஞானத்தை நன்கு விளக்குவதும், நால்வேதப் பொருளானதும், புராணங்களில் மிகவும் ரகசியமானதுமான இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கூறிய முனிவர்களுக்கெல்லாம் குருவான வியாசரின் புதல்வரான ஸ்ரீசுக மகரிஷியைச் சரணமாக அடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்|| 

||ஸ்லோகம் - 4||

ஸர்வ: ஸ²ர்வ: ஸி²வ ஸ்தா²ணுர் 
பூ⁴தாதி³ர் நிதி⁴ ர் அவ்யய:|
ஸம்ப⁴வோ பா⁴வநோ ப⁴ர்த்தா 
ப்ரப⁴வ: ப்ரபு⁴ர் ஈஸ்²வர:||

  • 25. ஸர்வஸ்² - எல்லாமாயிருப்பவர். எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றுக்கும் காரணமானவர்.
  • 26. ஸ²ர்வஸ்² - அழிப்பவர், தீமையை விலக்குபவர். மங்களத்தை அளிப்பவர். ஜலப்பிரளயத்தின் போது எல்லாவற்றையும் தனக்குள் அடக்குகிறார்.
  • 27. ஸி²வ - தூய்மையானவர். களங்கமற்றவர். ஐஸ்வர்யத்தை அளிப்பவர். ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ ஆகிய மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்.
  • 28. ஸ்தா²ணுர் - அடியார்களுக்கு அருள் புரிவதில் நிலையாய் இருப்பவர். நிலையானவர். மாறாதவர்.
  • 29. பூ⁴தாதி³ர் - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவர், எல்லாவற்றையும் ஸரீரமாக உடையவர். எல்லா காரணங்களுக்கும் அவரே ஆதாரம்.
  • 30. நிதி⁴ ர் அவ்யயய - குறைவற்ற நிதியாய் இருப்பவர். நித்யமானவர்.
  • 31. ஸம்ப⁴வோ - தேவைப்படும் போதெல்லாம் தன் விருப்பப்படி அவதாரம் செய்பவர். தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறார்.
  • 32. பா⁴வநோ - வாழ்விப்பவர். செயல்களின் பலனைத் தருபவர்.
  • 33. ப⁴ர்த்தா - ஆதரிப்பவர், காப்பாற்றுபவர்.
  • 34. ப்ரப⁴வஃ - சிறப்பாகத் தோன்றுபவர், தன்னிச்சையால் பிறப்பவர். அவரது அவதாரங்கள் மகத்துவத்தின் செயல்கள்.
  • 35. ப்ரபு⁴ர் - ஸமர்த்தன். தனது மேன்மை சிறிதும் குன்றாதவர். மிகவும் சக்தி வாய்ந்தவர். எவருடைய உதவியும் இல்லாமல் தான் விரும்பியதைச் செய்யக் கூடியவர்.
  • 36. ஈஸ்²வரஹ - ஆளுகின்ற ஈசன். அவர் உச்ச ஈஸ்வரன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

031 குடை முதலானது ஆனேனோ அநந்தாழ்வானைப் போலே|

காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு, வினதை என இரு மனைவிகள். இவர்கள் காச்யபரிடம் புத்திரபாக்கியம் வேண்டும் என வேண்டினர். கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என வரம் கேட்டாள். வினதை தனக்கு அறிவுடை இரண்டு புத்திரர்களைக் கேட்டாள். அவளுக்கு அருணனும், கருடனும் பிறக்கின்றனர். சூரியனின் தேரோட்டியாகிறான் அருணன். கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர். அவர்களுள் மூத்தவன் ஆதிசேஷன். ஆதிசேஷன், தன் சகோதரர்கள் எப்போதும் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும், கருடனுடன் எப்போதும் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு மனவேதனையடைந்தார்.


பிரம்மாவிடம், "என் மனம் எப்போதும் தர்மசிந்தனையில் இருக்க வேண்டும்" என வேண்டினார். அதற்கு பிரம்மா, எப்போதும் அதன் மையப்புள்ளியிலிருந்து அசைந்த வண்ணம் இருக்கும் பூமியை அதன் அச்சிலிருந்து அசையாது உனது ஆயிரம் தலைகளால் பிடித்துக் கொள்' என்கிறார். இந்த பூவுலகை ஆதிசேஷன் தலையில் தாங்கி வருவதாக மகாபாரதம் கூறுகிறது. அப்படிப்பட்ட ஆதிசேஷனை எம்பெருமான் தன் படுக்கையாக்கிக் கொண்டார்.


அரவுகளுக்கு அரசனாக விளங்கும் ஆதிசேஷனை வைணவ நெறியில் அநந்தாழ்வான் என்று கூறுவர். பெருமாளைப் பிரிந்து செல்லாத ஆதிசேஷன் அவருக்குப் பலவிதத்திலும் பல வடிவங்களில் இருந்து தொண்டு செய்கிறான். 

அநந்தாழ்வான், ஆதிசேஷனின் பெயர். வடமொழியில் ஆதிசேஷன், தமிழில் ஆனந்தன். சேஷன் என்றால் தொண்டன் என்று பொருள். ஆதிசேஷன், பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திருஅவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர்.

பெருமாள் வெளியில் எழுந்தருளும் போது, ஆதிசேஷன் அவருக்குக் குடையாக இருந்து கைங்கர்யம் செய்கிறார். பெருமாள் ஓரிடத்தில் அமர்ந்தால், சேஷன் அவருக்குச் சிங்காதனமாக இருக்கிறார். திருமால் நிற்கும் பொழுது ஆதிசேஷன் பாதுகைகளாக விளங்குகிறார். திருப்பாற்கடலில் பெருமாள் எழுந்தருள ஆதிசேஷன், புணையாக (தெப்பமாகத்) திகழ்கிறார். ஆதிசேஷனிடம் நாகரத்தினங்கள் இருப்பதால் அவற்றின் ஒளியால் பெருமாள் சந்நதியில் மணிவிளக்காகவும் விளங்குகிறார். பெருமாளுக்குரிய பூம்பட்டாகவும் சாய்ந்து, பள்ளிக் கொண்டபோது பாற்கடலில் பாயாகவும், பரிவட்டமாகவும் அணைத்துக் கொள்ளும் போது தலையணையாகவும் ஆதிசேஷனே திகழ்கிறார். குடை, அரியணை, பாதுகை, புணை, விளக்கு, பூம்பட்டு, மெல்லணை ஆகிய அனைத்துமாகிக் கைங்கர்யம் செய்யும் அநந்தாழ்வானின் பெருமைகளுக்கு, நல்ல குணங்களுக்கு ஓர் எல்லையே இல்லை.  எல்லா காலங்களிலும் எல்லா தொண்டுகளையும் ஆதியிலிருந்து செய்வதால் ஆதிசேஷன் என்று பெயர் பெற்றார். அனந்தன் என்றால் எல்லையற்ற மகிமையை உடையவர் என்று பொருள்.

ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர். அவருக்கு சர்வ தந்திர ஸ்வதந்திரம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இது பிடிக்காத ஒருவர் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்க மூடி அவரிடம் கொடுத்து, "உள்ளே என்ன இருக்கிறது" எனக் கேட்டார்

கையில் குடத்தை வாங்கிய பட்டர், குடத்தினுள் பாம்பு அசைவதை உணர்ந்தார். "இது எம்பெருமானின் குடை" என்றார்.

"பட்டரே! உள்ளே இருப்பது பாம்பு. உங்கள் எண்ணம் தவறு" என்றார் அவர்.

அதற்கு பட்டர், "இந்த பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடியுள்ளார்' என பதிலுரைக்கிறார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த குடை முதலானது போல அநந்தாழ்வார் விளங்கினாரே. நான் அப்படியில்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கோகுலத்திலிருந்து பிருந்தாவனம்|

ஒரு தடவை நந்தகோபர் யாதவர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டினார். கிருஷ்ணனுடைய பாதுகாப்பைப் பற்றி பேசுவதற்காகத் தான் அந்தக் கூட்டம் கூடியது. நந்தகோபரும் மற்றப் பெரியவர்களும் கோகுலத்தில் நடக்கும் விபரீத செயல்களைக் கண்டு கவலை கொள்ளத் தொடங்கி இருந்தனர். அங்கு அடிக்கடி அரக்கர்கள் வருவதும், அவர்கள் மர்மமாகச் சாவதும் அவர்களுக்குக் கவலையை அளித்தன. மிகவும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்களில் முதியவர் உபனந்தர் என்பவர் பின்வரும் யோசனையைக் கூறினார்.


“என் அருமை நண்பர்களே! நாளுக்கு நாள் இங்கே ஆபத்துக்கள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. கடவுளின் அருளினால் தான் கிருஷ்ணன் இந்த ஆபத்துக்களில் இருந்து தப்பியுள்ளான். ஆபத்துக்கள் நீங்கி விட்டன என்று நிச்சியம் இல்லை. அதனால் நாம் வேறு இடத்திற்குக் குடி போவது நல்லது. கோவர்த்தன மலைக்கு அடியில் பிருந்தாவனம் என்று ஓர் அழகிய இடம் இருக்கிறது. மலையை சுற்றிய காடுகளில் நிறையப் புல் உள்ளது. அது நம் பசுக்களுக்கு உதுவும். நாம் அங்கே சென்று குடியேறினால் என்ன?" என்று கேட்டார்.

உபனந்தருக்கு அங்குள்ள எல்லோரும் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள் ஆதலால் நந்தகோபரும் மற்றக் கோபர்களும் அவருடைய யோசனையை வரவேற்றார்கள். தங்கள் வண்டிகளையும் பசுக்களையும் எடுத்துக் கொண்டு அடித்த நாளே பிருந்தாவனம் செல்வது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய உடைமைகளை எல்லாம் அவர்கள் வண்டிகளில் ஏற்றினார்கள். பெண்களும், வயதான ஆண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். இளைஞர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்பாக நடந்து வந்தார்கள். ரோகிணி, யசோதை, கிருஷ்ணன், பலராமன் ஆகிய நால்வரும் ஒரு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். கோபர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு சென்றார்கள். எல்லோரும் புத்தாடை அணிந்திருந்தனர். ஏதோ ஒரு விழாவுக்குச் செல்வது போல அவர்கள் காணப்பட்டார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||004. திருவெள்ளறை||
||ஸ்வேதகிரி – திருச்சி||
||நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 24

பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 71 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.8
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி* 
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்* 
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர* 
கற்றவர் தெற்றி வர பெற்ற எனக்கு அருளி* 
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்* 
சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்தமுதே!* 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை|

002. திவ்ய ப்ரபந்தம் - 192 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.1
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்* 
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய்| (2)

003. திவ்ய ப்ரபந்தம் - 193 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.2
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்| (2)

004. திவ்ய ப்ரபந்தம் - 194 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.3
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்| (2)

005. திவ்ய ப்ரபந்தம் - 195 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.4
கண்ணில் மணல் கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று* 
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* இவர் ஆர்? முறைப்படுகின்றார்* 
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்! 
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்| (2)

006. திவ்ய ப்ரபந்தம் - 196 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.5
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்* 
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்| (2)

007. திவ்ய ப்ரபந்தம் - 197 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.6
கஞ்சன் கறுக் கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்| (2)

008. திவ்ய ப்ரபந்தம் - 198 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.7
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதை செய்த* 
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளி கொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்| (2)

009. திவ்ய ப்ரபந்தம் - 199 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.8
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்| (2)

010. திவ்ய ப்ரபந்தம் - 200 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.9
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்* 
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்| (2)

011. திவ்ய ப்ரபந்தம் - 201 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.10
போது அமர் செல்வக் கொழுந்து* புணர் திருவெள்ளறையானை* 
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை* 
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே| (2)

திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1368 - பெரிய திருமொழி - 5.3.1
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* 
மூவெழுகால் கொன்ற தேவ!* 
நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே* 
மன்றில் மாம் பொழில் நுழை தந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திரு வெள்ளறை நின்றானே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1369 - பெரிய திருமொழி - 5.3.2
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி* முன் பரி முகமாய்* 
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின் வாய்*
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1370 - பெரிய திருமொழி - 5.3.3
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே*
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண் தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1371 - பெரிய திருமொழி - 5.3.4
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்-அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திரு வெள்ளறை நின்றானே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1372 - பெரிய திருமொழி - 5.3.5
மான வேல் ஒண் கண் மடவரல்* மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண் முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1373 - பெரிய திருமொழி - 5.3.6
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திரு வெள்ளறை நின்றானே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1374 - பெரிய திருமொழி - 5.3.7
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1375 - பெரிய திருமொழி - 5.3.8
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1376 - பெரிய திருமொழி - 5.3.9
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே* 
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* 
மா ஏறித் தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திரு வெள்ளறை நின்றானே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1377 - பெரிய திருமொழி - 5.3.10
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திரு வெள்ளறை அதன் மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலி கன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1851 - பெரிய திருமொழி - 10.1.4
துளக்கம் இல் சுடரை* அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப் போய்*
அளப்பு இல் ஆர் அமுதை* அமரர்க்கு அருள்
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே|

023. திவ்ய ப்ரபந்தம் - 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே* 
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

024. திவ்ய ப்ரபந்தம் - 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 18 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 18 - பிள்ளை வாயுள் உலகம் ஏழும் கண்ட யசோதை
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

கையும் காலும் நிமிர்த்துக்* கடார நீர்*
பைய ஆட்டிப்* பசுஞ் சிறு மஞ்சளால்*
ஐய நா வழித்தாளுக்கு* அங்காந்திட* 
வையமேழும் கண்டாள்* பிள்ளை வாயுளே|

  • கையும் - திருக்கைகளையும்
  • காலும் - திருவடிகளையும்
  • நிமிர்த்து - நீட்டி நிமிர்த்து
  • கடாரம் - கடாரத்தில் காய்ச்சின
  • நீர் - திருமஞ்சனத் தீர்த்தத்திலே
  • பைய - திருமேனிக்குப் பாங்காக
  • ஆட்டி - ஸ்நாநம் செய்வித்து
  • பசுஞ் சிறு மஞ்சளால் - குறுங்கண்ணான பசு மஞ்சளால்
  • ஐய - மெல்லிதான
  • நா - நாக்கை
  • வழித் தாளுக்கு - வழித்தவளான யசோதைக்காக
  • அங்காந்திட - கண்ணன் வாயைத் திறக்க, யசோதையானவன்
  • வையம் ஏழும் - உலகங்களையும் 
  • கண்டாள் - ஸாக்ஷத்கரித்தாள்
  • பிள்ளை - கண்ணபிரானுடைய
  • வாயுள் - வாயினுள்ளே

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது, உடலை நன்றாக உருவி விட்டு, கைகளை முன்னும் பின்னும் மடக்கி, கால்கள் வளைந்து விடாது இருப்பதற்காக, அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்த வண்ணம் வெந்நீரை ஊற்றுவர். குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அகன்ற, பெரிய பாத்திரத்தில் நீரூற்றி, அதை கை பொறுக்கும் அளவுக்கு இதமாக சூடேற்றி, கண்ணனின் கை கால்களை நன்கு உருவி விட்டு, அவை நன்கு உறுதி படுவதற்காக, இதமான வெந்நீரை ஊற்றி கால்களை நிமிர்த்தி விட்டாள் யசோதை. கிருமி நாசினியாகவும், மருத்துவக் குணம் உடையதுமான மஞ்சளை, நன்றாக மைப்போல் அரைத்து, அதை உடல் முழுவதும் பூசினாள். அதன் பிறகு, கண்ணனின் நாக்கிலுள்ள அசடினை எடுப்பதற்காக, ஒரு சிறிய மஞ்சளால் நாவினை வழிக்க வாயைத் திறக்கும் போது, அண்டகுலத்துக்கு அதிபதியானவனின் வாயினுள் ஏழு உலகத்தையும் கண்டாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.18 

த்³ருபதோ³ த்³ரௌபதே³ யாஸ்² ச
ஸர்வஸ² ப்ருதி² வீபதே|
ஸௌப⁴த்³ ரஸ்²ச மஹாபா³ஹு:
ஸ²ங்கா²ந் த³த்⁴மு: ப்ருத² க்ப்ருத²க்||

  • த்³ருபதோ³ - பாஞ்சால மன்னன் துருபதன் 
  • த்³ரௌபதே³ யாஸ்² - திரௌபதியின் புதல்வர்கள் 
  • ச - மேலும் 
  • ஸர்வஸ² - எல்லோரும் 
  • ப்ருதி² வீபதே - பூமிக்குத் தலைவனே! (ஸஞ்ஜயன் திருதராட்டிரனிடம்) 
  • ஸௌப⁴த்³ ரஸ்² - அபிமன்யு (சுபத்ரையின் மகன்) 
  • ச - மேலும் 
  • மஹா பா³ஹுஹு - பெருந்தோளுடையவன் 
  • ஸ²ங்கா²ந் - சங்குகள் 
  • த³த்⁴முஃ - முழங்கினர் 
  • ப்ருத²க் ப்ருத²க்கு - ஒவ்வொருவரும் தனியாக

துருபத மன்னனும், திரௌபதியின் பிள்ளைகளும், சுபத்திரையின் மகனான தோள் வலிமை பொருந்திய அபிமன்யுவும் பிரகுவும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஊதினர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.2

ஸூத உவாச!
யம் ப்ரவ் ரஜந்தம் அநுபேதம் அபேத க்ருத்யம்
த்³வை பாயநோ விரஹ காதர ஆஜு ஹாவ।
புத்ரேதி தந்மய தயா தரவோபி⁴ நேது³ஸ்
தம் ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் முநி மாந தோஸ்மி॥

  • ஸூத உவாச! - ஸூதர் சொல்கிறார்
  • முநிம் - மஹரிஷியாக உள்ளவரும் 
  • அநுபேதம் - ஏகாகியாயும் 
  • அபேத க்ருத்யம் - எவ்வித வியாபாரமும் இல்லாதவரும் 
  • ப்ரவ் ரஜந்தம் - எல்லாவற்றையும் துறந்து செல்பவராயும் உள்ள 
  • யம் - எந்த சுகப் பிரம்மத்தை 
  • த்³வை பாயநோ - வியாஸ பகவான் 
  • விரஹ காதர - பிரிவாற்றாமையால் பயந்தவராய் 
  • புத்ரா இதி - ஹே குழந்தாய்! என்று 
  • ஆஜு ஹாவ - கூப்பிட்டாரோ 
  • தரவோ - மரங்களும் 
  • தந்மய தயா - சுக ரூபத்தை உடையவைகளாய் 
  • அபி⁴ நேது³ஸ் - எதிரொலி செய்தனவோ 
  • தம் - அப்படிப்பட்ட 
  • ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் - எல்லா உயிர்களிலும் ஸம்பந்தப்பட்ட ஸூகரை 
  • ஆநதோ அஸ்மி - வழங்கியவனாய் இருக்கிறேன்

ஸூதர் கூறுகிறார்: ஒருவரோடும் சேராது தனித்து இருப்பவரும், எவ்விதச் செயலும் அற்றவராக (கர்மங்களை ஒழித்தவராக) விளங்குபவருமான ஸ்ரீசுகர், பற்றனைத்தையும் துறந்து செல்லும் போது, அவரது பிரிவாற்றாமைக்கு அஞ்சிய வியாச பகவான் குழந்தாய் என்று உரத்த குரலில் அழைத்தார். அப்போது மரங்களும் பிரும்மமயமாக ஆகிவிட்டதால், சுகமயமாகி எதிரொலித்தன. அவ்வாறு அசையும்-அசையாப் பொருள் அனைத்திலும் உயிருக்குயிராய் பரவி நிற்கும் முனிவரான சுகாசார்யாரை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||ஸ்லோகம் - 3||

யோகோ³ யோக³ விதா³ம் நேதா 
ப்ரதா⁴ந புருஷேஸ்²வர:|
நாரஸிம்ஹ வபு: ஸ்ரீ மாந் 
கேஸ²வ: புருஷோத்தம:||

  • 18. யோகோ³ - மோட்ச சாயுஜ்யத்துக்குத் தானே உபாயமாக இருப்பவர். யோகாவின் மூலம் அடையக் கூடியவர். யோகத்தால் இறைவனை அடைய முடியும்.
  • 19. யோக³ விதா³ம் நேதா - தன்னை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவர். யோகத்தில் நிலைநிறுத்தப்பட்ட அனைவருக்கும் எஜமானர்.
  • 20. ப்ரதா⁴ந புருஷேஸ்² வரஹ - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவர். பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் பிரதான புருஷேஸ்வரர்.
  • 21. நாரஸிம்ஹ வபுஸ் - பக்தனுடைய பயத்தைப் போக்க, மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் எடுப்பவர்.
  • 22. ஸ்ரீ மாந் - அழகன். அழகினால் பக்தர்களை மகிழச் செய்து உலகத்தைக் காப்பவர். மார்பில் லட்சுமி தேவியுடன் சேர்ந்து மிகவும் அழகாக இருக்கிறார்.
  • 23. கேஸ²வஃ - உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய, கருங்குழலை உடையவர். கேஸி² என்ற அரக்கனைக் கொன்றவர்.
  • 24. புருஷோத்தமஹ - புருஷர்களுள் மிகவும் சிறந்தவர். முக்தியை அடைய நாம் எப்போதும் தியானிக்க வேண்டியவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

030 கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே|

திருமங்கை ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர், சோழ மன்னனுக்கு படைத் தலைவனாக இருந்தார். ஒரு முறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழ தேசத்தின் "திருமங்கை" (சிறுவாலி) நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.


இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாகப் பெண் கேட்டுச் செல்கிறார். ஆனால், குமுதவல்லியோ, வைஷ்ணவரைத் தவிர வேறொருவரை மணக்க மாட்டேன் என்கிறாள். அதனால் பரகாலர், பஞ்சசமஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார்.

குமுதவல்லி, அவர் 1008 வைஷ்ணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறாள். அதையும் அவர் நிறைவேற்றுகிறார். தினமும் ஆயிரம் திருமாலின் அடியார்களுக்கு அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வரலானார். 

குமுதவல்லி சொன்னதற்காக, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பெருமாள் கோயில்கள் திருப்பணிகளுக்கும் தன் செல்வத்தை செலவிடுகிறார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். அதனால், தன்னை குறுநிலமன்னனாக ஆக்கிய சோழ அரசருக்கு அவரால் கப்பம் செலுத்த முடியவில்லை. அதனால் கைதாகிறார்.

அன்றிரவு காஞ்சி வரதராஜப் பெருமாள் அவர் கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார். சோழ மன்னன் அனுமதியுடன், சிறையில் இருந்து வருபவர், புதையலைக் கண்டெடுக்கிறார்.

அதில் ஒருபகுதியை கப்பம் கட்டி விட்டதால், மீதத்தை பழையபடி செலவிடுகிறார். மீண்டும் வறுமை. பரகாலராகிய திருமங்கை ஆழ்வார் இப்போது புது முடிவுக்கு வருகிறார். களவு புரிந்து கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண வேண்டும், கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே அது. 

நான்கு பேருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறார். செல்வந்தர்கள் தாக்கப் படுகின்றனர். பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கு செலவிடப்படுகிறது.

ஒருநாள் பெருமாள், அந்தண வேடமிட்டு லட்சுமியுடன் ஒரு திருமண கோஷ்டி போல தன் பரிவாரங்களுடன் கிளம்பினார். அவர்களைப் பார்த்ததும் திருமங்கை ஆழ்வார் "நில்" என்றார் "நகைகள் எல்லாவற்றையும் கழட்டுங்கள்" என்றார்

பெருமாளும் பயந்தவர் போல நகைகள் அனைத்தையும் கழட்டினார். லட்சுமியும் கழட்டினார். கடைசியில், பிராட்டியின் மெட்டி மட்டுமே இருந்தது. அதைக்கூட விட்டு வைக்க மனமில்லாத திருமங்கை ஆழ்வார், அதையும் கழட்டுங்கள் என்றார். ஆனால் அதை அவரால் கழட்ட முடியவில்லை. உடனே ஆழ்வார் மண்டியிட்டு கழட்டப் பார்த்தார். இயலவில்லை. பின்னர், தன் பற்களால் கடித்து கழற்றினார். 

எம்பெருமான் சிரித்துக் கொண்டே "நீர் நமது கலியனோ" (பலம் மிக்கவன்) என்றார். கழற்றிய ஆபரணங்களை ஒரு பட்டுத் துணியில் மூட்டையாய்க் கட்டி தூக்க முயன்றார் ஆழ்வார். தூக்க முடியாமல் கனத்தது.

பெருமாளை நோக்கி, “எதும் மந்திரங்கள் போட்டாயா? நீ என்ன மாயங்கள் அறிந்தவனா? மந்திரத்தை கூறும், சொல்லாவிடில் இந்த வாளுக்கு இறையாவாய்” என்று தம் கையில் வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்க, தனக்கு சேவை செய்ய, தன் அடியார்களுக்கு சேவை செய்ய திருடவும் துணிந்த திருமங்கையை அழைத்து சென்று அருகில் இருந்த ஆல மரத்தடியில் அவரை அமர்த்தி, மந்திரங்களுக்கு அரசனான திருமந்திரத்தை ஓதினார். எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார்.

ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க எம்பெருமான் தன் திருஉருவில் ஸ்ரீமன் நாராயணனாக தாயாருடன் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. தனது பெரிய திருமொழியின் முதல் பாசுரத்தை (வாடினேன் வாடி வருந்தினேன்) பாடினார். திருமங்கை ஆழ்வார் கதறினார். "கண்டு கொண்டேன் நாராயணா என்ற நாமம்" என கூத்தாடினார்.

பின்னர் தன் அனுபவங்களை ஆசு, சித்திரம், மதுரம், விஸ்தாரம் என நான்குவகைக் கவிகளாகப் பாடினார். நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடினார்.

சிக்க்ஷை, வியாகரணம், கல்பம், நிருத்தம், ஜோதிசம், சந்தஸ் என ஆறு பிரிவுகளின் உட்பிரிவை பெரிய திருமொழி, திருக்குறுதாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார்.

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் அதிக பாசுரங்களை பாடி எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்தார்.

மெட்டியை கல்லால் கடிக்கப் போக; எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆசானாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கை ஆழ்வார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " திருமங்கை ஆழ்வார் போல் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி விரலை கடித்தாவது அவரின் அருள் பெரும் பாக்கியத்தை பெற்றேனோ? அந்த பாக்கியத்தைப் பெறாத நான் இங்கிருந்தால் என்ன போனால் என்ன என்கிறாள்!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்