About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 55

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ
முகுந்தோ³ மித விக்ரம:|
அம்போ⁴ நிதி⁴ர நந்தாத்மா
மஹோ த³தி⁴ ஸ²யோந் தக:||

  • 515. ஜீவோ - வாழ வைப்பவர். வாழ்க்கையைத் தாங்குபவர். உடலின் வடிவத்தில் உயிரை ஆதரிக்கிறார்.
  • 516. விநயிதா - காப்பவர். இரட்சகர்.
  • 517. ஸாக்ஷீ - பார்த்துக் கொண்டிருப்பவர். நம்மைப் பாதுகாக்க ஒரு பார்வையாளராக இருக்கிறார். சாக்ஷியாக அவர் நம் அனைவருக்குள்ளும் வசிக்கிறார். அவர் ஒரு அந்தர்யாமி.
  • 518. முகுந்த³ - முக்தி அளிப்பவர்.
  • 519. அமித விக்ரமஹ - அளவற்ற ஆற்றலை உடையவர். வரம்பற்ற சக்தியும் வலிமையும் உடையவர்.
  • 520. அம்போ⁴ நிதி⁴ர் - நீருக்குள் ஆமை வடிவில் உலகை ஆதரித்தார். (கூர்ம அவதாரம்)
  • 521. அநந்தாத்மா - அநந்தன் என்கிற பாம்பு வடிவமாக இருந்து, அதன் ஆத்மாவாக உலகங்களைத் தலை மேல் தாங்குபவர். அநந்தாவின் உள் ஆன்மா. 
  • 522. மஹோ த³தி⁴ஸ்² - பரந்து காணப்படும் மகா சமுத்திரத்தின் மேல் உறங்கிக் கொண்டிருப்பவர்.
  • 523. அந்தகஹ - அனைத்து உயிரினங்களின் முடிவையும் கொண்டு வருபவர். எல்லாவற்றையும் விழுங்கி, பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க பொருத்தமான நேரத்திற்காகக் காத்திருக்கும் யோக நித்ரா வடிவத்தை ஏற்றுக் கொள்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.22 

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய 
நவாநி க்³ருஹ்ணாதி நரோ பராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ||

  • வாஸாம்ஸி - உடைகள் 
  • ஜீர்ணாநி - பழைய நைந்த 
  • யதா² - அதுபோல 
  • விஹாய - புறக்கணித்து 
  • நவாநி - புதிய ஆடைகள் 
  • க்³ருஹ்ணாதி - ஏற்பது 
  • நரோ - மனிதன் 
  • அபராணி - மற்றவை 
  • ததா² - அது போலவே 
  • ஸ²ரீராணி - உடல்கள் 
  • விஹாய - விட்டு 
  • ஜீர்ணாநி - பழைய, பலனற்ற 
  • அந்யாநி - வேறு 
  • ஸம்யாதி - ஏற்றுக் கொள்கிறான் 
  • நவாநி - புதியவற்றை 
  • தே³ஹீ - உடல் பெற்றவன்

எப்படி மனிதன் பழைய நைந்த உடைகளை புறக்கணித்து, புதிய ஆடைகளை ஏற்றுக் கொள்கிறானோ! அது போலவே, ஆத்மாவும்,  பழைய பலனற்ற உடல்களை விட்டு புதியவற்றை ஏற்றுக் கொள்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.20

அவதாரே ஷோட³ ஸ²மே 
பஸ்²யந் ப்³ரஹ்மத்³ ருஹோ ந்ருபாந்|
த்ரி: ஸப்தக் ரு த்வ: குபிதோ 
நி: க்ஷத்ராம கரோந் மஹீம்||

  • ஷோட³ ஸ²மே - பதினாறாவது 
  • அவதாரே - அவதாரத்தில்
  • ந்ரு பாந் - அரசர்களை
  • ப்³ரஹ்மத்³ ருஹோ - ப்ரும்மத் த்வேஷிகளாக
  • பஸ்²யந் - பார்த்தவராய்
  • குபிதோ - கோபத்தை அடைந்து
  • த்ரிஸ் ஸப்தக் ருத்வஹ் - இருபத்தி ஓரு தடவை
  • மஹீம் - பூமியை
  • நிஸ் க்ஷத்ராம - க்ஷத்ரியர்கள் இல்லாததாக
  • கரோந் - செய்தார்

அரசர்கள், அந்தணர்களிடம் த்வேஷம் பாராட்டுவதைக் கண்டு சினம் கொண்டு, பதினாறாவதாக 'பரசுராம அவதாரம்' செய்து, இருபத்தொரு தடவை அரசர்களைக் கொன்று, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.20

ஜ்யேஷ்ட²ம் ஸ்²ரேஷ்ட² கு³ணைர் யுக்தம் 
ப்ரியம் த³ஸ²ரத²: ஸுதம்|
ப்ரக்ருதீ நாம் ஹிதைர் யுக்தம் 
ப்ரக்ருதி ப்ரிய காம்யயா||

  • ஸ்²ரேஷ்ட² கு³ணைர் - சிறந்த குணங்களோடு 
  • யுக்தம் - கூடிய
  • ப்ரக்ருதீ நாம் - ஜனங்களுடைய
  • ஹிதைர் - நன்மைகளுடன்
  • யுக்தம் - கூடிய
  • ப்ரியம் - அன்புள்ள
  • ஜ்யேஷ்ட²ம் ஸுதம் - மூத்த குமாரன்
  • த³ஸ²ரத²ஸ் - தசரதர்
  • ப்ரக்ருதி - ஜனங்களுக்கு 
  • காம்யயா - நன்மை செய்ய வேண்டும்
  • ப்ரிய - என்ற விருப்பத்தால்

பூமியின் தலைவனான தசரதன், அன்புடனும், மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கிலும், இத்தகைய உன்னதக் குணங்களுடன், உண்மையான ஆற்றலையும், மக்களின் நன்மையில் விருப்பத்தையும் கொண்ட தன் அன்புக்குரிய மூத்த மகன் ஸ்ரீராமரை,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 66 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 66 - திரிவிக்கிரமனே! யானை, காளைகளை அடக்கியவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!* 
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்* 
தம்மனை ஆனவனே! தரணி தலம் முழுதும்* 
தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்* 
விரவிய வேலை தனுள் வென்று வருமவனே!* 
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • நம்முடை - எங்களுக்கு
  • நாயகனே - நாதனானவனே!
  • நால் மறையின் - நான்கு வேதங்களுக்கும்
  • பொருளே - பொருளாய் இருப்பவனே!
  • நாபியுள் - திருநாபியில் 
  • நல் கமலம் - நல்ல தாமரை மலரில் பிறந்த
  • நான்முகனுக்கு - பிரம்மாவுக்கு
  • ஒரு கால் - அவன் வேதத்தைப் பறி கொடுத்துத் திகைத்த காலத்தில்
  • தம்மனை ஆனவனே - தாய் போலே பரிந்து அருளினவனே!
  • தரணி தலம் முழுதும் - பூலோகம் முழுவதும்
  • தாரகையின் உலகும் - நக்ஷத்திர லோகம் முழுவதும்
  • அதன்புறமும் - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
  • தடவி - திருவடிகளால் ஸ்பர்சித்து
  • விம்ம - நெடுவாய் (பெரியவனாய்)
  • வளர்ந்தவனே - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
  • வேழமும் - குவலயாபீடம் என்ற யானையும் 
  • ஏழ்விடையும் - ஏழு ரிஷபங்களும்
  • விரவிய - உன்னை ஹிம்ஸிப்பதற்காக தாக்க
  • வேலைதனுள் - வந்த சமயத்திலே
  • வென்று - அவற்றை ஜெயித்து 
  • வருமவனே - வந்தவனே!
  • அம்ம - ஸ்வாமியானவனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

எங்கள் ஆயர் குலத்தரசே! எங்களுக்குத் தலைவனே, முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப் பொருளாய் இருப்பவனே!, உன்னுடைய திருநாபிக் கமலத்தில் இருந்து உதித்த பிரம்மா, மது கைடபர்களிடம் வேதங்களை இழந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருந்த போது, வேதங்களை மீட்டு பிரம்மனிடமே ஒப்படைத்து பிரமனுக்கு தாய் போல் அருளினவனே! மண்ணை ஓர் அடியாலும், விண்ணுலகையும், நக்ஷத்திர லோகங்களையும் இரண்டாம் அடியாலும் அளந்து அதற்கும் அப்பாற்ப் பட்டு த்ரிவிக்ரமனாய் வளர்ந்த வாமனனே!, மதம் கொண்ட குவலயாபீடம் என்கிற யானையையும், கூரிய கொம்புகளைக் கொண்ட ஏழு காளைகளையும் போட்டியில் எதிர் கொண்டு, அவற்றை எல்லாம் எளிதில் அடக்கி, என்றும் வெற்றி வாகை சூடுபவனே! என் செல்லமே, ஆயர்கள் குலத்தில் உதித்த, போர் செய்ய வல்ல காளையைப் போன்ற வலிமை      உடையவனே! பசுக்களின் ரக்ஷகனே! என் கூற்றுக்கு செவி சாய்ப்பாயாக! எனக்காக ஒரு முறை, ஒரே ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக! என்கிறாள் யசோதை!  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 5

திருமங்கையாழ்வார்
101. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பெரிய திருமொழி - 8.9.8
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்* 
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|

102. திவ்ய ப்ரபந்தம் - 1736 - பெரிய திருமொழி - 8.9.9
கண் ஆர் கண்ணபுரம்* கடிகை கடி கமழும்*
தண் ஆர் தாமரை சூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெம் சுடரை*
கண் ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்று கொலோ?

103. திவ்ய ப்ரபந்தம் - 1737 - பெரிய திருமொழி - 8.9.10
செரு நீர வேல் வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கரு நீர் முகில் வண்ணன்* கண்ணபுரத்தானை*
இரு நீர் இன் தமிழ்* இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்*
வரும் நீர் வையம் உய்ய* இவை பாடி ஆடுமினே|

104. திவ்ய ப்ரபந்தம் - 1738 - பெரிய திருமொழி - 8.10.1
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை* மண நோக்கம் உண்டானே! * 
உன்னை உகந்து உகந்து* உன் தனக்கே தொண்டு ஆனேற்கு* 
என் செய்கின்றாய்? சொல்லு * நால்வேதம் கண்டானே* 
கண்ணபுரத்து உறை அம்மானே|

105. திவ்ய ப்ரபந்தம் - 1739 - பெரிய திருமொழி - 8.10.2
பெரு நீரும் விண்ணும்* மலையும் உலகு ஏழும்*
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வரு தேவர் மற்று உளர் என்று* என் மனத்து இறையும் கருதேன் நான் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

106. திவ்ய ப்ரபந்தம் - 1740 - பெரிய திருமொழி - 8.10.3
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று* இருப்பாரோடு
உற்றிலேன்* உற்றதும்* உன் அடியார்க்கு அடிமை*
மற்று எல்லாம் பேசிலும்* நின் திரு எட்டு எழுத்தும் கற்று* 
நான் கண்ணபுரத்து உறை அம்மானே|

107. திவ்ய ப்ரபந்தம் - 1741 - பெரிய திருமொழி - 8.10.4
பெண் ஆனாள்* பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன் நான் *
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி* மது மலராள் கண்ணாளா* 
கண்ணபுரத்து உறை அம்மானே|

108. திவ்ய ப்ரபந்தம் - 1742 - பெரிய திருமொழி - 8.10.5
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன் நான்*
மற்று ஆரும் பற்று இலேன்* ஆதலால் நின் அடைந்தேன்*
உற்றான் என்று உள்ளத்து வைத்து* அருள் செய் கண்டாய் *
கற்றார் சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே|

109. திவ்ய ப்ரபந்தம் - 1743 - பெரிய திருமொழி - 8.10.6
ஏத்தி உன் சேவடி* எண்ணி இருப்பாரை*
பார்த்திருந்து அங்கு* நமன் தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமை நீ காத்தி போல் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

110. திவ்ய ப்ரபந்தம் - 1744 - பெரிய திருமொழி - 8.10.7
வெள்ளை நீர் வெள்ளத்து* அணைந்த அரவு அணை மேல்*
துள்ளு நீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே உன் தமர்க்கு என்றும்* நமன் தமர் கள்ளர் போல் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

111. திவ்ய ப்ரபந்தம் - 1745 - பெரிய திருமொழி - 8.10.8
மாண் ஆகி* வையம் அளந்ததுவும் வாள் அவுணன்*
பூண் ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்து இருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும் காணேன் நான் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

112. திவ்ய ப்ரபந்தம் - 1746 - பெரிய திருமொழி - 8.10.9
நாட்டினாய் என்னை* உனக்கு முன் தொண்டு ஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் * 
கண்ணபுரத்து உறை அம்மானே|

113. திவ்ய ப்ரபந்தம் - 1747 - பெரிய திருமொழி - 8.10.10
கண்ட சீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்ட சீர்த் தொண்டன்* கலியன் ஒலி மாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம் போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே|

114. திவ்ய ப்ரபந்தம் - 2067 - திருநெடுந்தாண்டகம் - 2.6 (16)
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்*
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்*
வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்*
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே|

115. திவ்ய ப்ரபந்தம் - 2078 - திருநெடுந்தாண்டகம் - 3.7 (27)
செங் கால மட நாராய் இன்றே சென்று*
திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு*
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்*
இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை*
நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்*
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* 
தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்*
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே|

116. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.4 (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*

117. திவ்ய ப்ரபந்தம் - 2759 - பெரிய திருமடல் - 5.7 (47)
பேதையேன் கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்*
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே*
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்*
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்*
மன்னும் மலர் மங்கை மைந்தன்* கணபுரத்துப்*

118. திவ்ய ப்ரபந்தம் – 2782 - பெரிய திருமடல் - 7.10 (70)
மன்னும் மறை நான்கும் ஆனானை* 
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை* 
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை* 
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*

நம்மாழ்வார்
119. திவ்ய ப்ரபந்தம் - 3772 - திருவாய்மொழி - 9.10.1
மாலை நண்ணித்* தொழுது எழுமினோ வினை கெட* 
காலை மாலை* கமல மலர் இட்டு நீர்*
வேலை மோதும் மதிள் சூழ்* திருக் கண்ணபுரத்து*
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்* அடி இணைகளே|

120. திவ்ய ப்ரபந்தம் - 3773 - திருவாய்மொழி - 9.10.2
கள் அவிழும் மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
நள்ளி சேரும் வயல் சூழ்* கிடங்கின் புடை*
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ்* திருக் கண்ணபுரம்*
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே|

121. திவ்ய ப்ரபந்தம் - 3774 - திருவாய்மொழி - 9.10.3
தொண்டர் நும் தம்* துயர் போக நீர் ஏகமாய்*
விண்டு வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வண்டு பாடும் பொழில் சூழ்* திருக்கண்ணபுரத்து* 
அண்ட வாணன்* அமரர் பெருமானையே|

122. திவ்ய ப்ரபந்தம் - 3775 - திருவாய்மொழி - 9.10.4
மானை நோக்கி* மடப் பின்னை தன் கேள்வனை*
தேனை வாடா மலர் இட்டு* நீர் இறைஞ்சுமின்*
வானை உந்தும் மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
தான் நயந்த பெருமான்* சரண் ஆகுமே|

123. திவ்ய ப்ரபந்தம் - 3776 - திருவாய்மொழி - 9.10.5
சரணம் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
மரணம் ஆனால்* வைகுந்தம் கொடுக்கும் பிரான்*
அரண் அமைந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து* 
தரணியாளன்* தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே|

124. திவ்ய ப்ரபந்தம் - 3777 - திருவாய்மொழி - 9.10.6
அன்பன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
செம் பொன் ஆகத்து* அவுணன் உடல் கீண்டவன்*
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து 
அன்பன்* நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே|

125. திவ்ய ப்ரபந்தம் - 3778 - திருவாய்மொழி - 9.10.7
மெய்யன் ஆகும்* விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்*
பொய்யன் ஆகும்* புறமே தொழுவார்க்கு எல்லாம்*
செய்யில் வாளை உகளும்* திருக்கண்ணபுரத்து*
ஐயன்* ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே|

126. திவ்ய ப்ரபந்தம் - 3779 - திருவாய்மொழி - 9.10.8
அணியன் ஆகும்* தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்*
பிணியும் சாரா* பிறவி கெடுத்து ஆளும்*
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணரம்*
பணிமின்* நாளும் பரமேட்டி தன் பாதமே|

127. திவ்ய ப்ரபந்தம் - 3780 - திருவாய்மொழி - 9.10.9
பாதம் நாளும்* பணியத் தணியும் பிணி*
ஏதம் சாரா* எனக்கேல் இனி என்குறை?*
வேத நாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து*
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே|

128. திவ்ய ப்ரபந்தம் - 3781 - திருவாய்மொழி - 9.10.10
இல்லை அல்லல்* எனக்கேல் இனி என் குறை?*
அல்லி மாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்* திருக்கண்ணபுரம்*
சொல்ல* நாளும் துயர் பாடு சாராவே|

129. திவ்ய ப்ரபந்தம் - 3782 - திருவாய்மொழி - 9.10.11
பாடு சாரா* வினை பற்று அற வேண்டுவீர்*
மாடம் நீடு* குருகூர்ச் சடகோபன்* சொல்
பாடலான தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்*
பாடி ஆடி* பணிமின் அவன் தாள்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 76

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணருக்கும் ஜாம்பவானுக்கும் இடைப்பட்ட போர்| 

தமது தம்பியின் வரவுக்காக சத்ராஜித் வெகு ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்தார். அவர் தம் மணியைத் திரும்பப் பெற மிகவும் ஆவலாய் இருந்தார். இரவு எப்பொழுது கழியும் என்று வேதனையோடு இருந்தார். பொழுது விடிந்தது, ஆனால் பிரசேனன் வரவில்லை. சத்ராஜித்தின் கவலை மேலும் அதிகரித்தது. சில ஆட்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தார். நடுக்காட்டில் தம் தம்பியின் உடலைக் கண்டார். அதைக் கண்டதும் வருத்தமும் வேதனையும் கோபமும் கொண்ட சத்ராஜித், "என் தம்பியை யாரோ கொன்று விட்டார்கள், ஸ்யமந்தக மணிக்காகக் கிருஷ்ணர் அவனைக் கொன்று இருந்தாலும் வியப்படைவதற்கு இல்லை" என்றான். 


இந்த அவதூறு மெல்ல உருவமெடுத்து ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவி, இறுதியில் கிருஷ்ணரின் காதை எட்டியது. தாம் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். தம் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, பிரசேனன் எப்படி இறந்தான் என்று கண்டுப்பிடிக்கக் கிளம்பினர். 

பிரசேனன் கொல்லப்பட்ட இடத்தைக் கூர்ந்து கவனித்ததில் ஒரு சிங்கத்தின் காலடிச் சுவடுகள் தெரிந்தது. அந்தச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றதில் ஒரு சிங்கத்தின் உயிரற்ற உடல் தென் பட்டது. அங்கிருந்து ஒரு கரடியின் காலடிகள் எங்கோ செல்வது தெரிந்தது. அதைப் பின்பற்றிச் சென்றதில் ஒரு பெரிய இருண்ட குகை தென்பட்டது. 

தம் நண்பர்கள் அதற்குள் நுழையப் பயப்படுவார்கள் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும். அதனால் அவர்களை வெளியே இருக்கச் சொல்லி விட்டுத் தாம் மட்டும் அந்த இருண்ட குகைக்குள் நுழைந்தார். அந்தக் கரடியும்,  மணியும் அங்கு இருக்கிறதா என்று அவர் புலன் விசாரணை செய்ய விரும்பினர். அங்கு ஒரு கரடிக் குட்டி விளையாடிக் கொண்டு இருந்தது. அதன் கையில் அந்த ஸ்யமந்தக மணி இருந்தது. மணியை எடுப்பதற்காகக் கிருஷ்ணர் அந்தக் குட்டியின் அருகில் சென்றார். யாரோ மனிதன் வருவதைக் கண்டு தாய்க் கரடி, பயந்துக் கத்தியது. இதை கேட்டு, ஜாம்பவான் மிக்க கோபத்தோடு அங்கே வந்தார். தன்னுடைய தெய்வமான ஸ்ரீராமபிரான் தான் இப்பொழுது கிருஷ்ணர் வடிவத்தில் வந்திருக்கிறார் என்பதை அறியாத ஜாம்பவான், வந்தவர் யாரோ சாதாரணமான மனிதர் என்று நினைத்தார். தம்மோடு சண்டை போடும் படி கிருஷ்ணருக்குச் சவால் விடுத்தார்.    

கிருஷ்ணருக்கும் ஜம்பவானுக்கும் மிகவும் கடுமையான சண்டை இருபத்தி எட்டு நாட்கள் நடந்தன. முதலில் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கினர், பிறகு கற்களால் தாக்கினார்கள். பிறகு மரங்களால் தாக்கினார்கள், அடுத்து முஷ்டிகளால் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். அதனால் ஏற்பட்ட சப்தம் இடி முழக்கம் போல ஒலித்தது. 

ஜாம்பவான் தான் அன்று உலகிலேயே மிகப் பெரிய பலசாலி. ஆனாலும், கிருஷ்ணருடைய குத்துகளால் அவருடைய எல்லா அவயவங்களும் தளர்ந்தன. தம்முடன் போர் செய்பவர் பகவானாகத் தான் இருக்க வேண்டும் என்று ஜாம்பவான் உணர ஆரம்பித்தார். தம்முடைய தெய்வமான ஸ்ரீராமர் தாம் இப்பொழுது கிருஷ்ணராக வந்துள்ளார் என்று அறிந்தார். உடனே கிருஷ்ணரின் கால்களில் விழுந்து, "பகவானே, தாங்கள் யார் என்பதை இப்பொழுது நான் தெரிந்து கொண்டு விட்டேன். தாங்கள் விஷ்ணுவின் அவதாரம், நான் வணங்கும் ராமச்சந்திர பிரபுவே தான் தாங்கள்" என்று பூரித்தார்.

கிருஷ்ணர் புன்முறுவல் பூத்தார். தாமரைப் போன்ற தம் உள்ளங்கைகளால் ஜாம்பவனின் உடல் முழுவதும் தடவினார். உடனே ஜாம்பவானின் களைப்பு எல்லாம் பறந்தது. கிருஷ்ணர் தாமுடைய கம்பீரமான குரலில், "கரடியரசே, இந்த ஸ்யமந்தக மணி காரணமாக எனக்கு ஏற்பட்ட பழியைப் போக்கிக் கொள்ளுவதற்காகத் தான் நான் இங்கு வந்தேன்" என்று சொன்னார். ஜாம்பவான் நிலைமையைப் புரிந்து கொண்டார். தம் தெய்வத்திற்குத் தம்மால் உதவ முடிகிறதே என்று மகிழ்ச்சி அடைந்தார். அவர் ஸ்யமந்தக மணியை கிருஷ்ணருக்குக் கொடுத்ததோடு, தம் பெண் ஜாம்பவதியையும் அவருக்குக் கொடுத்தார். கிருஷ்ணர் ஜாம்பவதியை மணந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

கலியை அடக்கிய வீரன்

ஸ்கந்தம் 01

சௌனகர் கேட்டார். "அந்த நீசன் கலிபுருஷனோ? பசுவைக் காலால் உதைப்பவன் வேறு யாராய் இருக்கும்?"

மேலும் அவர் ஒன்று கேட்கிறார்.


"இந்நிகழ்வு கண்ணனோடு தொடர்புடையதானால் விவரித்துக் கூறுங்கள். இல்லையெனில் வேண்டாம். பகவானைப் பற்றியோ, அவனது பக்தர்களைப் பற்றியோ கூறாமல் வேறு விஷயங்களைச் சொல்வது வெட்டிப் பேச்சாகும். அதனால் யாது பயன்?"

எவ்வளவு அருமையான கேள்வி. மேலும் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் சொல்கிறார்.

"வரும் யுகத்தில் மனிதர்கள் அல்ப ஆயுள் கொண்டவர்கள். காலத்தை வீணே கழித்து மரணமடைவார்கள். ஆனால் முக்திக்கும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் பொருட்டு நைமிஷாரண்யத்தில் ஸத்ர வேள்வி நடக்கிறது. நேரில் வருகை தரும்படி யம தர்ம ராஜனை அழைத்து விட்டார்கள். அவரும் வந்து விட்டார். உள்ளே வந்து விட்டால் யாகம் முடியும் வரை அவர் திரும்பிப் போக இயலாது. அவரது வேலையும் நடக்காது. அதனால் அவர் இங்கிருக்கும் வரை ஒருவருக்கும் மரணம் என்பதே இல்லை. மனிதர்கள் அனைவருக்கும் இங்கு நீங்கள் சொல்லும் கதையும் முழுமையாகப் போய் சேர வேண்டும். எனவே, கலியுகத்திற்கு ஏற்ற பகவத் கதைகளையே கூறுங்கள்." என்றார்.

ஸாதுக்கள் நம் மீது காட்டும் கருணையையும், உதார குணத்தையும் சொல்ல வார்த்தைகள் சிறைப்படுகின்றன.

ஸூதர் சொல்லலானார்.

"பரீக்ஷித் திக்விஜயத்திற்குக் கிளம்பினான். செல்லுமிடம் தோறும், கண்ணனின் பெருமை, முன்னோரின் புகழ், அவன் காப்பாற்றப்பட்ட சரித்ரம், எல்லாவற்றையும் அவனுக்கு செவி குளிரச் சொன்ன ஸாதுக்களுக்கு ஏராளமான வெகுமதிகளை வழங்கினான். கண்ணன் அவனது குடும்பத்தில் செய்த லீலைகளையும் உதவிகளையும் பூமண்டலம் முழுவதும் எங்கு சென்றாலும் யாராவது அவனுக்குச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டு கேட்டுக் கண்ணன் மீது அபாரிமிதமான பக்தியை வளர்த்துக் கொண்டான். சிலருக்கு தன் முன்னோர்கள் உதவி செய்திருந்தனர். சிலர் கண்ணனும் அர்ஜுனனும் இணைந்து தங்கள் தேசத்திற்கு வந்து செய்தவற்றை நினைவு கூர்ந்தனர். 

இப்படியாக அவன் பூலோத்தில் ஸஞ்சாரம் செய்கையில் ஒரு நாள் ஒற்றைக் காலுடன் ஒரு எருது பசுவின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அவ்விரண்டும் அழுது கொண்டிருந்தன. எருதின் ஒரே ஒரு காலையும் விகாரமான ஒருவன் கத்தியைக் கொண்டு வெட்டத் தயாராய் இருந்தான். 

மூவரையும் உற்றுப் பார்த்தான் பரீக்ஷித். முன்னோர்கள் காட்டிய நெறியில் தவறாது ஒழுகுவதால் பசுவும், காளையும் பேசியது அவனுக்குப் புரிந்தது."

எருது சொன்னது, "பூமிதேவியே, உன் பாரத்தைத் தீர்க்கவே கண்ணன் அவதாரம் செய்தார். அவரது லீலைகளை நினைத்தாலே முக்தி கிட்டுமே. விட்டுப் போய் விட்டார் என்று வருந்துகிறாயா? தேவர்களும் உன்னைப் பூஜிப்பார்களே. உன் சௌபாக்யம் உன்னை விட்டுப் போனதா?  இளைத்து இருக்கிறாயே!"

பூமிதேவி சொன்னாள், "தர்ம தேவரே, தாங்கள் அறியாததா? பகவானின் கருணையால், தவம், ஒழுக்கம், தயை, ஸத்யம் என்ற நான்கு கால்களுடன் விளங்கினீர்கள். இப்போது சத்யம் என்ற ஒரு பாதம் தான் மீதமிருக்கிறது. எப்படியோ அதை வைத்துக் கொண்டு ஜீவிக்கிறீர். அதையும் கலி புருஷன் ஊனமாக்கப் பார்க்கிறான். புருஷோத்தமனின் பாதம் என் மீது படும் போதெல்லாம் நான் புளகாங்கிதம் அடைந்தேனே. அவர் பிரிவை யார் தான் பொறுப்பார்?" 

ஸரஸ்வதி நதிக்கரையில் நடந்த இவ்வுரையாடலைக் கேட்டான் பரீக்ஷித்.

அம்மனிதனைப் பார்த்து, "நான் காத்து நிற்கும் இவ்வுலகில் பலம் அற்றவர்களைத் துன்புறுத்தும் நீ யார்? அரசன் போலிருந்தாலும், நீசனாய் இருக்கிறாய். கண்ணனும் அர்ஜுனனும் சென்ற பின் கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் கொடுமை செய்கிறாய்!

பூமி தேவியைப் பார்த்து சொன்னான். துன்பமடைந்தவர்களைக் காப்பதே அரசனின் முதல் கடைமை. எந்த ஆட்சியில் தீயோர்களைக் கண்டு பயம் கொள்கிறார்களோ அந்த அரசனது புகழ், ஆயுள், செல்வம், உயர்ந்த கதி எல்லாம் அழிகின்றன. உங்களைத் துன்புறுத்துபவன் யார்?"

தர்ம தேவதை சொன்னது, "துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைச் சாஸ்திரம் பலவாறு கூறுகிறது. சிலர் விதி என்றும், சிலர் கர்மா என்றும், சிலர் இயற்கை, சிலரோ தெய்வம் தான் என்றும் சொல்கிறார்கள்."

பரீக்ஷித், அதைக் கேட்டு, "நீங்கள் பூமா தேவியா? இவரே தர்ம தேவதையாய் இருக்க வேண்டும். இம்மனிதன் கலி புருஷனோ?" என்று வினவ, பூமிதேவி அமைதி காத்தாள்.

"அதர்மத்தைச் செய்தவனுக்கு எந்த தண்டனை உண்டோ அதே நரகம் காட்டிக் கொடுப்பவனுக்கும் உண்டு என்று சொல்லாமல் இருக்கிறீர்களா நீங்கள் கவலைப் பட வேண்டாம். நான் இவனை தண்டிக்கிறேன்" என்று கூறி மிகுந்த கோபம் கொண்டு வாளை உருவி, அந்த மனிதனை வெட்டத் துணிந்தான். பயந்து போன அம்மனிதனோ பரீக்ஷித்தின் காலைப் பிடித்துக் கொண்டு, " அபயம் அபயம்" என்று அலறினான்.

அபயம் என்பவனைக் கொல்வது தகாதென்று எண்ணி, வாளை உறையில் போட்டான் பரீக்ஷித்.

"சரி நான் உன்னைக் கொல்லவில்லை. அபயம் வேண்டுமெனில் என் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட இடத்தில் நீ இருக்கலாகாது. உடனே வெளியேறு."

கலி சொன்னான். "சக்ரவர்த்தியே, இப்புவி முழுதிற்கும் நீங்களே அரசன். நான் எங்கு இருப்பதென்று நீங்களே கூறுங்கள். தங்கள் கட்டளைக்குக் கீழ்ப் படிகிறேன்." 

சற்று யோசித்த பரீக்ஷித், "சூதாட்டம், மது, அறநெறியற்ற, கற்பில்லாத மகளிர், ப்ராணிவதம் ஆகிய நான்கும் இருக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்."

"அரசே, எனக்கு இவை போதாது, இன்னும் சில இடங்கள் வேண்டும்"

"சரி, தங்கம் இருக்கும் இடத்தைக் கொள்." என்றான்", மற்றும் பொய், மதம், பொருந்தாக் காமம், பகை ஆகிய இடங்களும் கலிக்குக் கொடுக்கப்பட்டன.

மேற்சொன்ன இடங்களில் கலி வசிக்கலானான்.

மீண்டும் தயை, ஸத்யம், ஒழுக்கம், தவம் ஆகியவை செழித்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 84

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 54

ஸோம போம்ருதப: ஸோம:
புருஜித் புரு ஸத்தம:|
விநயோ ஜய: ஸத்ய ஸந்தோ⁴
தா³ஸா²ர் ஹ: ஸாத் வதாம் பதி:||

  • 505. ஸோமப - அவர் யக்ஞங்களின் ஸோம ரச பானம் அருந்துபவர். 
  • 506. அம்ருதபஸ் - அமுதம் அல்லது அமிருதத்தை அருந்துபவர்.
  • 507. ஸோமஃ - அமுதிலும் இனியவர். அவர் பக்தர்களுக்கு அமிர்தம் போல இனிமையாக இருக்கிறார். 
  • 508. புருஜித் - யாவரையும் வெற்றி கொண்டு வசப்படுத்துபவர். தனது வீரம் மற்றும் வசீகரம் இரண்டிலும் அனைவரையும் வென்றவர். 
  • 509. புரு ஸத்தமஹ - சான்றோர்களிடம் நிலைத்திருப்பவர். தனது பிரபஞ்ச வடிவத்துடன் அனைவரிலும் சிறந்தவர்.
  • 510. விநயோ - தண்டித்துத் திருத்துபவர். அனைத்தையும் அடக்கி வெற்றி பெறுகிறார்.
  • 511. ஜயஸ் - தன்னை அண்டியவர்களிடம் தோற்று, அவர்களுக்கு வெற்றியை அளிப்பவர்.
  • 512. ஸத்ய ஸந்தோ⁴ - வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி உடையவர். அவருடைய வார்த்தைக்கு ஒரு போதும் பின் வாங்குவதில்லை.
  • 513. தா³ஸா²ர் ஹஸ் - அடியவர்கள் இவனிடம் தமது ஆத்மாவைச் சமர்ப்பிப்பதற்கு உரியவர். நமது காணிக்கைகளுக்கும் வரங்களுக்கும் மிகவும் தகுதியானவர்.
  • 514. ஸாத் வதாம் பதிஹி - ஸாத்வீக குணமுடைய பாகவதர்களுக்குத் தலைவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.21 

வேதா³ விநாஸி² நம் நித்யம் 
ய ஏந மஜமவ் யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² 
கம் கா⁴த யதி ஹந்தி கம்||

  • வேத³ - அறிந்த 
  • ஆவிநாஸி²நம் - அழிவற்றவன் 
  • நித்யம் - நித்தியமானவன் 
  • ய - யாரொருவன் 
  • ஏநம் - இந்த ஆத்மா
  • அஜம் - பிறப்பற்றவன் 
  • அவ்யயம்- மாற்றமில்லாதவன் 
  • கத²ம் - எப்படி 
  • ஸ - அந்த 
  • புருஷஃ - நபர் 
  • பார்த² - பார்த்தனே (அர்ஜுநனே) 
  • கம் - யாரை 
  • கா⁴தயதி - துன்புறுத்தக் காரணம் 
  • ஹந்தி - கொலை புரிவது 
  • கம் - யாரை

அர்ஜுநா! இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை, இறந்ததுமில்லை, உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது இறப்பற்றது நிலையானது, பழமையானது. ஆதலால் உடம்பு கொல்லப்பட்டாலும் ஆன்மா கொல்லப் படுவதில்லை. இதனை உணர்ந்தவன் கொல்வது எதனை? கொல்விப்பது எதனால்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.19

பஞ்ச த³ஸ²ம் வாம நகம் 
க்ருத்வா கா³த³த்⁴ வரம் ப³லே:|
பத³த் ரயம் யாச மாந: 
ப்ரத் யாதி³த் ஸுஸ்த்ரி விஷ்டபம்||

  • பஞ்ச த³ஸ²ம் - பதிநைந்தாவதாக
  • வாம நகம் - வாமந அவதாரத்தை
  • க்ருத்வா - எடுத்தவராய்
  • த்ரி விஷ்டபம் - ஸ்வர்க்கத்தையும்
  • ப்ரத் யாதி³த் ஸுஸ் - பலியிடத்திலிருந்து ஸ்வீகரிக்க இச்சை உள்ளவராய்
  • பத³த் ரயம் - மூன்று அடிகளை
  • யாச மாநஹ - யாசித்துக் கொண்டு
  • ப³லேஹே அத்⁴ வரம் - மகாபலியின் யாக சாலையை
  • அகா³த்³ - அடைந்தார்

பதினைந்தாவதாக, 'வாமந அவதாரம்' செய்து, சுவர்க்கத்தை மகாபலியிடம் இருந்து திரும்பப் பெற விரும்பி, மூன்றடி மண் அவனிடம் யாசகம் கேட்பதற்காக, மகாபலயின் யாகசாலைக்குக் சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.19

த⁴நதே³ந ஸமஸ் த்யாகே³
ஸத்யே த⁴ர்ம இவாபர:|
தமேவங்கு³ணஸம்பந்நம்
ராமம் ஸத்யபராக்ரமம்||

  • த்யாகே³ - கொடுப்பதில்
  • த⁴நதே³ந - குபேரனோடு
  • ஸமஸ் -   ஸமமானவர்
  • ஸத்யே -  உண்மை பேசுவதில்
  • அபரஹ - மற்றொரு
  • த⁴ர்ம -  தர்ம தேவதை
  • இவ -  போன்றவர்
  • ஏவம் -  மேற் சொல்லிய
  • கு³ண ஸம்பந்நம் -  குணங்களோடு கூடின
  • தம் ராமம் -  அந்த ஸ்ரீராமரிடம்
  • ஸத்ய பராக்ரமம் - ஸத்ய பராக்கிரமம் உள்ள

மேலும் அவர், தனதேனனுக்கு {குபேரனுக்கு} இணையாக ஈகை செய்பவராகவும், தர்மனை {யமனைப்} போன்ற ஒப்பற்ற வாய்மை நிறைந்தவராகவும் இருக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்