About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 15

நாம ஸங்கீர்தநம் யஸ்ய 
ஸர்வ பாப ப்ரநாஸ²நம்|
ப்ரணாமோ து³க்க² ஸ²மந: 
தம் நமாமி ஹரிம் பரம்||

  • நாம - திருநாம
  • ஸங்கீர்தநம் - பாடுதல், புகழ்ந்து கூறுதல்
  • யஸ்ய - யாருடைய
  • ஸர்வ - அனைத்து
  • பாப - பாவங்களையும்
  • ப்ரநாஸ²நம் - அழிப்பது
  • ப்ரணாமோ - வணக்கம்
  • து³க்க² - துன்பத்தை
  • ஸ²மநஹ் - தணிப்பது
  • தம் - அந்த
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • ஹரிம் - ஹரியை
  • பரம் - பரம்பொருளை

யாருடைய திருநாமத்தைப் பாடுவதால் அனைத்து பாவங்களும் அழிகின்றனவோ, யாரை வணங்குவதால் துன்பங்கள் தணிகின்றனவோ, அந்த பரம்பொருளான ஹரியை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றது

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 14

யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஸு²
அதி க³ஸு மது⁴ரம் முக்தி பா⁴ஜாம் நிவாஸோ|
ப⁴க்தாநாம் காம வர்ஸ²த்³யுதரு 
கிஸலயம் நாததே பா³த⁴ மூலம்||
நித்யம் சித்த ஸ்திதம் மே பவன புரபதே 
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ³|
ஹ்ருத்வா நிஸ்²ஸே²ஷ தாபான் பிரதி³ ஸ²து 
பரமாநந்த ஸந்தோஹ லக்ஷ்மீ:||

  • யோ³ந்த்³ராணாம் - யோகிகளின் தலைவர்களுக்கு
  • த்வத்³ - உமது
  • அங்கே³ஸு² - அங்கங்களில்
  • அதி - மிகவும்
  • க³ஸு - எதனால், எங்கே
  • மது⁴ரம் - இனிமையான
  • முக்தி - முக்தி
  • பா⁴ஜாம் - பெறுபவர்களின்
  • நிவாஸோ - வசிப்பிடம்
  • ப⁴க்தாநாம் - பக்தர்களின்
  • காம - விருப்பங்களை
  • வர்ஸ²தி - பொழிகிறது, வழங்குகிறது
  • தரு - மரம்
  • கிஸலயம் - தளிர்
  • நாத - நாதனே
  • தே - உமது
  • பா³த⁴ மூலம் - திருவடிகள்
  • நித்யம் - எப்போதும்
  • சித்த - மனதில்
  • ஸ்திதம் - நிலைத்திருப்பது
  • மே - எனது
  • பவன புரபதே - குருவாயூரப்பனே
  • க்ருஷ்ண - கிருஷ்ணரே
  • காருண்ய - கருணை
  • ஸிந்தோ³ - கடலே
  • ஹ்ருத்வா - நீக்கி
  • நிஸ்²ஸே²ஷ - முழுமையாக
  • தாபான் - துன்பங்களை
  • பிரதி³ ஸ²து - அருளட்டும்
  • பரமாநந்த - பேரானந்தத்தின்
  • ஸந்தோஹ - பெருக்கை, குவியலை
  • லக்ஷ்மீஹி - செல்வத்தை, நிலையை

யோகிகளின் தலைவர்களுக்கு இனிமையான இருப்பிடமாகவும், முக்தியை விரும்புவோருக்கு தங்குமிடமாகவும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக மரம் போன்றதாகவும் உமது திருவடிகள் விளங்குகின்றன. கருணைக் கடலான குருவாயூரப்பனே கிருஷ்ணா! என் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் நீர், என் அனைத்து துன்பங்களையும் நீக்கி, பேரானந்தத்தை எனக்கு அருள வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 13

ஸ்ரீமத்³ பா⁴க³வதாக்²யோ யம் 
பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி|
ஸ்வீக்ருதோ ஸி மயா 
நாத முக்தை யர்தம் ப⁴வ ஸாகரே||

  • ஸ்ரீமத்³ - சிறப்பும் செல்வமும் உடைய
  • பா⁴க³வத - பாகவதம்
  • ஆ²க்யோ - என்று பெயரிடப்பட்ட
  • அயம் - இந்த
  • பிரத்யக்ஷஹ் - நேரடியாகக் காணக்கூடிய
  • கிருஷ்ண - கிருஷ்ணர்
  • ஏவ - நிச்சயமாக
  • ஹி - உண்மையாக
  • ஸ்வீக்ருதோ - ஏற்றுக்கொள்ளப்பட்ட
  • அஸி - இருக்கிறீர்
  • மயா - என்னால்
  • நாத - தலைவனே
  • முக்தை - விடுதலை பெறுவதற்காக
  • அர்த்தம் - பொருட்டு
  • ப⁴வ - பிறப்பு இறப்பு
  • ஸாகரே - கடலில்

“ஸ்ரீமத் பாகவதம்” என்று அழைக்கப்படும் இந்த நூல், நேரடியாகக் காணக்கூடிய கிருஷ்ணரே என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு இறப்பு என்னும் சம்சாரக் கடலில் இருந்து விடுபடுவதற்காக, நாதனே, உம்மைச் சரணடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 12

நம: பங்கஜ நாபாய 
நம: பங்கஜ மாலினே|
நம: பங்கஜ நேத்ராய 
நமஸ்தே பங்கஜாங்க்ரயே||

  • நமஃ - வணக்கம்
  • பங்கஜ - தாமரை
  • நாபாய - நாபி உடையவருக்கு
  • நமஃ - வணக்கம்
  • பங்கஜ - தாமரை
  • மாலினே - மாலை அணிந்தவருக்கு
  • நமஃ - வணக்கம்
  • பங்கஜ - தாமரை
  • நேத்ராய - கண்கள் உடையவருக்கு
  • நமஸ்தே - உமக்கு வணக்கம்
  • பங்கஜ - தாமரை போன்ற
  • அங்க்ரயே - திருவடிகள் உடையவருக்கு

தாமரை மலர் போன்ற நாபி உடையவருக்கு வணக்கம். தாமரை மாலை அணிந்தவருக்கு வணக்கம். தாமரை போன்ற கண்கள் உடையவருக்கு வணக்கம். தாமரை போன்ற திருவடிகளை உடைய உமக்கு வணக்கம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்