About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
  • பத்³ம – தாமரை
  • பத்ர – இதழ்
  • அக்ஷம் – கண்களை உடையவரை
  • நீல – நீல நிறமுள்ள
  • ஜீமூத – மேகத்திற்கு
  • ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
  • யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
  • ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கரணம் - செய்கை, செயல்கள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • தரணம் - கடத்துதல், இரட்சிப்பு
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹரணம் - கவர்தல், நீக்குதல்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸ்மரணம் - நினைவு கூறுதல்
  • மது⁴ரம் - இனிமையானது
  • வமிதம் - உமிழ்ந்த பொருள், பேச்சு
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஷமிதம் - அமைதி, குணம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

4. மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம் 
சாரு ஹாஸம் சதுர் பு⁴ஜம்|
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • மந்தா³ர - மந்தாரை மலர்களின்
  • க³ந்த⁴ - நறுமணத்தை
  • ஸம்யுக்தம் - கொண்டிருப்பவரை
  • சாரு - அழகான, கொள்ளை கொள்ளும்
  • ஹாஸம் - புன்னகையை உடையவரை
  • சதுர் - நான்கு
  • பு⁴ஜம் - தோள்களை, கரங்களை உடையவரை
  • ப³ர்ஹி - மயிலின்
  • பிஞ்சா² - தோகையை
  • அவசூடா³ - தலையில் சூடிய முடிக்கு
  • அங்க³ம் - ஆபரணமாகக் கொண்டவரை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்