||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய
ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6
பஞ்சாநந ஆப்³ஜ ப⁴வ ஷண்முக² வாஸ வாத்³யாஹ்
த்ரை விக்ரமாதி³ சரிதம் விபு³தா⁴ஹ் ஸ்துவந்தி|
பா⁴ஷாபதிஹ் பட²தி வாஸர ஸுத்³தி⁴ மாராத்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
- பஞ்சாநந - ஐந்து முகங்களையுடையவர் (சிவன்)
- ஆப்³ஜ ப⁴வ - தாமரையில் பிறந்தவர் (பிரம்மா)
- ஷண்முக² - ஆறு முகங்களையுடையவர் (முருகன்)
- வாஸ - வாசம் செய்பவர், இருப்பவர்
- வாத்³யாஹ் - முதலானோர், போன்றவர்கள்
- த்ரை விக்ரம - திரிவிக்கிரமன் (விஷ்ணுவின் வாமன அவதாரம்)
- ஆதி³ - முதலான
- சரிதம் - சரித்திரம், மகிமை, செயல்கள்
- விபு³தா⁴ஹ் - தேவர்கள், ஞானிகள்
- ஸ்துவந்தி - துதிக்கின்றனர், புகழ்கின்றனர்
- பா⁴ஷாபதி - வாக்கின் தலைவர், பிரம்மா (அல்லது குரு கிரகம் எனவும் பொருள் கொள்ளலாம்)
- ஹ் - அவர்
- பட²தி - படிக்கிறார், ஓதுகிறார்
- வாஸர - நாள்
- ஸுத்³தி⁴ - தூய்மை, சுத்தம்
- மாராத் - அருகில் இருந்து, தொடர்ந்து
- ஸேஷாத்³ரி - சேஷ மலை (திருமலை)
- ஸேக²ர - சிகரம், உச்சி
- விபோ⁴ - எல்லாம் வல்ல இறைவனே
- தவ - உன்னுடைய
- ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், சுப்ரபாதம்
ஸேஷாத்ரி மலையின் நாயகனே! தேவர்களில் சிறந்தவரும், நல்ல அறிவும் உள்ளவருமான சிவபெருமான், நான்முகன், முருகப் பெருமான், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் மூன்று அடிகளால் ஓங்கி நின்று உலகளந்த உன்னுடைய த்ரிவிக்ரம அவதார சரிதங்களை போற்றித் துதிக்கின்றனர். தேவ குருவாகிய ப்ரஹஸ்பதியு ம் வணக்கத்துடன், உடன் இருந்து திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் முதலியவற்றை விளக்கும் பஞ்சாங்கத்தை படிக்கின்றார், நீ துயில் எழுந்து திருச்செவி சாற்ற வேண்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
