About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

பஞ்சாநந ஆப்³ஜ ப⁴வ ஷண்முக² வாஸ வாத்³யாஹ்
த்ரை விக்ரமாதி³ சரிதம் விபு³தா⁴ஹ் ஸ்துவந்தி|
பா⁴ஷாபதிஹ் பட²தி வாஸர ஸுத்³தி⁴ மாராத்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||

  • பஞ்சாநந - ஐந்து முகங்களையுடையவர் (சிவன்)
  • ஆப்³ஜ ப⁴வ - தாமரையில் பிறந்தவர் (பிரம்மா)
  • ஷண்முக² - ஆறு முகங்களையுடையவர் (முருகன்)
  • வாஸ - வாசம் செய்பவர், இருப்பவர்
  • வாத்³யாஹ் - முதலானோர், போன்றவர்கள்
  • த்ரை விக்ரம - திரிவிக்கிரமன் (விஷ்ணுவின் வாமன அவதாரம்)
  • ஆதி³ - முதலான
  • சரிதம் - சரித்திரம், மகிமை, செயல்கள்
  • விபு³தா⁴ஹ் - தேவர்கள், ஞானிகள்
  • ஸ்துவந்தி - துதிக்கின்றனர், புகழ்கின்றனர்
  • பா⁴ஷாபதி - வாக்கின் தலைவர், பிரம்மா (அல்லது குரு கிரகம் எனவும் பொருள் கொள்ளலாம்)
  • ஹ் - அவர்
  • பட²தி - படிக்கிறார், ஓதுகிறார்
  • வாஸர - நாள்
  • ஸுத்³தி⁴  - தூய்மை, சுத்தம்
  • மாராத் - அருகில் இருந்து, தொடர்ந்து
  • ஸேஷாத்³ரி - சேஷ மலை (திருமலை)
  • ஸேக²ர - சிகரம், உச்சி
  • விபோ⁴  - எல்லாம் வல்ல இறைவனே
  • தவ - உன்னுடைய
  • ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், சுப்ரபாதம்

ஸேஷாத்ரி மலையின் நாயகனே! தேவர்களில் சிறந்தவரும், நல்ல அறிவும் உள்ளவருமான சிவபெருமான், நான்முகன், முருகப் பெருமான், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் மூன்று அடிகளால் ஓங்கி நின்று உலகளந்த உன்னுடைய த்ரிவிக்ரம அவதார சரிதங்களை போற்றித் துதிக்கின்றனர். தேவ குருவாகிய ப்ரஹஸ்பதியு ம் வணக்கத்துடன், உடன் இருந்து திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் முதலியவற்றை விளக்கும் பஞ்சாங்கத்தை படிக்கின்றார், நீ துயில் எழுந்து திருச்செவி சாற்ற வேண்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா - 6

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம்|
அவதீ⁴ரித ஸா²ரதா³ர விந்தௌ³
சரநௌ தே மரணேபி சிந்தயாமி||

  • தி³வி - தேவலோகத்தில், வானத்தில்
  • வா - அல்லது
  • பு⁴வி - பூமியில்
  • வா - அல்லது
  • மம  - எனக்கு, என்னுடைய
  • அஸ்து - ஆகட்டும், இருக்கட்டும்
  • வாஸோ - வாசம், இருப்பிடம்
  • நரகே - நரகத்தில்
  • வா - அல்லது
  • நரகாந்தக - நரகத்தை அழித்தவனே (கிருஷ்ணனுக்கான பெயர்)
  • ப்ரகாமம்  - முழு விருப்பத்துடன், எப்படியாயினும்
  • அவதீ⁴ரித - புறக்கணிக்கப்பட்ட
  • ஸா²ரத³ - சரத்காலத்திற்குரிய
  • அரவிந்த - தாமரை
  • தௌ³ - இரண்டும் 
  • சரநௌ - இரு திருவடிகள், பாதங்கள்
  • தே - உன்னுடைய
  • மரணே - மரண நேரத்திலும்
  • அபி - கூட, கூடவே
  • சிந்தயாமி - நான் நினைக்கிறேன், தியானிக்கிறேன்

நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! நீ என்னை சுவர்க்க லோகத்திலோ, நரக லோகத்திலோ அல்லது இந்த பூலோகத்திலோ, எங்கு வைத்தாலும் சம்மதமே! என் உயிர் பிரியும் அந்திம வேளையிலும், மற்றும் எந்த நேரங்களிலும், சரத் காலத்தில் மலரும் தாமரை மலர்களையும் (தன் அழகிலும் மேன்மையிலும்) தோற்கடிக்கக் கூடிய உன்னுடைய திருவடிகளையே நான் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்!

'நரகாந்தக' என்ற சொல் 'நரகாசுரனை அழித்தவன்' என்ற அர்த்தத்தில் பொதுவாக வந்தாலும், 'நரக வாசத்தை நீக்குபவன்' என்ற அர்த்தத்தையும் தரும். இங்கு ஆழ்வார், ஸ்லோகத்தில் தனக்கு நரகத்தில் இருந்தாலும் சம்மதம் என்று கூறிவிட்டு, பகவானை 'நரகாந்தக' (நரக வாசத்தை நீக்குபவன்) என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நரக வாசத்தை நீக்குபவனை நாம் என்றென்றும் பற்றிக் கொண்டால், நாம் நரகத்தில் தள்ளப்பட மாட்டோம் என்பது உறுதி! 

நாம் இந்த பூமியில் செய்யும் செயல்களின் மூலமாக பாவங்களையும், புண்ணியங்களையும் சேர்த்துக்கொண்டு, மரணத்திற்குப் பின் பாவங்களைக் கழிக்க நரகத்திக்கும், புண்ணியங்களைக் கழிக்க சுவர்க்கத்திற்கும் செல்ல வேண்டும். அங்கு, பாவ புண்ணியங்களைக் கழித்தவுடன், மீண்டும் இந்த பூமியில் தள்ளப்பட்டு விடுவோம்.

ஆனால், பூமியில் வாழும் போதே, பகவானுடைய திருவடிகளை நினைத்துக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இறைவனின் சிந்தனை ஒன்றே நம்முடைய பாவ புண்ணியங்களைப் பொசுக்க வல்லது என்பதை இவ்வாறு குலசேகரர் தெரிவிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்