About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்லோகம் பலஸ்ருதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

ஆதி, தான்ய, தைரிய, கஜ, சந்தான, விஜய, வித்யா மற்றும் தன லட்சுமி ஆகிய எட்டு வடிவங்களின் அருளால் ஆயுள், ஆரோக்கியம், செல்வம் மற்றும் மனநிறைவு பெருகும். துன்பங்கள் நீங்குதல்: தரித்திரம், பயம் மற்றும் பாவங்கள் நீங்கி வீட்டில் என்றும் லட்சுமி கடாஷம் நிலைத்திருக்கும்.
ப²லஸ்²ருதி

  • அஷ்டலக்ஷ்மீ நமஸ்துப்⁴யம் 
  • வரதே³ காம ரூபிணி
  • விஷ்ணு வக்ஷ: ஸ்த²லா ரூடே⁴ 
  • ப⁴க்த மோக்ஷ ப்ரதா³யினி|
  • ஸ²ங்க³ சக்ர க³தா³ஹஸ்தே 
  • விஸ்²வ ரூபிணி தே ஜய:
  • ஜக³ன் மாத்ரே ச மோஹின்யை 
  • மங்கள³ம் ஸு²ப⁴ மங்கள³ம்|
  • அஷ்டலக்ஷ்மீ - தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகிய எட்டு வடிவங்களாக விளங்கும் லட்சுமி தேவியரே
  • நமஸ்துப்⁴யம் -  உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்
  • வரதே³ - வரங்களை அள்ளித் தருபவளே
  •  காம ரூபிணி - வேண்டிய வடிவங்களை எடுப்பவளே, அல்லது பக்தர்களின் நியாயமான ஆசைகளின் வடிவமாக இருப்பவளே 
  • விஷ்ணு - மகாவிஷ்ணுவின்
  • வக்ஷஸ் ஸ்த²ல - மார்பகப் பகுதியில்
  • ஆரூடே⁴ -  வீற்றிருப்பவளே, அமர்ந்திருப்பவளே 
  • ப⁴க்த - பக்தர்களுக்கு
  • மோக்ஷ - பிறவிப் பிணியில் இருந்து விடுதலையை, முக்தியை
  • ப்ரதா³யினி - வழங்குபவளே
  • ஸ²ங்க³ - சங்கு
  • சக்ர - சக்கரம்
  • க³தா³ - கதை ஆகிய ஆயுதங்களை 
  • ஹஸ்தே - கைகளில் ஏந்தியவளே
  • விஸ்²வ ரூபிணி - உலகமே வடிவமாகத் திகழும் தேவியே
  • தே - உனக்கு
  • ஜயஹ - வெற்றி உண்டாகட்டும்
  • ஜக³ன் - அகில உலகத்திற்கும்
  • மாத்ரே -  தாயாக விளங்குபவளே
  • ச - மேலும்
  • மோஹின்யை -  எல்லோரையும் கவரும் பேரழகு உடையவளே
  • மங்கள³ம் - நன்மைகள் உண்டாகட்டும்
  • ஸு²ப⁴ மங்கள³ம் - மிகவும் மேன்மையான சுபங்கள் பெருகட்டும்

வேண்டிய வடிவங்களை எடுப்பவளும், பக்தர்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வரங்களை அள்ளித் தருபவளுமாகிய தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகிய எட்டு வடிவங்களாக விளங்கும் லட்சுமி தேவியரே! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.  மகாவிஷ்ணுவின் மார்பகப் பகுதியில் எப்போதும் நீங்காமல் வீற்றிருப்பவளே, உன்னை உருகித் தொழும் பக்தர்களுக்கு இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுதலையையும், அழியாத முக்தியையும் வழங்குபவள் நீயே ஆவாய். உன்னுடைய கைகளில் சங்கு, சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, அகில உலகமுமே தன் வடிவமாகக் கொண்டு விஸ்வரூபமாய் விளங்கும் தேவியே, உனக்கு எப்போதும் வெற்றி மட்டுமே உண்டாகட்டும். இந்த மொத்த உலகத்திற்கும் தாயாக விளங்குபவளும், எல்லோரையும் கவரும் பேரழகு உடையவளுமாகிய உனக்கு நன்மைகளும், எப்போதும் மேன்மையான மங்களங்களும் பெருகட்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ த⁴ன லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி
து³ந்து⁴பி⁴ நாத³ ஸுபூர்ண மயே
கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம
ஸ²ங்க³ நினாத³ ஸுவாத்³ய நுதே|
வேத³ பூராணே திஹாஸ ஸு பூஜித
வைதி³க மார்க³ ப்ரத³ர்ஸ² யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
த⁴ன லக்ஷ்மி ரூபேணா ஸதா³ பாலய மாம்||

  • து³ந்து⁴பி⁴ - துந்துபி எனப்படும் ஒரு வகையான பெரிய முரசு, பேரிகை வாத்தியம்
  • நாத³ - ஓசையினால்
  • ஸுபூர்ண மயே - நிறைந்திருப்பவளே
  • கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம - ஒலிக்கின்ற கெஜையின், சலங்கையின் ஓசைகள்
  • ஸ²ங்க³ - சங்கின்
  • நினாத³ - முழக்கத்தோடும்
  • ஸு வாத்³ய நுதே - மங்களகரமான பிற இசைக்கருவிகளின் ஒலியோடும் துதிக்கப்படுபவளே
  • வேத³ - வேதங்களாலும்
  • பூராண - புராணங்களாலும்
  • இதிஹாஸ - இதிகாசங்களாலும்
  • ஸு பூஜித - மிகச் சிறப்பாக வழிபடப்படுபவளே
  • வைதி³க - வேத நெறியான
  • மார்க³ - நல்வழியை
  • ப்ரத³ர்ஸ² யுதே - வழிகாட்டுபவளே 
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • த⁴ன லக்ஷ்மி ரூபேணா - தனலட்சுமி வடிவில் இருப்பவளே
  • ஸதா³ - எப்போதும்  
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீ தன லக்ஷ்மி அருள் புரிவாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ வித்³யா லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

ப்ரணத ஸுரேஸ்²வரி பா⁴ரதி பா⁴ர்க³வி
ஸோ²க வினாஸி²னி ரத்ன மயே
மணி மய பூ⁴ஷித கர்ண விபூ⁴ஷண
ஸா²ந்தி ஸமாவ்ருத ஹாஸ்ய முகே²|
நவ நிதி⁴ தா³யினி கலி மல ஹாரிணி
காமித ப²லப்ரத³ ஹஸ்த யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
வித்³யா லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||

  • ப்ரணத -  வணங்குகின்றவர்களுடைய, சரணடைந்தவர்களுடைய
  • ஸுரேஸ்²வரி -  தேவர்களின் தலைவியே, தேவ தேவியே 
  • பா⁴ரதி -  கலைமகளின், ஸரஸ்வதியின் வடிவானவளே
  • பா⁴ர்க³வி - பிருகு மகரிஷியின் மகளே, லக்ஷ்மி தேவியே 
  • ஸோ²க - துக்கங்களை, துன்பங்களை 
  • வினாஸி²னி - முழுமையாக அழிப்பவளே
  • ரத்ன மயே - ரத்தினங்கள் நிறைந்தவளே
  • மணி மய - மணிகள், முத்துக்கள் பதிக்கப்பட்ட
  • பூ⁴ஷித -  அலங்கரிக்கப்பட்ட
  • கர்ண -  காதணிகளை
  • விபூ⁴ஷண - அணிந்திருப்பவளே
  • ஸா²ந்தி -  அமைதி, சாந்தம்
  • ஸமாவ்ருத -  நிறைந்த
  • ஹாஸ்ய முகே² - புன்னகை தவழும் முகத்தைக் கொண்டவளே
  • நவ நிதி⁴  - ஒன்பது வகையான செல்வங்களையும்
  • தா³யினி -  தருபவளே
  • கலி மல -  கலியுகத்தின் பாவங்களை, அழுக்குகளை
  • ஹாரிணி - போக்குபவளே
  • காமித -  விரும்பிய
  • ப²லப்ரத³ -  பலன்களை அளிக்கும்
  • ஹஸ்த யுதே - கைகளைக் கொண்டவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • வித்³யா லக்ஷ்மீ -  கல்விச் செல்வத்தை அருளும் வித்யா லட்சுமியே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்தை உடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்