About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

பலச்ருதி

9. அச்யுதஸ் யாஷ்டகம் 
ய: படே²  தி³ஷ்டத³ம் 
ப்ரேமத: ப்ரத் யஹம் 
பூருஷ: ஸஸ் ப்ருஹம்|
வ்ருத்தத: ஸுந்த³ரம் 
கர்த்ரு விஸ்²வம் ப⁴ரம் 
தஸ்ய வஸ்²யோ ஹரிர் 
ஜாயதே ஸத்வரம்||

  • அச்யுதஸ்ய - அச்யுதனுடைய, அழிவில்லாத இறைவனுடைய 
  • அஷ்டகம் - எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தத் துதியை 
  • யஃ - எவன் ஒருவன்
  • படே²த் - படிக்கிறானோ, பாராயணம் செய்கிறானோ
  • தி³ஷ்டத³ம் - விரும்பிய நன்மைகளை, பலன்களைக் கொடுக்கக்கூடிய இந்த ஸ்தோத்திரத்தை  
  • ப்ரேமதஃ - அன்போடு, பக்தியோடு
  • ப்ரத் யஹம் - தினமும், நாள்தோறும்
  • பூருஷஸ் - மனிதன்
  • ஸஸ் ப்ருஹம் - ஆவலோடு, ஈடுபாட்டோடு 
  • வ்ருத்ததஸ் - அமைப்பிலும் சந்தத்திலும்
  • ஸுந்த³ரம் - அழகியதாக இருக்கும், இந்த அஷ்டகத்தை 
  • கர்த்ரு - உலகைப் படைத்தவனும்
  • விஸ்²வம் ப⁴ரம் - அகிலத்தைத் தாங்குபவனுமாகிய, இறைவனைப் பற்றிய துதி  
  • தஸ்ய - அவனுக்கு, அந்தப் பக்தனுக்கு 
  • வஸ்²யோ - வசம் உடையவனாக, கட்டுப்பட்டவனாக
  • ஹரிர் - ஸ்ரீ ஹரி, மகாவிஷ்ணு 
  • ஜாயதே - ஆகிறான்
  • ஸத்வரம் - மிக விரைவில், உடனடியாக

இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும்  வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில்  திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.

||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

9. யதா³ ததா³ யதா² ததா² 
ததை²வ க்ருஷ்ண ஸத் கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்
ததா² க்ருபா விதீ⁴யதாம்|
ப்ரமாணி காஷ்டக த்³வயம்
ஜபத் யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத் ஸ நந்த³ நந்த³னே 
ப⁴வே ப⁴வே ஸு ப⁴க்திமான்||

  • யதா³ - எப்பொழுதெல்லாம்
  • ததா³ - அப்பொழுதெல்லாம்
  • யதா² - எந்தெந்த வழிகளில், எவ்விதமாக 
  • ததா² - அந்தந்த வழிகளில், அவ்விதமாக 
  • ததை²வ - அதேபோலவே
  • க்ருஷ்ண ஸத் கதா² - கிருஷ்ணரின் மகிமை மிக்க உன்னதமான கதைகள், லீலைகள் 
  • மயா - என்னால்
  • ஸதை³வ - எப்போதும், எப்பொழுதும் 
  • கீ³யதாம் - பாடப் பட வேண்டும், துதிக்கப் பட வேண்டும் 
  • ததா² - மேலும், அப்படியே
  • க்ருபா - உமது கருணை, அருள் 
  • விதீ⁴யதாம் - எனக்கு வழங்கப் பட வேண்டும், பொழியப் பட வேண்டும் 
  • ப்ரமாணிக அஷ்டக த்³வயம் - பிரமாணிகா  என்னும் சந்த அமைப்பில் உள்ள இந்த இரண்டு அஷ்டகங்களை, ஸ்தோத்திரங்களை 
  • ஜபதி - உச்சரித்து, ஜபம் செய்து 
  • அதீ⁴த்ய - படித்து, மனனம் செய்து 
  • ய: - எந்தவொரு
  • புமான் - மனிதன், நபர் 
  • ப⁴வேத் - ஆகிறானோ
  • ஸ: - அவன்
  • நந்த³ நந்த³னே - நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணரிடம்
  • ப⁴வே ப⁴வே - பிறவி தோறும், ஒவ்வொரு பிறவியிலும் 
  • ஸு ப⁴க்திமான் - மிகச் சிறந்த பக்தி உடையவனாக
  • ப⁴வேத் - மாறுவான், ஆகிவிடுவான்

என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

||இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருதம் ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூர்ணம்||
|| ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. குஞ்சிதை: குந்தலைர் 
பாஜமானானனம் 
ரத்ன மௌளிம் லஸத் 
குண்ட³லம் க³ண்ட³யோ:|
ஹார கேயூரகம் 
கங்கணப் ப்ரோஜ் வலம் 
கிங்கிணீ மஞ்சுளம் 
ஸ்²யாமளம் தம் ப⁴ஜே||

  • குஞ்சிதைஹ் - வளைந்த, சுருண்ட 
  • குந்தலைர் - தலை முடியால், கூந்தலால்
  • பாஜமான ஆனனம் - பிரகாசிக்கும் முகத்தை உடையவரை
  • ரத்ன - ரத்தினங்கள் பதித்த
  • மௌளிம் - கிரீடத்தை அணிந்தவரை
  • லஸத் - ஒளிர்கின்ற, பிரகாசிக்கின்ற
  • குண்ட³லம் - காதணிகள்
  • க³ண்ட³யோ: - கன்னங்களில், பிரதிபலிப்பவரை 
  • ஹார - முத்து மாலைகள், நெக்லஸ்கள்
  • கேயூரகம் - தோள்வளைகள், அணிகலன் 
  • கங்கண - கைகளில் அணியும் காப்புகள், வளையல்கள்
  • ப்ரோஜ் வலம் - மிக அதிகமாக பிரகாசிப்பவரை
  • கிங்கிணீ - சதங்கைகளின், கால் மணிகளின்
  • மஞ்சுளம் - இனிய ஓசையை உடையவரை
  • ஸ்²யாமளம் - கருநீல நிறமுடையவரை, மேகவண்ணனை 
  • தம் - அந்த இறைவனை
  • பஜே - நான் வணங்குகிறேன், துதிக்கிறேன்

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற  குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள்  தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்