About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ப⁴ஜே வ்ரஜைக மண்ட³னம்
ஸமஸ்த பாப க²ண்ட³னம் 
ஸ்வ ப⁴க்த சித்த ரஞ்ஜனம்
ஸதை³வ நந்த³ நந்த³னம்|
ஸு பிச்ச² கு³ச்ச² மஸ்தகம்
ஸுநாத³ வேணு ஹஸ்தகம் 
அனங்க³ ரங்க³ ஸாக³ரம்
நமாமி க்ருஷ்ண நாக³ரம்||

  • ப⁴ஜே – வணங்குகிறேன், துதிக்கிறேன்
  • வ்ரஜ ஏக – வ்ரஜ பூமிக்கு, ஆயர்பாடிக்கு ஒப்பற்ற
  • மண்ட³னம் – ஆபரணமாகத் திகழ்பவரை
  • ஸமஸ்த – எல்லாவிதமான, அனைத்து
  • பாப – பாவங்களையும்
  • க²ண்ட³னம் – அழிப்பவரை, தகர்ப்பவரை
  • ஸ்வ – தன்னுடைய
  • ப⁴க்த – பக்தர்களின்
  • சித்த – மனதிற்கு
  • ரஞ்ஜனம் – மகிழ்ச்சியை அளிப்பவரை
  • ஸதை³வ – எப்போதும்
  • நந்த³ – நந்தகோபனின்
  • நந்த³னம் – மகனாக விளங்குபவரை
  • ஸு – அழகான
  • பிச்ச² – மயில் தோகை
  • கு³ச்ச² – கற்றையை
  • மஸ்தகம் – தலையில் சூடியிருப்பவரை
  • ஸுநாத³ – இனிய நாதத்தை, இசையை எழுப்பும்
  • வேணு – புல்லாங்குழலை
  • ஹஸ்தகம் – கைகளில் ஏந்தியிருப்பவரை
  • அனங்க³ – மன்மதனின், காதலின் அழகின்
  • ரங்க³ – லீலைகளுக்கு
  • ஸாக³ரம் – கடல் போன்றவரை
  • நமாமி – வணங்குகிறேன்
  • க்ருஷ்ண – கிருஷ்ணராகிய
  • நாக³ரம் – மிகச் சிறந்த நாயகனை, தலைவனை

கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம், 
ஹார நூபுர ஸோ²பிதம்|  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே³ஜக³த்³ கு³ரும்||

  • அதஸீ புஷ்ப – காயாம்பூ
  • ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
  • ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
  • நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
  • ஸோ²பிதம்  – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
  • ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
  • கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
  • கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பலச்ருதி 

9. க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம் 
ப்ராத ருத்தா²ய ய: படே²த்|
கோடி ஜன்ம க்ருதம் பாபம் 
ஸ்மரணேன வினஸ்²யதி||

  • க்ருஷ்ணாஷ்டகம் - கிருஷ்ணனைப் போற்றும் இந்த எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்லோகத்தை
  • இ³தம் - இந்த 
  • புண்யம் - புண்ணியத்தைத் தரக்கூடிய, தூய்மையான
  • ப்ராதஹ் - அதிகாலை வேளையில்
  • உத்தா²ய - படுக்கையிலிருந்து எழுந்து
  • யஹ் - எவர் ஒருவர்
  • படே²த் - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
  • கோடி - கோடி
  • ஜன்ம - பிறவிகளில்
  • க்ருதம் - செய்யப்பட்ட
  • பாபம் - பாவங்கள் அனைத்தும்
  • ஸ்மரணேன - இறைவனை நினைப்பதன் மூலமே
  • வினஸ்²யதி - அழிகிறது, நசித்துப் போகிறது

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||