About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 27 November 2025

திருவேங்கட மஹாத்மியம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||சூத முனிவர்||

||ஓம் நமோ நாராயணா||

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்
நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு

பகவத் தியானமும் பகவத் சர்ச்சைகளும்
அகத்தை வென்ற முனிவர்கள் இடையே

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்
பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம்

பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்

கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள்
வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு
புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 157

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 157||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 19||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

யோகோ ஜ்ஞானம் ததா² ஸாங்க்²யம் 
வித்யாஸ்² ஸி²ல்பாதி கர்ம ச|
வேதாஸ்² ஸா²ஸ்த்ராணி விஜ்ஞானம்
ஏதத் ஸர்வம் ஜநார்தனாத்|| 


யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.21 

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்
தத்ததே³ வேதரோ ஜந:|
ஸ யத் ப்ரமாணம் குருதே 
லோகஸ் தத³நு வர்ததே||

  • யத்³ யத்³ - எதையெல்லாம் 
  • ஆசரதி - செய்கின்றானோ 
  • ஸ்²ரேஷ்ட²ஸ் - மரியாதைக்குரிய தலைவர் 
  • தத் - அதையே 
  • தத்³ - அதை மட்டுமே 
  • ஏவ - நிச்சயமாக 
  • இதரோ - பொது 
  • ஜநஹ - மக்கள் 
  • ஸ - அவன் 
  • யத் - எதனை 
  • ப்ரமாணம் - உதராணமாக 
  • குருதே - செய்கின்றானோ 
  • லோகஸ் - உலகம் முழுவதும் 
  • தத்³ - அதையே  
  • அநுவர்ததே - பின்பற்றுகிறது

மரியாதைக்குரிய தலைவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதையே , உலகம் முழுவதிலும் பொது மக்கள், உதாரணமாக பின்பற்றுகின்றார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.14

ததோந் யதா² கிஞ்ச ந யத்³ விவக்ஷத:
ப்ருத² க்³ த்³ருஸ²ஸ் தத் க்ருத ரூப நாமபி⁴:|
ந கர்ஹி சித் க்வாபி சது³: ஸ்தி²தா மதிர் 
லபே⁴த வாதா ஹத நௌரி வாஸ் பத³ம்||

  • ததோ - அவரது புகழை சொல்லாது
  • அந்யதா² - வேறு விதமாக
  • யத்³ கிஞ்சந் - ஏதோ ஒன்றை  
  • விவக்ஷதஹ - சொல்ல விரும்பியவனும்
  • ப்ருத²க்³ த்³ருஸ²ஸ் - வெவ்வேறு விஷயங்களில் நாட்டம் கொண்டவனுமான மனிதனுடைய
  • மதிர் - புத்தியானது
  • தத் க்ருத ரூப நாமபி⁴ஹி - அவ் விருப்பத்தால் செய்யப்பட்ட உருவம், பெயர் 
  • து³ஸ் ஸ்தி²தா - இவைகளால் நிலை பெறாததாய்
  • வாதா ஹத - காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட 
  • நௌஹ் - ஓடம் 
  • இவ - போன்று
  • கர்ஹி சித் - எந்த விஷயத்திலும்
  • க்வாபி ச - ஒருபொழுதும்
  • ஆஸ்பத³ம் - இடத்தை
  • ந லபே⁴த - அடைவதில்லை

பகவத் குணம் கீர்த்தனம் அல்லாது வேறு எதையாவது சொல்ல விரும்பியவன், அவ்விதம் சொல்வதனால், அவனது சிந்தையில் தோன்றிய ரூபத்தாலும் பெயரினாலும், அவனது புத்தி நிலை தவறி, நடுக்கடலில் காற்றில் சிக்கிய ஓடம் போல, தன் லட்சியத்தை அடைவதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.92

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.92

ந சாக்³ நிஜம் ப⁴யம் கிஞ்சிந்
நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ:|
ந வாதஜம் ப⁴யம் 
கிஞ்சிந் நாபி ஜ்வர க்ருதம் ததா²|| 

  • அக்³நிஜம் - அக்நியால் உண்டாகிற
  • ப⁴யம் - பயம்
  • கிஞ்சித் ந - கொஞ்சமும் இல்லை
  • ச - மேலும்
  • ஜந்தவஹ - ஜந்துக்கள்
  • அப்ஸு - ஜலங்களில்
  • மஜ்ஜந்தி ந - மூழ்கி மரணம் அடைகிறது இல்லை
  • வாதஜம் - வாயுவினால் உண்டான
  • ப⁴யம் -  பயம்
  • கிஞ்சித் அபி -  கொஞ்சமும்
  • ந - இல்லை
  • ததா² - அப்படியே
  • ஜ்வர க்ருதம் - ஜ்வரத்தால் உண்டானதும்
  • ந - இல்லை

அங்கே  ஸ்ரீராம ராஜ்யத்தில் அக்நி பயமோ, புயல் பயமோ, வெள்ளத்தில் கால்நடைகள் மூழ்கிப் போகும் என்ற பயமோ, பிணி பயமோ இருக்காது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 132 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 132 - ஆயர்பாடி அணிவிளக்கு||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்||

தீய புந்திக் கஞ்சன் உன் மேல்* 
சினம் உடையன் சோர்வு பார்த்து* 
மாயம் தன்னால் வலைப் படுக்கில்* 
வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய்* 
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா* 
ஆயர் பாடிக்கு அணி விளக்கே!* 
அமர்ந்து வந்து என் முலை உணாயே|

  • வாசுதேவா - கண்ணபிரானே!
  • தீய புந்தி - தீங்கு செய்யும் துஷ்ட புத்தியை உடைய
  • கஞ்சன் - கம்ஸனானவன்
  • உன் மேல் - உன் மீது
  • சினம் உடையன் - கோபமாய் இருக்கிறான்
  • சோர்வு பார்த்து - நீ தன்னந்தனியாக இருக்கும் சமயம் பார்த்து
  • மாயம் தன்னால் - வஞ்சைனையால்
  • வலைப்படுக்கில் - உன்னை பிடித்து விட்டால்
  • வாழகில்லேன் - நான் உயிர் தரிக்க மாட்டேன்
  • தாயர் - அன்னை
  • வாய் சொல் - சொல்படி
  • கருமம் கண்டாய் - செய்வது அவசியமானது
  • சாற்றிச் சொன்னேன் - வற்புறுத்திச் சொல்கிறேன்
  • போகவேண்டா - நீ ஓரிடத்திற்கும் தனியாகப் போக வேண்டாம்
  • ஆயர் பாடிக்கு - ஆயர் பாடிக்கு
  • அணி விளக்கே! - அணிகலன் போன்ற தீபமே!
  • அமர்ந்து வந்து - ஆற அமர வந்து
  • என் முலை - என்னிடம் சுரக்கும் பாலை
  • உணாயே - உண்ணாயோ 

கெட்ட புத்தி கொண்ட கம்சன் உன் மேல் கோபமாய் இருக்கிறான். நீ தனியாயிருக்கும் சமயம் பார்த்து அவன் உன்னை வஞ்சனையால் பிடித்து விட்டால், நான் பிழைத்திருக்க சக்தியற்றவளாகி விடுவேன். தாய் பேச்சைத் தட்டாதவனாய், நீ கண்டிப்பாக வெளியே எங்கும் போக வேண்டாம், ஆயர்பாடியின் நந்தா விளக்கே! என் அருகில் வந்தமர்ந்து என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - நடு நாடு அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

நடு நாட்டு திவ்ய தேசங்கள் 2 பற்றி பார்ப்போம்  

நடு நாட்டு திவ்ய தேசங்கள் Area Wise:

கடலூர் - 2

  • DD 041 - திருவஹீந்திரபுரம் (திரு அயிந்தை) (திருவந்திபுரம்)
  • DD 042 - திருக்கோவலூர்  (திருக்கோயிலூர்)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 100

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 45||

||ஸ்கந்தம் 04||

தொடர்ந்து கர்தம ப்ரஜாபதியின் பெண்களின் வம்சங்களைச் சொன்னார் மைத்ரேயர்.

சிரத்தா என்ற பெண்ணை ஆங்கீரஸுக்கு மணம் முடித்தார் கர்தமர். அவர்களுக்கு ஸினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்று நான்கு பெண்கள்.

ஸினீவாலி என்பவள் தேய்பிறை சதுர்தசிக்கும், குஹூ அமாவாசைக்கும், ராகா பௌர்ணமிக்கும், அனுமதி வளர்பிறை சதுர்தசிக்கும் அதிதேவதைகள்.

இவர்களைத் தவிர, பகவானைப் போன்ற பெருமை உடைய உதத்யர் என்பவரும், தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆங்கீரஸின் புதல்வர்கள் ஆவர். அவர்கள் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் புகழ் பெற்று விளங்கினர்.

ஹவிர்புக் என்ற கர்தமரின் மகளை புலஸ்தியர் மணந்தார். இவர்களின் மகன்கள் அகஸ்தியரும், விச்ரவஸ் என்பவரும் ஆவர்.

விச்ரவஸின் மனைவியான இடபிடை என்பவளிடம் யக்ஷர்களின் தலைவரான குபேரன் பிறந்தார். இன்னொரு மனைவியான கைகஸி என்பவளின் புதல்வர்களே ராவணன், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் ஆகியோர்.


புலஹரின் மனைவி கதி என்பவள். அவளது புதல்வர்கள் கர்மச்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு ஆகியோர்.

க்ரது என்பவரின் மனைவி க்ரியை. இவள் ப்ரும்மதேஜஸுடன் விளங்கும் வாலகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்களைப் பெற்றாள்.

வசிஷ்டரின் மனைவியான ஊர்ஜை அல்லது அருந்ததி சித்ரகேது முதலான ஏழு மகன்களை ஈன்றாள். அவர்கள் ஸப்தரிஷிகள் ஆனார்கள்.

ஸப்தரிஷி என்பதும் பதவிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மஹரிஷிகள் ஸப்தரிஷிகளாக இருக்கின்றனர். அவர்கள் சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன், வஸுப்ருத்யானன், த்யுமான் ஆகியோர்.

அதர்வா என்ற முனிவரின் பத்னி சித்தி என்பவள் ததீசி‌ முனிவரைப் பெற்றாள். அவரை அசுவசிரஸ் என்றும் அழைப்பர்.

ப்ருகு மஹரிஷியின் மனைவி கியாதி என்பவள். அவள் தாதா, விதாதா ஆகிய இரு மகன்களையும் திருமகளின் அம்சமான லக்ஷ்மி என்ற மகளையும் பெற்றாள்.

மேரு மஹரிஷி ஆயதி, நியதி என்ற தன் புதல்விகளை தாதா, விதாதாவிற்கு‌ மணம் செய்து கொடுத்தார்.

அவர்களுக்கு மிருகண்டு, பிராணன் என்ற புதல்வர்கள் உண்டு. மிருகண்டுவின் மகன்‌ மார்க்கண்டேயர். பிராணனின் மகன் வேதசிரேயஸ். ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகன் உசனஸ் என்னும் சுக்ராசார்யார்.

விதுரா! இந்த ஒன்பது முனிவர்களும் ப்ரஜைகளைப் படைத்து உலகத்தைப் போஷித்தனர்.

இந்த வரலாற்றைச் சிரத்தையுடன் கேட்பவர்களின் பாவங்கள் உடனே நீங்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்லோகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலக்ஷ்மியாக வழிபடுவது நம் மரபாக இருக்கிறது. அந்த எட்டு லக்ஷ்மிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்:

தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலக்ஷ்மி அஷ்டலக்ஷ்மியாக விளங்குகிறாள். ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஸந்தானலக்ஷ்மி,  விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி என்று அஷ்டலக்ஷ்மிகள். அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வீற்றிருக்கும் திசைகள் வருமாறு:-

  • கிழக்கில் - வித்யாலக்ஷ்மி 
  • தென்கிழக்கில் - தனலக்ஷ்மி 
  • தெற்கில் - ஸந்தானலக்ஷ்மி 
  • தென்மேற்கில் - தைர்யலக்ஷ்மி
  • மேற்கில் - ஆதிலக்ஷ்மி
  • வடமேற்கில் - கஜலக்ஷ்மி
  • வடக்கில் - விஜயலக்ஷ்மி 
  • வடகிழக்கில் - தான்யலக்ஷ்மி

என்று அஷ்ட திக்குகளில் அஷ்ட லக்ஷ்மிகளாக வாசம் புரிகின்றாள்.

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் என்பது ஆதி, தானிய, தைரிய, கஜ, சந்தான, வீர, விஜய, வித்யா ஆகிய எட்டு லக்ஷ்மி வடிவங்களையும் போற்றி, செல்வம், ஞானம், தைரியம், வளம் போன்றவற்றை அருளுமாறு வேண்டிக்கொள்ளும் ஒரு மந்திரமாகும். இந்த ஸ்தோத்திரத்தில், ஒவ்வொரு லக்ஷ்மியின் அம்சமும் அவற்றின் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன.

1. ஆதி³லக்ஷ்மி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லக்ஷ்மியே ஆதி லக்ஷ்மி. ஒவ்வொரு லக்ஷ்மிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு. ஆனால் ஆதிலக்ஷ்மிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலக்ஷ்மியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறு பெற வேண்டியது முக்கியம்.

ஸுமனஸ வந்தி³த ஸுந்த³ரி மாத⁴வி, சந்த்³ர ஸஹொத³ரி ஹேம மயே
முனிக³ண வந்தி³த மோக்ஷ ப்ரதா³யனி, மஞ்ஜுல பா⁴ஷிணி வேத³னுதே|
பங்கஜ வாஸினி தே³வ ஸுபூஜித, ஸத்³கு³ண வர்ஷிணி ஸா²ந்தியுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, ஆதி³லக்ஷ்மி பரிபாலய மாம்||

தேவர்களால் வணங்கப் படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன் மயமானவளே, முனிவர்களால் போற்றப் படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப் படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலக்ஷ்மியின் முதல் உருக் கொண்ட ஆதிலக்ஷ்மியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்! எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழு வெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆதி லக்ஷ்மி நமக்கு அருள் புரிவாள்.

2. தா⁴ன்யலக்ஷ்மி
தானிய வளங்களை அருள்பவள் தான்யலக்ஷ்மி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலக்ஷ்மி. இவளுக்கு அன்னலக்ஷ்மி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லக்ஷ்மியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி. ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப் பீடமாகக் கொண்டவள். லக்ஷ்மி தந்திரம் என்னும் நூலில் தான்யலக்ஷ்மி சதாக்க்ஷி, சாகம்பரி எனப்போற்றப்படுகிறாள். உலகம் மழை நீர் இல்லாமல் வாடும் என்பதினால் நூறு கண்களால் நீர் வளத்தைப் பெருக்குகிறாள் என்ற பொருள் பட சதாக்ஷி எனவும், உணவுப் பொருட்களை உருவாக்குகிறாள் என்பதனால் சாகம்பரி எனவும் அழைக்கப்படுகிறாள்.

அயிகலி கல்மஷ நாஸி²னி காமினி, வைதி³க ரூபிணி வேத³மயே
க்ஷீர ஸமுத்³ப⁴வ மங்கள³ ரூபிணி, மந்த்ரனி வாஸினி மந்த்ரனுதே|
மங்கள³ தா³யினி அம்பு³ஜ வாஸினி, தே³வ க³ணாஸ்²ரித பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, தா⁴ன்யலக்ஷ்மி ஸதா³பாலய மாம்|| 

பாவங்களை அழிப்பவளே, அழகியே, வேத உருவானவளே, வேத மயம் ஆனவளே, பாற்கடலில் தோன்றிய மங்கல வடிவே, மந்திரங்களில் வாழ்பவளே, மந்திரங்களினால் வழிபடப் பெறுகிறவளே, நலமனைத்தும் அளிப்பவளே, தாமரையில் வாசம் செய்பவளே, தேவர்கள் புகலாகக் கொண்ட திருவடிகள் வாய்த்தவளே, மதுசூதனின் மனைவியே, தான்யங்களில் உறைந்து உலக உயிர்களை நிலைபெறச் செய்பவளே, தான்ய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் வளமளித்து காப்பாற்றுவாயாக! எனக் கூறி ஸ்ரீ தான்ய லக்ஷ்மியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறையும். வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.
 
3. தை⁴ர்யலக்ஷ்மி
 மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலக்ஷ்மி என்ற தைரியலக்ஷ்மி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.

ஜயவர வர்ஷிணி வைஷ்ணவி பா⁴ர்க³வி, மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே 
ஸுரக³ண பூஜித ஸு²க்⁴ர ப²லப்ரத,³ ஜ்ஞான விகாஸினி ஸா²ஸ்த்ரனுதே|
ப⁴வப⁴ய ஹாரிணி பாப விமோசனி, ஸாது⁴ ஜனாஸ்²ரித பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத⁴ன காமினி, தை⁴ர்யலக்ஷ்மீ பரிபாலய மாம்||

பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திர மயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும், என்று பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ தைர்ய லக்ஷ்மி அளிப்பாள்.

4. கஜ³லக்ஷ்மி
இவளே ராஜலக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்று பெயர். நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நில மகளாகிய இலக்குமியின் மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். கஜலக்ஷ்மியை ராஜலக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி எனவும் அழைப்பர். கஜலக்ஷ்மியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.

ஜய ஜய து³ர்க³தி நாஸி²னி காமினி, ஸர்வ ப²லப்ரத³ ஸா²ஸ்த்ரமயே
ரத⁴கஜ³ துரக³ பதா³தி ஸமாவ்ருத, பரிஜன மண்டி³த லோகனுதே|
ஹரி ஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப நிவாரிணி பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, கஜ³லக்ஷ்மீ ரூபேண பாலய மாம்||

தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழை பொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினை உடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டி கஜ லக்ஷ்மியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாக இருக்கும்.

5. ஸந்தானலக்ஷ்மி
சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களைவிட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலக்ஷ்மி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. 

அயிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி, ராக³ விவர்தி⁴னி ஜ்ஞானமயே
கு³ணக³ண வாரதி⁴ லோக ஹிதைஷிணி, ஸ்வர ஸப்த பூ⁴ஷித கா³னநுதே| 
ஸகல ஸுராஸுர தே³வ முனீஸ்²வர, மானவ வந்தி³த பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, ஸந்தானலக்ஷ்மீ த்வம் பாலய மாம்||

கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவு மயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப் படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ர தோஷத்தையும் ஸ்ரீ ந்தான லக்ஷ்மி நீக்கி அருள் புரிவாள்.

6. விஜயலக்ஷ்மி
விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலக்ஷ்மி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலக்ஷ்மிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.

ஜய கமலாஸினி ஸத்³க³தி தா³யினி, ஜ்ஞான விகாஸினி கா³னமயே
அனுதி³ன மர்சித குங்கும தூ⁴ஸர, பூ⁴ஷித வாஸித வாத்³யனுதே|
கனக த⁴ராஸ்துதி வைப⁴வ வந்தி³த, ஸ²ங்கர தே³ஸி²க மான்யபதே³
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, விஜயலக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்|| 

தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனுதினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமையளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என பக்தியுடன் கூறி ஸ்ரீ விஜய லக்ஷ்மி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.

7. வித்³யாலக்ஷ்மி
வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலக்ஷ்மி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். ஸ்ரீஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி’ (நாமகள்) என்று விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம்’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக்கூறுகிறது.

ப்ரணத ஸுரேஸ்²வரி பா⁴ரதி பா⁴ர்க³வி, ஸோ²கவினாஸி²னி ரத்னமயே
மணிமய பூ⁴ஷித கர்ண விபூ⁴ஷண, ஸா²ந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே²|
நவனிதி⁴ தா³யினி கலிமல ஹாரிணி, காமித ப²லப்ரத³ ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, வித்³யாலக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||

தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்தை உடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

8. த⁴னலக்ஷ்மி
 தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லக்ஷ்மி என்றும் அழைக்கப் படுகிறாள். தனலக்ஷ்மியின் அருளால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறியுள்ளார். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் பொலிபவள்.

தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி, து³ந்து⁴பி⁴ நாத³ ஸுபூர்ணமயே
கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம, ஸ²ங்க³ நினாத³ ஸுவாத்³யனுதே|
வேத³ பூராணே திஹாஸ ஸுபூஜித, வைதி³க மார்க³ ப்ரத³ர்ஸ²யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, த⁴னலக்ஷ்மி ரூபேணா பாலய மாம்||

‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீ தன லக்ஷ்மி அருள் புரிவாள்.

ப²லஸ்²ருதி
ஸ்²லோ|அஷ்டலக்ஷ்மீ நமஸ்துப்⁴யம் வரதே³ காம ரூபிணி
விஷ்ணு வக்ஷ: ஸ்த²லா ரூடே⁴ ப⁴க்த மோக்ஷ ப்ரதா³யினி|

ஸ்²லோ| ஸ²ங்க³ சக்ர க³தா³ஹஸ்தே விஸ்²வரூபிணிதே ஜய:
ஜக³ன் மாத்ரே ச மோஹின்யை மங்கள³ம் ஸு²ப⁴ மங்கள³ம்|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ அஷ்டலட்சுமி 108 போற்றி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி|
ஓம் அபயலக்ஷ்மியே போற்றி|
ஓம்  அலங்காரலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஸ்வாரூடலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஷ்டபுஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஷ்டாதசபுஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் அம்ருதலக்ஷ்மியே போற்றி|
ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஆதிலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஆனந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் இஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் இந்திரலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி|
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் கனகலக்ஷ்மியே போற்றி|
ஓம் கற்பகலக்ஷ்மியே போற்றி|
ஓம் கனகாபிஷேக லக்ஷ்மியே போற்றி|
ஓம் கன்யாலக்ஷ்மியே போற்றி|
ஓம் காருண்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் கிருபாலக்ஷ்மியே போற்றி|
ஓம் கீர்த்திலக்ஷ்மியே போற்றி|
ஓம் கோ லக்ஷ்மியே போற்றி|
ஓம் கோலாபுரி லக்ஷ்மியே போற்றி|
ஓம் சத்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி|
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி|
ஓம் சந்தானலக்ஷ்மியே போற்றி|
ஓம் சாந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி|
ஓம் சித்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுபலக்ஷ்மியே போற்றி|
ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி|
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸெளந்தர்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸைன்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜகல்லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜேஷ்ட சோதரியே போற்றி|
ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி|
ஓம் தன லக்ஷ்மியே போற்றி|
ஓம் தனத லக்ஷ்மியே போற்றி|
ஓம் தயா லக்ஷ்மியே போற்றி|
ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்விபுஜ வீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் தீபலக்ஷ்மியே போற்றி|
ஓம் தீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி|
ஓம் துக்க நிவாரணியே போற்றி|
ஓம் நாகலக்ஷ்மியே போற்றி|
ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பால லக்ஷ்மியே போற்றி|
ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பிரம்மசோதரியே போற்றி|
ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி|
ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி|
ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூலக்ஷ்மியே போற்றி|
ஓம் புவன லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூஜ்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி|
ஓம் போக லக்ஷ்மியே போற்றி|
ஓம் மகாலக்ஷ்மியே போற்றி|
ஓம் மாயாலக்ஷ்மியே போற்றி|
ஓம் மோக்ஷலக்ஷ்மியே போற்றி|
ஓம் மோஹனலக்ஷ்மியே போற்றி|
ஓம் யக்ஞலக்ஷ்மியே போற்றி|
ஓம் யந்திரலக்ஷ்மியே போற்றி|
ஓம் யோகலக்ஷ்மியே போற்றி|
ஓம் யௌவன லக்ஷ்மியே போற்றி|
ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் ராஜ்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ரம்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ரூபலக்ஷ்மியே போற்றி|
ஓம் லக்ஷ்மியே போற்றி|
ஓம் லங்காதகனியே போற்றி|
ஓம் வரலக்ஷ்மியே போற்றி|
ஓம் வரதலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஷ்ணுலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஜயலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஸ்வலக்ஷ்மியே போற்றி|
ஓம் வித்யாலக்ஷ்மியே போற்றி|
ஓம் வீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் வீர்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஞானலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஹம்ஸவாகினியே போற்றி|
ஓம் ஹ்ருதயலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ சக்ர லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ சூக்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீப்ரதனாலக்ஷ்மியே போற்றி|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்தோத்ரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம் பீத வஸ்த்ராதி பூஷம்
பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்

பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.

1. ஸ்ரீகைரவிண்யாஸுதீரே பத்ம
நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்
சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம் ருக்மிணீ
ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் 

கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம் புக்தி
முக்தியேகலாபாய பக்தை ருபாத்யம்
பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம் பார்த்த
வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம்  

பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்பு உடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

3. லோகாவனாயாத்தலீலம் பூஜி
தானேக தேவேந்த்ர லோகைக பாலம்
ஸ்ரீ தேவகீ புண்யபாலம் ஆஹ்ரு
தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்

உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.

4. பா ஹுத்வயோபேததேஹம்  பாஞ்ச
ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்
ஸ்ரீகாருடஸ்வீயவாஹம் புத்ர
பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம்  

இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

5. வாமேகரே சாருசக்ரம் வார
ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்
காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம் ஸ்வீய
ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்  

இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம் ரங்க
நாதே தேவேன நித்யம் ஸமேதம்
பக்தைஸ்ஸதா ஸாதுகீதம் ஸ்வீய
பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம்  

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

7. பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம் தீக்ஷி
தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை
நித்யம் படேத் பக்தி சாயீ வாஸு
தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய  

விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||


ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்தரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்தரம்

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்திரம் என்பது சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாரின் 108 போற்றிப் புகழும் மந்திரங்களாகும். இந்த அஷ்டோத்திரத்தை தினமும் உச்சரித்து வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, சக்கரத்தாழ்வாரின் அருளால் எல்லா இடங்களிலும் எப்போதும் பாதுகாப்பு கிடைக்கும். 

பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி|
ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி|
ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி|
ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி|
ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி|
ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி|
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி|
ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி|
ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி|
ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி|
ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி|
ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி|
ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி|
ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி|
ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி|
ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி|
ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி|
ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி|
ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி|
ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி|
ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி|
ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி|
ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி|
ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி|
ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி|
ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி|
ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி|
ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி|
ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி|
ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி|
ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி|
ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி|
ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி|
ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி|
ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி|
ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி|
ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி|
ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி|
ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி|
ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி|
ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி|
ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி|
ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி|
ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி|
ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி|
ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி|
ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி|
ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி|
ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி|
ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி|
ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி|
ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி|
ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி|
ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி|
ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி|
ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி|
ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி|
ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி|
ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி|
ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி|
ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி|
ஓம் முக்கண்களை உடையவரே போற்றி|
ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி|
ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி|
ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி|
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி|
ஓம் ருத்ரப் பிரியரே போற்றி|
ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி|
ஓம் மஹா வீரரே போற்றி|
ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி|
ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி|
ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி|
ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி|
ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி|
ஓம் சிவப்ரியரே போற்றி|
ஓம் மஹா பலரே போற்றி|
ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி|
ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி|
ஓம் மஹா சூரரே போற்றி|
ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி|
ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி|
ஓம் தர்மராஜரே போற்றி|
ஓம் சமத்துவமுடையவரே போற்றி|
ஓம் தண்டதரரே போற்றி|
ஓம் தபஸ்வியே போற்றி|
ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி|
ஓம் சர்வக்ஞரே போற்றி|
ஓம் புண்ணிய மித்திரரே போற்றி|
ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி|
ஓம் மிக பயங்கர வாதியே போற்றி|
ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி|
ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி|
ஓம் பாவிகளின் எமனே போற்றி|
ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி|
ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி|
ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி|
ஓம் கோரமானவரே போற்றி|
ஓம் பயங்கரரே போற்றி|
ஓம் திருப்தியுற்றவரே போற்றி|
ஓம் ஸம்ஹாரியே போற்றி|
ஓம் குளிரச் செய்பவரே போற்றி|
ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி|
ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி|
ஓம் வேண்டிய வரம் தரும் ஸுதர்சநரே போற்றி போற்றி|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||