About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பூதனை என்ற அரக்கியின் வதம்|

பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கம்சன் கொல்ல விரும்பினான். அதனால் பூதனை என்ற அரக்கியை வரவழைத்தான். 


தன் திட்டத்தை அவளிடம் சொன்னான். அவனுக்கு உதவ அவளும் இணங்கினாள். உடனே அவள் ஓர் அழகிய பெண்ணைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு குழந்தைகளைத் தேடி நகரங்களில் அலைந்தாள். எந்த உருவம் வேண்டுமானாலும் எடுக்கும் சக்தியைக் கொண்டவள் அவள். ஒரு நாள் அவள் எல்லா நகரங்களையும் பார்த்துக் கொண்டே ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கோகுலத்தை பார்த்தாள். அதற்கு முன்னர் அவள் அங்கே சென்றதில்லை.
 

அதனால் கீழே இறங்கினாள். ஓர் அழகிய பெண்ணாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குள் நுழைந்தாள். திருமகளே வந்துவிட்டதாக அவளைப் பார்த்து யசோதை நினைத்தாள். கோகுலத்து கோபிகைகள் எல்லார் மனதையும் அவள் கவர்ந்து விட்டாள்.

குழந்தை கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருந்தான். பூதனை சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பக்கத்தில் இல்லை என்று தெரிந்ததும் தொட்டிலில் இருந்த குழந்தையை கையில் எடுத்தாள். கீழே உட்கார்ந்து குழந்தையைத் தன் மடியில் கிடத்தினாள். விஷம் தடவியிருந்த தன் மார்பகங்களில் குழந்தையின் வாயை வைத்து அதனால் பாலுட்டத் தொடங்கினாள். இந்த வகையில் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்தாள். ஆனால் துஷ்டர்களைக் கொல்லுவதற்காக வந்துள்ள பகவானை யார் கொல்ல முடியும்? கிருஷ்ணன் தன் இரு சிறு பிஞ்சுக் கையினால் அவளுடைய மார்பகத்தைப் பற்றிக் கொண்டு, பாலை உறிஞ்ச ஆரம்பித்தான். 


சில நொடிகளுக்கெல்லாம் குழந்தை தன் உயிரையே உறிஞ்சிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். வலி தாங்காமல் கத்தினாள். "போதும் போதும் என்னை விட்டுவிடு" என்று அலறினாள். அலறிக் கொண்டே அவள் குழந்தையைத் தன் மார்பகத்திலிருந்து எடுக்கப் பார்த்தாள். ஆனால் கிருஷ்ணனோ பால் குடிப்பதை நிறுத்துவதாக இல்லை. இன்னும் அதிக சந்தோஷத்துடனும் மும்முரத்துடனும் அவன் பால் குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது அவள் அலறல் சத்தத்தினால் பூமியே அதிர்ந்தது. பூதனை தன் உண்மை உருவமான அரக்கி உருவம் பெற்று செத்து கீழே விழுந்தாள். ஆனால் பயமற்ற அந்தக் குழந்தையோ அவள் உடலின் மீது அங்கும் இங்கும் தவழ்ந்து சென்று விளையாடத் தொடங்கியது.


பூதனை குரலைக் கேட்டு யசோதை அங்கு ஓடி வந்தாள். குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு அப்பால் சென்றாள். குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டு, அதைப் பட்டாடையினால் மூடித் தூங்கச் செய்தாள். ஒன்றுமே நடக்காதது போல குழந்தை நிம்மதியாகத் தூங்கிற்று. அப்போதுதான் நந்தகோபர் மதுராவிலிருந்து திரும்பி வந்தார். அரக்கி செத்துக் கிடப்பதைப் பார்த்து அவர் நடுங்கினார். உடனே அவர் ஆயவர்கள் பலரை அழைக்க அவர்கள் அந்தப் பூதாகாரமான உடலை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி வெளியே எடுத்து சென்று சிதையின் மீது வைத்து எரித்தார்கள்.

அந்த அரக்கி எப்படி ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து எல்லோரையும் ஏமாற்றி விட்டாள் என்று எல்லோரும் நந்தகோபருக்குச் சொன்னார்கள். பெரிய ஆபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றினதற்காக அவர்கள் எல்லோரும் கடவுளை துதித்தார்கள். எல்லாத் தீய அரக்கர்களையும் அழிப்பதற்காக வந்த கடவுள்தான் அந்தக் குழந்தை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 12

திருமங்கையாழ்வார் 
210. திவ்ய ப்ரபந்தம் - 2038 - திருக்குறுந்தாண்டகம் - 1.7 (7)
இம்மையை மறுமை தன்னை* எமக்கு வீடு ஆகி நின்ற*
மெய்ம்மையை விரிந்த சோலை* வியன் திரு அரங்கம் மேய*
செம்மையைக் கருமை தன்னைத்* திருமலை ஒருமையானை*
தன்மையை நினைவார் என் தன்* தலைமிசை மன்னுவாரே| 

211. திவ்ய ப்ரபந்தம் - 2043 – திருக்குறுந்தாண்டகம் - 2.2 (12)
ஆவியை அரங்க மாலை* அழுக்கு உடம்பு எச்சில் வாயால்* 
தூய்மை இல் தொண்டனேன் நான்* சொல்லினேன் தொல்லை நாமம்*
பாவியேன் பிழைத்தவாறு என்று* அஞ்சினேற்கு அஞ்சல் என்று* 
காவி போல் வண்ணர் வந்து* என் கண்ணுளே தோன்றினாரே|

212. திவ்ய ப்ரபந்தம் - 2044 – திருக்குறுந்தாண்டகம் - 2.3 (13)
இரும்பு அனன்று உண்ட நீரும்* போதரும் கொள்க,* 
என் தன் அரும்பிணி பாவம் எல்லாம்* அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண் இணை களிக்குமாறே| 

213. திவ்ய ப்ரபந்தம் - 2050 – திருக்குறுந்தாண்டகம் - 2.9 (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

214. திவ்ய ப்ரபந்தம் - 2062 - திருநெடுந்தாண்டகம் - 2.1 (11)
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்* 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்* 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்க கில்லாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்* 
மட மானை இது செய்தார் தம்மை* 
மெய்யே கட்டு விச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?

215. திவ்ய ப்ரபந்தம் - 2063 - திருநெடுந்தாண்டகம் - 2.2 (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|

216. திவ்ய ப்ரபந்தம் - 2065 - திருநெடுந்தாண்டகம் - 2.4 (14)
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* 
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* 
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை* 
அந்தணர் தம் சிந்தையானை* 
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* 
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* 
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று* 
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே|

217. திவ்ய ப்ரபந்தம் - 2069 - திருநெடுந்தாண்டகம் - 2.8 (18)
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* 
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* 
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* 
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?

218. திவ்ய ப்ரபந்தம் - 2070 - திருநெடுந்தாண்டகம் - 2.9 (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* 
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* 
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* 
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே|

219. திவ்ய ப்ரபந்தம் - 2073 - திருநெடுந்தாண்டகம் - 3.2 (22)
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* 
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி*
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* 
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்* 
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* 
இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே|

220. திவ்ய ப்ரபந்தம் - 2074 - திருநெடுந்தாண்டகம் - 3.3 (23)
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* 
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* 
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
கள் ஊரும் பைந் துழாய் மாலை யானைக்* 
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* 
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே?

221. திவ்ய ப்ரபந்தம் - 2075 - திருநெடுந்தாண்டகம் - 3.4 (24)
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!* 
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* 
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* 
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* 
என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

222. திவ்ய ப்ரபந்தம் - 2076 - திருநெடுந்தாண்டகம் - 3.5 (25)
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* 
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* 
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* 
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

பொய்கையாழ்வார்
223. திவ்ய ப்ரபந்தம் - 2087 - முதலாம் திருவந்தாதி - 1.6 (1)  
ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்*
இன்று மறப்பனோ? ஏழைகாள்!* 
அன்று கரு அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 10 - திருப்பல்லாண்டு 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 10 – காளிங்க நர்த்தனம் ஆடிய 
மதுரைப் பிரானைப் பாடு
திருப்பல்லாண்டு - பத்தாம் பாசுரம்

எந்நாள் எம்பெருமான் * 
உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே*
அடியோங்கள் அடிக்குடில்* 
வீடு பெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித் * 
திரு மதுரையுள் சிலை குனித்து* 
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே* 
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே|


இதில் ஏடு நிலம் பாசுரத்தில் சொல்லப்பட்டு, தீயில் பொலிகின்ற பாசுரத்தில் வந்து சேர்ந்த கைவல்ய நிஷ்டர்களுடன் சேர்ந்து திருப்பல்லாண்டு பாடுகிறார்.

  • எந்நாள் - எந்த தினமோ
  • எம்பெருமான் - ஸ்வாமியே! 
  • உன் தனக்கு - தேவரீர்க்கு 
  • அடியோம் என்று - நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று 
  • எழுத்து - சொல்லானது 
  • பட்ட நாள் - எங்களுடைய வாயில் உண்டாகப் பெற்ற 
  • அந்நாளே - அந்த நாள் முதலாகவே 
  • அடியோங்கள் - அடியோங்களுடைய 
  • அடி குடில் - அடிமைப்பட்ட வீட்டிலுள்ள அனைவரும் 
  • வீடு பெற்று - நல்ல கதியை 
  • உயந்தது காண் - அடைந்து உஜ்ஜீவித்து விட்டோம்
  • செம் நாள் தோற்றி - நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து 
  • திரு மதுரையுள் - அழகிய வட மதுரையிலே கம்ஸனுடைய ஆயுத சாலையில் புகுந்து 
  • சிலை குனித்து - வில்லை வளைத்து முறித்து 
  • ஐந்தலைய - ஐந்து தலைகளையுடய 
  • பை - பரந்த படங்களையுடைய 
  • நாகம் - காளியன் என்னும் நாகத்தின்
  • தலை - தலை மேலே
  • பாய்ந்தவனே - குதித்தவனே! 
  • உன்னை பல்லாண்டு கூறுதும் - தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்

எம்பெருமானுக்கு அடியவர்களாக மாறிய பின் அவர்களும் அவர்களுடைய சந்ததியரும் நல்ல கதியடைந்து உயர்ந்து விட்டார்களாம். எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழ்வதே சிறந்த கதியை கொடுத்து விடும் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆழ்வார். எங்கள் நாயகனே! உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று நாங்கள் என்று எழுதிக் கொடுத்தோமோ, அன்றே அடியவர்களான எங்கள் குடும்பத்தின் சந்ததியினர் எல்லோரும் கைவல்ய மோக்ஷத்தை அடைவதில் இருந்து விடுதலை பெற்று உஜ்ஜீவனத்தை அடைந்தனர். அழகான திருநன்னாளில் திருவவதரித்து, எழில் மிகுந்த திருவடமதுரையில் கம்ஸனின் வில்விழாவில் வில்லை முறித்து, ஐந்து தலைகளைக் கொண்ட விரிந்த பணங்களை உடைய காளியன் என்னும் நாகத்தின் தலை மேலே குதித்து நடனமாடிய எம்பெருமானே! உன்னை நாங்கள் எல்லோரும் கூடி இருந்து பல்லாண்டு பாடுவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.8 

ப⁴வாந் பீ⁴ஷ்மஸ்² ச கர்ணஸ்² ச
க்ருபஸ்² ச ஸமி திஞ்ஜய:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்² ச
ஸௌமத³த்தி ஸ்ததை² வ ச||

  • ப⁴வாந் - மரியாதைக்குரிய தாங்கள்
  • பீ⁴ஷ்மஸ்² - பாட்டனார் பீஷ்மர் 
  • ச - மற்றும் 
  • கர்ணஸ்² - கர்ணன் 
  • ச - மேலும் 
  • க்ருபஸ்² - கிருபாசாரியர் 
  • ச - மேலும் 
  • ஸமி திஞ்ஜயஹ - போரில் எப்போதும் வெற்றி பெறும் 
  • அஸ்²வத்தா²மா - அஷ்வத்தாமன் 
  • விகர்ணஸ்² - விகர்ணன்
  • ச - மேலும் 
  • ஸௌமத³த்தி - சோமதத்தனின் குமாரன் 
  • ஸ்ததா² - மேலும் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ச - மற்றும்

மரியாதைக்குரிய தாங்கள் (துரோணர்), அஸ்தினாபுரத்தின் பிதாமகன் பீஷ்மர், ஆத்ம நண்பன் கர்ணன், பொருநர் கூட்டத்தை வெல்வோரும், தங்களது துணைவியின் சகோதரனுமாகிய கிருபாசாரியர், தங்களது புதல்வன் அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் பாலீகநாட்டு அரசன் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் ஆகியோருடன் மேலும் போரில் எப்போதும் வெற்றி காணும் வீரர்களும் உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.15

யத் பாத³ ஸம்ஸ்² ரயா꞉ ஸூத
முநய꞉ ப்ரஸ²மாயநா꞉|
ஸத்³ய꞉ புநந்த்யுபஸ் ப்ருஷ்டா꞉
ஸ்வர்து⁴ந் யாபோநு ஸேவயா||

  • ஸூத - ஹே! ஸூத மஹரிஷே!
  • ப்ரஸ² மாயநாஹ꞉ - அமைதியை அடைந்தவர்களும்
  • யத்பாத³ ஸம்ஸ்²ரயாஸ் முநயஃ - எந்த மகாவிஷ்ணுவின் பாத ஸேவையை அடைந்தவர்களும் ஆன மஹரிஷிகள்
  • உபஸ் ப்ருஷ்டாஹ - ஸாந்தித்யத்தால் தொடப்பட்டவர்களாய்
  • ஸத்³ய புநந்தி - உடனே பரிசுத்தம் அடையச் செய்கின்றனர் 
  • ஸ்வர்து⁴ந் யாபோ - கங்கை ஜலமோ எனில் 
  • அநு ஸேவயா - சேவிப்பதனாலே பரிசுத்தமாக்குகிறது

ஸூதபுராணிகரே! ஸ்ரீமந்நாராயணனுடைய பாதங்களிலிருந்து பெருகிய கங்கை நதியில் அடிக்கடி நீராடுதல் முதலிய புண்ணிய கர்மங்ளைச் செய்து, தொடர்ந்து சேவிப்பதால்தான் அது ஜீவன்களைப் பரிசுத்தமாக்குகிறது, புனிதப்படுத்துகிறது. ஆனால், பகவானுடைய பாத கமலங்களையே அண்டியவர்களும், மன அமைதியைக் கொண்டவர்களும், சாதுக்களுமான முனிவர்களின் நட்பு ஜீவர்களை உடனே புனிதமாக்குகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||பூர்வ நியாஸம்||

மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் 
உரைநடையாக அநுசந்திக்கும் முறை 
இனி சொல்லப்படுகிறது


அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் தி³வ்ய 
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய|
ஸ்ரீ வேத³ வ்யாஸோ ப⁴க³வாந் ரிஷி:|
அநுஷ்டுப் ச²ந்த³:|
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா 
ஸ்ரீமந் நாராயணோ தே³வதா|


ரிஷி: - ரிஷிஹி
ச²ந்த³: - ச²ந்த³ஹ
விஷ்ணு: - விஷ்ணுஃ
----
அம்ருதாம் ஸூ²த்³ ப⁴வோ பா⁴நுரிதி பீ³ஜம்|
தே³வகீ நந்த³ந: ஸ்ரேஷ்டேதி ஸ²க்தி:||
உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ இதி பரமோ மந்த்ர:|
ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ தி கீலகம்||


நந்த³ந: - நந்த³நஸ்
ஸ²க்தி: - ஸ²க்திஹி
உத்³ப⁴வ: - உத்³ப⁴வஹ
மந்த்ர: - மந்த்ரஹ
----
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³த⁴ர இத் யஸ்த்ரம்|
ரதா²ங்க³ பாணி ரக்ஷோப்⁴ய இதி நேத்ரம்||
த்ரிஸாமா ஸாமக³: ஸாமேதி கவசம்|
ஆநந்த³ம் பர ப்³ரஹ்மேதி யோநி:||


ஸாமக³: - ஸாமக³ஸ்
யோநி: - யோநிஹி
----
ருது: ஸுதர்ஸ²ந: கால இதி தி³க்³ ப³ந்த⁴:|
ஸ்ரீ விஸ்²வரூப இதி த்⁴யாநம்|
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே²| 
ஸஹஸ்ர நாம ஜபே விநியோக³:||


ருது: - ருதுஸ்
ஸுதர்ச’ந: - ஸுதர்ச’நஹ்
ப³ந்த⁴: - ப³ந்த⁴ஹ
விநியோக³: - விநியோக³ஹ

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகா மந்திர நாம ஸ்தோத்ர: மகா மந்திரத்துக்குப் பகவான், வேத வியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்து உதித்த சூரியன் குல விளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் சக்தி; உத்பவ: - க்ஷோபணோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பர ப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ் ஸுதர்சந: - கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகா மந்திரத்தால் காப்பு; எங்கும் நிறைந்தவர் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவருடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ரநாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

மூன்றாம் பகுதி ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் முற்றுப் பெறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

020 அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே|

ராமாயண காலத்தை ரிஷிகளின் காலம் என்றால் மிகையாகாது. தசரதனின் குலகுரு வசிஷ்டர் பிரம்ம ரிஷி. சீதையின் தந்தை ஜனகரும் பிரம்மரிஷி தான். பிராட்டியுடன் பெருமானைச் சேர்த்து கதையின் போக்கை மாற்றும் விசுவாமித்திரரோ ராஜரிஷி! தண்டகாரண்யத்தில் அத்ரி முதற்கொண்டு கௌதமர், காச்யபர், அகத்தியர் என்று கதை நெடுகிலும் ரிஷிகள் தான். எனில், அந்த த்ரேதா யுகம் எவ்வளவு புண்ணிய காலமாக இருந்திருக்க வேண்டும்!


ராம லக்ஷ்மணர்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. உயர்ந்த சீதையை திருக்கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். அதற்காக தான் விஸ்வாமித்ரர் வந்தார். ராமருக்கு பன்னிரண்டு வயதாகிறது. மந்திரிகளை கூப்பிட்டு அவருக்கு பட்டாபிஷேகம் பண்ணுவது குறித்து தசரதன் ஆலோசனை நடத்துகிறார்.  அப்படி பேசிக்கொண்டு இருக்கையில் விஸ்வாமித்ரர் வந்திருப்பதாக ஒருவர் வந்து சொல்கிறார். விஸ்வாமித்ரர் வந்ததில் தசரதனுக்கு பெரு மகிழ்ச்சி. பூர்ண கும்ப மரியாதைகளோடு உள்ளே அழைத்து கொண்டு வந்தார். மகிழ்ச்சி பொங்க "தேவரீருக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன்" என்றார் தசரதன்.


“நான் சித்தாஷ்ராமத்திற்கு போய் ஆறு நாட்கள் ஒரு யக்ஜம் பண்ணுவதாக இருக்கிறேன். அந்த யக்ஜத்தை தடை பண்ணுவதற்காக ராட்சசர்கள் எல்லோரும் வருவார்கள். நானே சாபம் குடுத்து அவர்களை கொன்று விட முடியும். ஆனால் யக்ஜத்தில் தீக்ஷை எடுத்துக் கொள்ள போவதால் நான் சாபம் இட கூடாது. வேறு யாராவது தான் இதை ரக்ஷித்து கொடுக்க வேண்டும். நீ தான் ஷத்ரிய ராஜா. பிராமணனின் காத்து ரக்ஷிக்க வேண்டியது உன் பொறுப்பு தான்." என்று சொன்னார் விஸ்வாமித்ரர். 


தசரதனும் மிகவும் சந்தோஷத்தோடு கேட்டுக் கொண்டு வந்தார். இதை போல நிறைய முறை பலரை ரக்ஷித்து கொடுப்பது இவருக்கு வழக்கம். அதை போல விஸ்வாமித்ரர் கேட்கிறார். ரக்ஷிக்க கிளம்பலாம் என்று சந்தோஷத்தோடு சம்மதிக்கிறார். சட்டென்று விஸ்வாமித்ரர், "உனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு கருப்பு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் உயரமான கருப்பு பிள்ளையை எனக்கு குடு" என்று கூறுகிறார். 


இடி இடித்தார் போல திகைத்து போனார் தசரதன். நம்மை கேட்பார் என்று நினைத்தேன். சிறு குழந்தை ராமரை கேட்கிறாரே என்று உடனே மறுத்து விட்டார். ராமனுக்கு யுத்தம் செய்யும் வயது கூட இல்லையே! அவனை நான் அனுப்புவதாக இல்லை என்றார் தசரதன். விடாமல் விஸ்வமித்ரரும் கேட்டுக் கொண்டே இருந்தார். "என் ராமன் சிறு பிள்ளை. ராக்ஷசர்களோடு யுத்தம் பண்ணும் அளவுக்கு அவனுக்கு சக்தி போதாது. சாமர்த்தியம் கிடையாது. அவனை என்வென்று நீர் நினைத்து கொண்டிருகிரீர்?" என்று தசரதன் விஸ்வமித்ரரை பார்த்து கேட்கிறார்.


அப்பொழுது தசரதனுக்கு விஸ்வாமித்ரர் பதில் கூறுகிறார். "அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா” "நீ அவனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் அவனை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். அவன் யார் என்று உனக்கு தான் புரியவில்லை. “அவனை நான் அறிகிறேன். ராமன் தான் மஹாத்மா என்றும், சத்ய பராக்ரமன் என்றும்,” கூறுகிறார். "பெற்ற எனக்கு தெரியாதா ராமனை பற்றி, அவனோடேயே இருக்கிறேனே எனக்கு புரியாதா" என்றார் தசரதன். அப்படியும் விஸ்வாமித்ரர் விடாமல் சொல்கிறார். உனக்கு தெரியாது. நீ ஆசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு பார்க்கிறாய். நான் ஆசனத்தின் கீழ் இருந்து பரதந்தரனான ராமனை பார்கிறேன். நீயோ கிரீடம் தரித்த முடியோடே ராமனை பார்க்கிறாய். நான் சடமுடியோடே ராமனை பார்க்கிறேன். உனக்கு அர்த்தத்திலேயும், காமத்திலேயும் ஆசை. ராமனை தெரிந்து கொள்ள மாட்டாய். எனக்கு தர்மத்திலேயும் மோக்ஷத்திலேயும் ஆசை. நீ கையில் பிடித்து கொண்டிருப்பது வில். நான் பிடித்து கொண்டிருப்பது புல். உனக்கு கர்ப்பம் ராமன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் ராமருக்கு கர்ப்பம் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு தான் ராமனை தெரியுமே தவிர உனக்கு தெரியாது" என்றார் விஸ்வாமித்ரர்.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ராமரை நன்றாக புரிந்து கொண்ட விஸ்வமித்ரரை போல நான் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்திருந்தால் அவனே எல்லாம் என்று இருந்திருப்பேனே! ராமருடைய பெருமைகளை தெரிந்து கொண்டு வெளியிட்டாரே அதை போல ஞானம் எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வசுதேவரும் நந்தகோபரும்|

கம்சனுக்குக் கப்பம் கட்டுகிறவர்களில் ஒருவர் நந்தகோபர். ஒவ்வொரு வருடமும் அவர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவது வழக்கம். இந்த வருடம் கப்பம் கட்ட வேண்டிய நாள் நெருங்கி விட்டதால் அவர் மதுரா சென்றார். நந்தகோபர் மதுரா வந்திருக்கிறார் என்று கேள்விபட்டதும் வசுதேவர் அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றார். நந்தகோபரும் வசுதேவரும் நெருங்கிய நண்பர்கள். நந்தகோபரைக் கண்டதும் வசுதேவர் அன்பு பொங்க அவரை இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார்.


இருவரும் அவரவர் நலன்களைப் பற்றி வெகு நேரம் விசாரித்தார்கள். தம்முடைய மனைவி ரோகிணிக்கும் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கும் கோகுலத்தில் இடம் கொடுத்ததற்காக வசுதேவர் நந்தகோபருக்கு நன்றி செலுத்தினார். கிருஷ்ணன் தம் குழந்தை என்று அறிவிக்காமல் அந்தக் குழந்தையின் நலனைப் பற்றி விசாரித்தார். கோகுலத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் நந்தகோபர் சொல்ல, அதைக் கேட்டு வசுதேவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.


ஆனால் கோகுலத்தில் எதாவது தகராறு நிகழும் என்று வசுதேவர் எதிர் பார்த்ததனால் விரைவாக ஊர் திரும்பும்படி நந்தகோபரைக் கேட்டுக் கொண்டார். நந்தகோபரும் வசுதேவரிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது நண்பர்களுடன் மாட்டு வண்டிகளில் தம் இருப்பிடமான கோகுலம் திரும்பினார். பயணத்தின் போது நந்தகோபர் கடவுளைத் தியானம் செய்து கொண்டே போனார். ஏதோ ஆபத்து இல்லாவிடில் வசுதேவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் நினைத்து கொண்டே போனார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 11

திருமங்கையாழ்வார் 
184. திவ்ய ப்ரபந்தம் - 1408 - பெரிய திருமொழி - 5.7.1
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்* 
பதங்களும் பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

185. திவ்ய ப்ரபந்தம் - 1409 - பெரிய திருமொழி - 5.7.2
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்* 
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

186. திவ்ய ப்ரபந்தம் - 1410 - பெரிய திருமொழி - 5.7.3
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித்* 
தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்* பிறங்கு இருள் நிறம் கெட* 
ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|

187. திவ்ய ப்ரபந்தம் - 1411 - பெரிய திருமொழி - 5.7.4
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப்* படு திரை விசும்பிடைப் படர*
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

188. திவ்ய ப்ரபந்தம் - 1412 - பெரிய திருமொழி - 5.7.5
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* 
விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

189. திவ்ய ப்ரபந்தம் - 1413 - பெரிய திருமொழி - 5.7.6
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

190. திவ்ய ப்ரபந்தம் - 1414 - பெரிய திருமொழி - 5.7.7
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* 
கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடி செய்து* 
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரி சிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட* 
மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|

191. திவ்ய ப்ரபந்தம் - 1415 - பெரிய திருமொழி - 5.7.8
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய்* ஒரு கால் உடைய தேர் ஒருவன் ஆய்* 
உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து* 
இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப்* பகலவன் ஒளி கெட* 
பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* 
அரங்க மா நகர் அமர்ந்தானே|

192. திவ்ய ப்ரபந்தம் - 1416 - பெரிய திருமொழி - 5.7.9
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* 
ஒரு கால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்* 
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச் சேயன் ஆய்* 
அடியேர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|

193. திவ்ய ப்ரபந்தம் - 1417 - பெரிய திருமொழி - 5.7.10
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே|

194. திவ்ய ப்ரபந்தம் - 1418 - பெரிய திருமொழி - 5.8.1
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* 
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* 
அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

195. திவ்ய ப்ரபந்தம் - 1419 - பெரிய திருமொழி - 5.8.2
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை* 
உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச்* 
செய்த கவினுக்கு இல்லை கைம்மாறு* 
என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே*
உண்பன் நான் என்ற ஒண் பொருள்* 
எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

196. திவ்ய ப்ரபந்தம் - 1420 - பெரிய திருமொழி - 5.8.3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* 
மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* 
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* 
உன் அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

197. திவ்ய ப்ரபந்தம் - 1421 - பெரிய திருமொழி - 5.8.4
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* 
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர்* கொடிய செய்வன உள* 
அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

198. திவ்ய ப்ரபந்தம் - 1422 - பெரிய திருமொழி - 5.8.5
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* 
மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* 
எனக்கும்ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

199. திவ்ய ப்ரபந்தம் - 1423 - பெரிய திருமொழி - 5.8.6
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* 
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி* 
நின் சரண் என சரண் ஆய்த்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்* எண்ணிய பேர் அருள்* 
எனக்கும் அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

200. திவ்ய ப்ரபந்தம் - 1424 - பெரிய திருமொழி - 5.8.7
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*
கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

201. திவ்ய ப்ரபந்தம் - 1425 - பெரிய திருமொழி - 5.8.8
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*
எந்தை நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து*
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

202. திவ்ய ப்ரபந்தம் - 1426 - பெரிய திருமொழி - 5.8.9
துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில்*
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* 
அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு* 
அடியேன் அறிந்து* 
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|

203. திவ்ய ப்ரபந்தம் - 1427 - பெரிய திருமொழி - 5.8.10
மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன்* ஒன்னலர் தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி*அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே|

204. திவ்ய ப்ரபந்தம் - 1506 - பெரிய திருமொழி - 6.6.9 
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* 
பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்* 
ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்* 
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

205. திவ்ய ப்ரபந்தம் - 1571 - பெரிய திருமொழி - 7.3.4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை* 
வம்பு ஆர் புனல் காவிரி*
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி* 
என் மனம் தாழ்ந்து நில்லாதே|

206. திவ்ய ப்ரபந்தம் - 1664 - பெரிய திருமொழி - 8.2.7
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* 
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|

207. திவ்ய ப்ரபந்தம் - 1829 - பெரிய திருமொழி - 9.9.2
புனை வளர் பூம் பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை* 
மூவுலகும் படைத்த* முதல் மூர்த்தி தன்னை*
சினை வளர் பூம் பொழில் சூழ்* திருமாலிருஞ்சோலை நின்றான்*
கனை கழல் காணும்கொலோ* கயல் கண்ணி எம் காரிகையே?

208. திவ்ய ப்ரபந்தம் - 1978 - பெரிய திருமொழி - 11.3.7
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும் கை வளைகள்*
என்னோ கழன்ற?* இவை என்ன மாயங்கள்?*
பெண் ஆனோம்* பெண்மையோம் நிற்க* 
அவன் மேய அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே?

209. திவ்ய ப்ரபந்தம் - 2029 - பெரிய திருமொழி - 11.8.8
அணி ஆர் பொழில் சூழ்* அரங்க நகர் அப்பா!*
துணியேன் இனி* நின் அருள் அல்லது எனக்கு*
மணியே மணி மாணிக்கமே* மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை* பரஞ்சோதீ|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்