About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 74

மநோ ஜவஸ் தீர்த்த² கரோ 
வஸு ரேதா வஸு ப்ரத³:|
வஸு ப்ரதோ³ வாஸு தே³வோ 
வஸுர் வஸுமநா ஹவி:||

  • 695. மநோ ஜவஸ் - மனோபாவத்தில் செயல்படுபவர். சிந்தனையில் வேகமானவர்.
  • 696. தீர்த்த² கரோ - தூய்மைப் படுத்துபவர். புனித நீரின் ஆதாரம். ஸம்சாரப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறார். அவருடைய கரத்தின் ஸ்பரிசமே தூய்மையாக்கும். 
  • 697. வஸு ரேதா - ஒளியையே கருவாகப் பெற்றிருப்பவர். 
  • 698. வஸு ப்ரத³ஹ - நிதியாக உள்ள தன்னையே தருபவர். பெருமை, கண்ணியம் கொடுப்பவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம் தருபவர்.
  • 699. வஸு ப்ரதோ³ - பெருமதிப்பை அளிப்பவர். மோக்ஷம் அளிப்பவர். 
  • 700. வாஸு தே³வோ - வசுதேவருடைய மகன். வியாபித்து விளையாடுபவர். நன்கு அறியப்பட்ட 12 எழுத்துக்கள் கொண்ட வாசு தேவா மந்திரத்தின் அதிபதி. பக்தர்களால் போற்றப்படுபவர். எல்லாவற்றிலும் வாழ்பவர், அவர்களைச் சுற்றிச் செல்ல வைப்பவர்.

ஏழாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 701. வஸுர் - வசிப்பவர். தேடப்படும் சிறந்த செல்வம். பாற்கடலில் வசிப்பவர். வசுவின் வடிவில் இருப்பவர். எல்லாவற்றிலும் வாழ்பவர். பக்தி இல்லாதவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்பவர். அனைவருக்கும் இறுதி வாசஸ்தலம்.
  • 702. வஸுமநா - வசுதேவரிடத்தில் மனம் வைத்தவர். பொன் மனம் கொண்டவர். தூய்மையானவர். தூய்மையான மனம் உடையவர். துன்பங்கள் இல்லாதவர். அனைத்தும் வேறுபாடு இன்றி வசிப்பவர். தன் பக்தர்களிடம் வாத்சல்யம் (பாசம்) நிறைந்த மனம் கொண்டவர். தன் பக்தர்களின் இடையூறுகளை நீக்கும் மனம் கொண்டவர். எல்லா உயிர்களின் தேவைகளையும் முழுமையாக அறிந்தவர். 
  • 703. ஹவிஹி - பெற்றுக் கொள்ளப்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.41 

வ்யவஸா யாத்மிகா பு³த்³தி⁴ர்
ஏகேஹ குரு நந்த³ந|
ப³ஹு ஸா²கா² ஹ்ய நந்தாஸ்² ச 
பு³த்³த⁴யோ வ்யவ ஸாயி நாம்||

  • வ்யவஸாயாத்மிகா - கிருஷ்ண உணர்வில் திடமான உறுதி 
  • பு³த்³தி⁴ர் - உறுதியுடைய புத்தி 
  • ஏகா - ஒன்றே 
  • இஹ - இந்த உலகத்தில் 
  • குரு நந்த³ந - குருகுலத் தோன்றலே! 
  • ப³ஹு ஸா²கா² - பல கிளைகளைக் கொண்ட 
  • ஹி - நிச்சயமாக 
  • அநந்தாஸ்² - எல்லையற்ற 
  • ச - மேலும் 
  • பு³த்³த⁴யோ - புத்திகள் 
  • அவ்யவ ஸாயி நாம் - கிருஷ்ண உணர்வில்லாதவர்களின்

குரு வம்சத்தில் பிறந்தவனே! இவ்வுலகத்தில், திடமான உறுதியுடையோரின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவர்களின் புத்தியோ பல கிளைகளைக் கொண்டது, மேலும் எல்லையற்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.39

அதே² ஹத⁴ந்யா ப⁴க³வந்த இத்த²ம்
யத்³ வாஸுதே³வே கி²ல லோக நாதே²|
குர்வந்தி ஸர்வாத்ம கமாத்ம பா⁴வம்
ந யத்ர பூ⁴ய: பரிவர்த உக்³ர:||

  • அகி²ல லோக நாதே² - எல்லா உலகிற்கும் சரண்யனான
  • வாஸுதே³வே - வாசுதேவன் இடத்தில்
  • இத்த²ம் - இவ்வாறாக உள்ள கேள்விகளால்
  • ஸர்வாத் மகம் - ஏகாந்தமான
  • ஆத்ம பா⁴வம் - ஆத்ம பாவத்தையும்
  • ப⁴க³வந்த - சர்வக்ஞர்களான நீங்கள்
  • குர்வந்தி யத்³ - செய்கிறீர்களோ
  • அதே² ஹத⁴ந்யா -  இவ்வுலகில் அது காரணமாக நீங்கள் யாவரும்  க்ருதார்த்தர்களாவீர்
  • யத்ர -  எந்த ஆத்ம தத்வம் ஏற்பட்ட அளவில்
  • பூ⁴யஃ  உக்³ரஹ பரிவர்த ந - மறுபடியும்  பயங்கரமான ஜனன மரணாதியான சுழல் இல்லை

சௌநகாதி மகரிஷிகளே! நீங்களன்றோ உண்மையை அறிந்தவர்கள்! பெரும் புண்ணியப் பேறு பெற்றவர்கள்! ஏனெனில், அகில உலகத்திற்கும் ஒப்பற்ற தலைவராகிய பகவானிடம் இவ்வாறு பக்தி தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, இடையூறின்றி மனத்தைச் செலுத்தி வருகிறீர்கள். ஆகவே, துயரமான கர்ப்ப வாஸத்தை மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கும் பிறப்பிறப்பு என்ற சூழலில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.39

நந்தி³ க்³ராமே கரோத்³ ராஜ்யம் 
ராமா க³மந காங்க்ஷயா|
க³தே து பர⁴தே ஸ்ரீமாந் 
ஸத்ய ஸந்தோ⁴ ஜிதேந்த்³ரிய:|| 

  • ராமா க³மந காங்க்ஷயா - ஸ்ரீராமர் திரும்பி வருவதிலேயே ஆவல் கொண்டு
  • நந்தி³ க்³ராமே - நந்தி கிராமத்தில்
  • ராஜ்யம் -  ராஜ்யப் பரிபாலனத்தை
  • அகரோத்³ -  செய்தார்
  • பர⁴தே - பரதன்
  • க³தே து - போன பின்
  • ஸ்ரீமாந் -  ஸ்ரீமனாய்
  • து - இருந்தும்
  • ஸத்ய ஸந்த⁴ - ஸத்ய ஸந்தரான
  • ஜிதேந்த்³ரியஹ -  இந்த்ரியங்களை ஜெயித்தவரான

ஸ்ரீராமரின் வரவை எதிர்பார்த்து, நந்திக் கிராமத்தில் இருந்து, அந்தக் கோசல ராஜ்யத்தை ஆண்டார். வாய்மைக்குக் கட்டுப்பட்டவரும், புலன்களை வென்றவரும், அற்புதனுமான,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 84 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 84 - பாற்கடல் கடைந்த பரந்தாமன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

அடைந்திட்டு அமரர்கள்* ஆழ் கடல் தன்னை* 
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி* 
வடம் சுற்றி* வாசுகி வன் கயிறாகக்* 
கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
கார்முகில் வண்ணனே! சப்பாணி|

  • அமரர்கள் - துர்வாஸ முனிவரது சாபத்தினால் தாம் இழந்த ஐஸ்வர்யத்தைப் பெறுதற்காக, தேவர்கள்
  • அடைந்திட்டு - உன்னைச் சரண் அடைந்ததற்காக
  •  ஆழ்கடல் தன்னை - உன்னுடைய படுக்கும் இடம் என்றும் பாராமல், ஆழமான க்ஷிராப்தியை நீ 
  • விடைந்திட்டு - நெருங்கி
  • மந்தரம் - மந்தர பர்வதத்தை (மலையை)
  • மத்து ஆக - கடைவதற்குரிய மத்தாகும்படி
  • நாட்டி - நேராக நிறுத்தி
  • வாசுகி - வாசுகியென்னும் பாம்பினை
  • வன் வடம் - வலிய கயிறாக்கி அந்த மந்தர மலையாகிற மத்திலே
  • கயிறு ஆக சுற்றி - கடையும் கயிறாகச் சுற்றி 
  • கடைந்திட்ட - அமிர்தம் வரும் வரை கடைந்த
  • கைகளால் - திருக்கைகளால்
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும் 
  • கார்முகில் - கருத்த மேகம் (காளமேகம்)  போன்ற 
  • வண்ணனே! - நிறமுடையவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

தேவர்கள் எம்பெருமானிடம் சரணமடைந்ததை உத்தேசித்து, ஆழமான க்ஷீராப்தி ஸாகரத்தை நெருங்கி, மந்தார மலையை மத்தாக எடுத்து நிறுத்தி, வாசுகியென்னும் பாம்பை கயிறாக மத்தில் (மலையில்) கட்டி, பாற்கடல் கடைந்த அத்திருக் கைகளால் சப்பாணி கொட்டவும் ! மேகம்போன்ற நிறமுடையவனே, சப்பாணி கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 023 - திருதேரழுந்தூர் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||023. திருதேரழுந்தூர்|| 
||திருவழுந்தூர் - மாயவரம்|| 
||இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 45 - 2

திருமங்கையாழ்வார்
023. திவ்ய ப்ரபந்தம் - 1610 - பெரிய திருமொழி - ஏழாம் பத்து - 7.7.3
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள் உடையாய்* 
அடியேனைச் செய்யாத உலகத்திடைச் செய்தாய்*
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்* 
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்*
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1611 - பெரிய திருமொழி - 7.7.4
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன்*
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே* 
மாதவனே மதுசூதா* மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்*
நரனே நாரணனே திருநறையூர்* நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே* 
ஆதி வராகம் முன் ஆனாய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1612 - பெரிய திருமொழி - 7.7.5
விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்ப்*
பரியோன் மார்வுஅகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்* பண்பாளா பரனே பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*
கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1613 - பெரிய திருமொழி - 7.7.6
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ணச் சொன்னார்* சொல்லி நகும் பரிசே* 
பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா* 
தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்* 
கிரேத திரேத துவாபர கலியுகம்* இவை நான்கும் முன் ஆனாய்*
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1614 - பெரிய திருமொழி - 7.7.7
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்* 
கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்* 
எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக் கொணாப்* 
போகமே நுகர்வான் புகுந்து* 
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1615 - பெரிய திருமொழி - 7.7.8
நெடியானே கடி ஆர்கலி நம்பீ* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை*
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து* காவல் செய்த அக் காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்* 
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி*
அடியேனைப் பணி ஆண்டு கொள்எந்தாய்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1616 - பெரிய திருமொழி - 7.7.9
கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறிக்* 
கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்* 
நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா புள் கொடியாய் நெடுமாலே*
தீ வாய் நாகணையில் துயில்வானே* 
திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1617 - பெரிய திருமொழி - 7.7.10
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை*
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்* மங்கைக் குல வேந்தன்*
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு* மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1618 - பெரிய திருமொழி - 7.8.1
செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்*
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த*
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்*
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம்* ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

032. திவ்ய ப்ரபந்தம் - 1619 - பெரிய திருமொழி - 7.8.2
முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண*
முனிவரொடு தானவர்கள் திசைப்ப* 
வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்*
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்* 
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச்*
சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி*
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1620 - பெரிய திருமொழி - 7.8.3
குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக்*
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று*
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன*
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்*
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு*
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய*
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1621 - பெரிய திருமொழி - 7.8.4
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கண் குன்றம்*
திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றி ஆகி*
இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி*
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்*
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்க*
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல*
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1622 - பெரிய திருமொழி - 7.8.5
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகித்*
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள* உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்*
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை*
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்*
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1623 - பெரிய திருமொழி - 7.8.6
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி*
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்*
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்*
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச்*
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1624 - பெரிய திருமொழி - 7.8.7
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகிப்*
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ*
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

038. திவ்ய ப்ரபந்தம் - 1625 - பெரிய திருமொழி - 7.8.8
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து* மழ விடை அடர்த்துக் குரவை கோத்து*
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய்* 
உண்டு உகந்த மாயோன் காண்மின்*
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்*
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

039. திவ்ய ப்ரபந்தம் - 1626 - பெரிய திருமொழி - 7.8.9
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற*
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி*
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்*
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித்*
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்*
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|

040. திவ்ய ப்ரபந்தம் - பெரிய திருமொழி - 7.8.10
பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய்ப்* பாரைப்
படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்*
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்*
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்*
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே|

041. திவ்ய ப்ரபந்தம் - 1854 - பெரிய திருமொழி - 10.1.7
கூந்தலார் மகிழ்* கோவலன் ஆய்* 
வெண்ணெய் மாந்து அழுந்தையில்* கண்டு மகிழ்ந்து போய்* 
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே|

042. திவ்ய ப்ரபந்தம் - 2066 - திருநெடுந்தாண்டகம் - 2.5 (15)
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும்* 
கடல் கிடந்த கனியே! என்றும்*
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி*
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்*
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்*
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு*
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே*
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே|

043. திவ்ய ப்ரபந்தம் - 2077 - திருநெடுந்தாண்டகம் - 3.6 (26)
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்*
தேன் அதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்*
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த*
அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை*
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான்*
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று*
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது*
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே|

044. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.5 (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*

045. திவ்ய ப்ரபந்தம் - 2777 - பெரிய திருமடல் - 7.5 (65)
அள்ளல் வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை*
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 95

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமரின் ஆச்சர்யம்|

கிருஷ்ணர் முதல் பிடி அவல் சாப்பிட்டதுமே உலகத்தின் செல்வம் முழுவதையும் அவர் சுதாமருக்கு வழங்கி விட்டார். இரண்டாம் பிடி அவல் சாப்பிட்டால், ருக்மிணியே பக்தன் வீட்டுக்குப் போய்ப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். அந்தத் தர்ம சங்கடமான நிலையைத் தடுப்பதற்காகத் தான் அவள் இரண்டாம் பிடி அவலைக் கிருஷ்ணர் சாப்பிடாமல் தடுத்தாள். மறுநாள் காலை, கிருஷ்ணரிடம் விடைப்பெற்று கொண்டு, அவர் தமது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிருஷ்ணர் அவரோடு சிறிது தூரம் சென்று விடை கொடுத்தனுப்பினார். 


செல்வம் வேண்டும் என்று சுதாமர் கிருஷ்ணரை ஒரு பொழுதும் வேண்டியதில்லை. இந்த அற்பப் பொருளை நாடி அவரிடம் சென்றோமே என்று வெட்கப்பட்டார். ஆனால் கிருஷ்ணரைத் தரிசித்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

"கிருஷ்ணர் எத்தனை அன்புள்ளம் கொண்டவர் என்பதை இன்று நான் பார்த்தேன். கிழிந்த அழுக்கான உடைகளை அணிந்துள்ள இந்த ஏழையை அவர் அன்பாக தழுவிக் கொண்டார். நானோ அற்பனுக்கும் அர்ப்பன். அவரோ தேவர்களுக்கெல்லாம் தேவர்! இருந்தும் என்னைத் தழுவிக் கொண்டாரே! அவருடைய எல்லையற்ற அன்புதான் என்னே!" என்று நினைத்துக் கொண்டே சுதாமர் வீடு திரும்பினார். 

என்ன ஆச்சரியம்! பணம் வேண்டுமென்று சுதாமர் கிருஷ்ணரைக் கேட்கவேயில்லை, இருந்தும் அவருடைய பழைய குச்சுவீடு இருந்த இடத்தில ஒரு பெரிய மாளிகை இருந்தது! அவரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. எங்கோ பார்த்தாலும் நந்தவனங்களும் பூங்காக்களும் இருந்தன. "என்ன இது! இது எந்த இடம்! என்னுடைய பழைய குடிசை எங்கே?" என்று கேட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

புராண லக்ஷணங்கள்

ஸ்கந்தம் 02

படைப்பின் ரஹசியங்களையும் பகவான் உபதேசித்த சதுஸ்லோகீ பாகவதத்தையும் நாரதர்க்கு எடுத்துச் சொன்னார் ப்ரும்மா. நாரதர் அவற்றை வியாஸருக்குக் கூறினார்.

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.


“அரசே! புராணம் என்பது பத்து லக்ஷணங்கள் கொண்டது. அவை அத்தனையும் கொண்டது ஸ்ரீமத் பாகவதம். ஸர்கம், விஸர்கம், ஸ்தானம், போஷணம், ஊதிகள், மன்வந்தரங்கள், பகவத் கதைகள், நிரோதம், முக்தி, ஆஸ்ரயம் ஆகியவையே பத்து லக்ஷணங்களாகும். 

பகவானின் நியமனத்தால் ஏற்பட்ட முக்குண பரிமாணங்களால் தோன்றிய பஞ்சபூதங்கள், சப்தம் போன்ற தன்மாத்திரைகள், ஐம்புலன்கள், அஹங்காரம், மஹத் முதலியவை பற்றிக் கூறுவது ஸர்கம்.

விராட் புருஷனிடமிருந்து தோன்றிய ப்ரும்மதேவரின் படைப்புகளைப் பற்றிக்கூறுவது விஸர்கம்.

ஜீவன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் இறைவனின் பெருமைகளே ஸ்தானம் ஆகும்.

தன் பக்தர்களிடம் இறைவன் காட்டும் கருணையே போஷணம் ஆகும்.

அன்புடன் மக்களைக் காக்கும் தூய தர்மத்தைப் பின்பற்றும் மனு என்னும் அரசர்களைப் பற்றிக் கூறுவது மன்வந்தரக் கதைகள்.

ஜீவனைக் கர்மத் தளைகளில் மாட்டி விடும் வாஸனைகளைப் பற்றிக் கூறுவது ஊதிகள் ஆகும்.

பகவானின் பற்பல திருத்தோற்றங்களையும், பக்தர்களின் கதைகளையும் கூறுவது ஈசானு கதைகள் அல்லது பகவத் கதைகள் ஆகும்.

இறைவன் யோக நித்ரை புரியும் போது, ஜீவன் உபாதிகளுடனேயே இறைவனோடு கலப்பது நிரோதம்.

நான் என்ற அஹங்காரத்தைத் துறப்பது முக்தி. அதுவும் விளக்கப்படுகிறது.

அசைவனவும், அசையாதனவும் தோன்றுவதற்கு ஆதாரமான இறைவனிடமே அவை அனைத்தும் லயமாகின்றன. இதுவே ஆஸ்ரயம். இதை விளக்குவதற்கு ஏராளமான உதாரணங்களும், அனுபவக்கதைகளும் கூறப்படுகின்றன.

ஐம்பொறிகளில் எதை எடுத்துக் கொண்டாலும், அதன் உருவம், அதன் அதிஷ்டான தேவதை, அதன் உணர்ச்சி மூன்றும் உண்டு. அனைத்திற்கும் ஜீவன் பொதுவானது.

கண்ணை எடுத்துக் கொண்டால் பஞ்சபூதங்களால் ஆன கோளம் ஆதி பௌதிகம். அதன் பார்வைக்கு தேவதை சூரியன். அது ஆதி தைவிகம். பார்க்கும் சக்தி ஞானமே வடிவான பகவான். அது ஆத்யாமிகம். இம்மூன்றும் ஒரே ஜீவனுக்குள் வெளிப்படுகிறது. இம்மூன்றிலும் ஒன்றில்லாவிடில் மற்றொன்றை நம்மால் அறிய முடியாது. மூன்றையும் சாட்சியாக இருந்து அறிபவர் பரமாத்மா. அவரே ஆஸ்ரயன் ஆவார்.

விராட் புருஷன் ப்ரும்மாண்டத்தைப் பிளந்து கொண்டு வெளி வந்து தான் வசிக்க இடம் வேண்டி நீரைப் படைத்தார். விராட் புருஷனுக்கே நரன் என்ற பெயருண்டு. அவரிடமிருந்து தோன்றியதால் நீருக்கு நாரம் என்ற காரணப் பெயர் வந்தது. நீரிலேயே ஆயிரம் வருஷங்கள் குடியிருந்ததால் நாராயணன் என்று பெயர் வந்து விட்டது.

பகவானின் சங்கல்பத்தாலேயே பஞ்ச பூதங்கள், கர்மாக்கள், அவற்றின் கதி, அவற்றை செயல்படுத்தும் காலம், அதன் இயல்பு, இவையனைத்தையும் அனுபவிக்கும் ஜீவன் அனைவர்க்கும் செயல்படும் சக்தி கிட்டுகிறது. பகவான் செயல்படாமல் இருப்பாராயின் இவை அனைத்துமே சக்தியற்றுச் செயல் படாமல் இருக்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 103

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 73

ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் 
ஸ்துதிஸ் ஸ்தோதா ரண ப்ரிய:|
பூர்ண: பூரயிதா புண்ய: 
புண்ய கீர்த்தி ரநாமய:||

  • 684. ஸ்தவ்யஸ் - வணங்கத் தகுந்தவர். புகழுக்கு தகுதியானவர்.
  • 685. ஸ்தவ ப்ரியஸ் - வணக்கத்தை, வழிபாட்டை அன்புடன் ஏற்பவர். எந்த ரூபத்தில் புகழப்பட்டாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவர்.
  • 686. ஸ்தோத்ரம் - வழிபாடாக, துதியாக இருப்பவர்.
  • 687. ஸ்துதிஸ் - வழிபடப்படுபவர்.  துதிக்கப்படுபவர். புகழப்படுபவர்.
  • 688. ஸ்தோதா - தன்னைப் துதிப்பவரைப் புகழ்பவர்.
  • 689. ரண ப்ரியஹ - போர் செய்வதில் ஆர்வமுடையவர்.
  • 690. பூர்ணஃ - நிறைவானவர்.
  • 691. பூரயிதா - நிறைவிப்பவர். தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்.
  • 692. புண்யஃ - புண்ணியன், புனிதன் ஆக்குபவர்.
  • 693. புண்ய கீர்த்திர் - புண்ணியமான கீர்த்தனத்துக்குரியவர்.
  • 694. அநா மயஹ - பெரும் பிறவிப் பிணியைப் போக்குபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.40 

நேஹா பி⁴க்ரம நா ஸோ²ஸ்தி 
ப்ரத்ய வாயோ ந வித்³யதே|
ஸ்வல்ப மப் யஸ்ய த⁴ர்மஸ்ய 
த்ராயதே மஹதோ ப⁴யாத்||

  • ந - இல்லை 
  • இஹ - இந்த யோக 
  • அபி⁴ க்ரம - முயற்சியில் 
  • நாஸ² - இழப்பு 
  • அஸ்தி - இங்கு 
  • ப்ரத்ய வாயோ - குறைவு 
  • ந - என்றுமில்லை 
  • வித்³யதே - இதில் 
  • ஸ்வல்பம் - சிறிதே 
  • அபி - ஆயினும் 
  • அஸ்ய - இதில் 
  • த⁴ர்மஸ்ய - கடமையின் 
  • த்ராயதே - விடுவிக்கிறது 
  • மஹதோ - மாபெரும் 
  • ப⁴யாத் - பயத்திலிருந்து

இங்கு, இந்த பயன் கருதா யோக முயற்சியில் குறைவோ, இழப்போ இல்லை. இது, சிறிதே ஆயினும், இதில் கடமையின் மாபெரும் பயத்திலிருந்து விடுவிக்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.38

ஸ வேத³ தா⁴து: பத³வீம் பரஸ்ய
து³ரந்த வீர்யஸ்ய ரதா²ங்க³ பாணே:|
யோ மாயயா ஸந்த தயாநு வ்ருத்யா
ப⁴ஜேத தத் பாத³ ஸரோஜ க³ந்த⁴ம்||

  • ய - எவனொருவன் 
  • அமாயயா -  கபடம் இல்லாததும்
  • ஸந்த தயா - இடைவிடாததுமான
  • அநு வ்ருத்யா - திரும்பத் திரும்ப அனுவிருத்தியால்
  • தத் பாத³ -  அந்த இறைவனது பாத கமலங்களின்
  • ஸரோஜ க³ந்த⁴ம் - மகரந்த வாசனையை 
  • ப⁴ஜேத  - ஸேவிக்கின்றானோ 
  • ஸ - அவன்
  • தா⁴துஃ -  பகவானாயும்
  • பரஸ்ய - பரப்பிரும்ம ஸ்வரூபனாயும்
  • து³ரந்த வீர்யஸ்ய -  அதிகமான வீரியத்தை உடையவனுமாய் உள்ள 
  • ரதா²ங்க³ பாணேஹே - ஸ்ரீ சக்ரபாணியின் 
  • பத³வீம் வேத³  - ஸ்வரூபத்தை அறிகிறான்

கையில் சக்கரத்தை ஏந்திய பகவானின் சக்தியையோ, உண்மை ஸ்வரூபத்தையோ, சாதாரண மனிதன் தெரிந்து கொள்ள முடியாது. அவை எல்லையற்றவை. ஆனால், அவனுடைய திருவடித் தாமரைகளின் மகரந்த நறுமணத்தை, வஞ்சனை இன்றி இடைவிடாமல் அன்புடன் சேவிக்கும் பக்தனே பகவானின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.38

ஸ காம மநவாப் யைவ 
ராம பாதா³ வுபஸ் ப்ருஸ²ந்|| 

  • ஸ - அவர்
  • காமம் -   மனம் திருப்தியை
  • ஏவ - முழுதும்
  • அநவாப்ய -   அடையாமல்
  • ராம பாதா³வ் -  ஸ்ரீராமருடைய பாதுகைகளை தொட்டு
  • உபஸ் ப்ரு ஸ²ந் - ஸேவித்துக் கொண்டு

இவ்வாறு விருப்பம் நிறைவேறாத பரதன், ஸ்ரீராமரின்
 பாதுகைகளைத் தீண்டி, ஸேவித்துக் கொண்டு, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 83 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 83 - சிங்கமதாகிய பேய் முலை உண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

அளந்திட்ட தூணை* அவன் தட்ட* 
ஆங்கே வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்* 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி* 
பேய் முலை உண்டானே! சப்பாணி|

  • அளந்திட்ட - தானே அளந்து கட்டின
  • தூணை - கம்பத்தை
  • அவன் - அந்த ஹிரண்யாஸுரனே
  • தட்ட - சீறி உதைக்க
  • ஆங்கே - அவன் புடைத்த அந்த இடத்திலேயே
  • வாள் உகிர் - கூர்மையான நகங்களை உடைய
  • சிங்கம் உரு ஆய் - நரஸிம்ஹ மூர்த்தியாய்
  • வளர்ந்திட்டு - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
  • உளம் - ஒரு வேளை அந்த இரண்யாஸுரன்  அனுகூலனாகக் கூடுவானோ என்று அவன் மனதை 
  • தொட்டு - பரிசோதித்துப் பார்த்து பின்பு
  • இரணியன் - அந்த இரண்யாஸுரனுடைய
  • ஒளி - ஒளி பொருந்திய
  • மார்பு அகலம் - அகன்ற மார்பை
  • பிளந்திட்ட - நகத்தாற் பிளந்த கைகளால் 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • பேய் -  பூதனையின்
  • முலை - விஷப் பாலை
  • உண்டானே - உண்டவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

பகவான் இருக்கிறானா என பரிசோதிப்பதின் பொருட்டு, ஹிரண்யாசுரன் அவன் கட்டின தூணையே தகர்க்க, அத்தூணில் இருந்து பெரிய வடிவாய் கூரிய நகங்களுடன் சிங்க வடிவில் திருவவதரித்து, அவன் மனம் ஒரு வேளை மாறுமோ என நிதானித்து, அப்படி மாறாததால், ஒளி பொருந்திய அவனுடைய அகன்ற மார்பை கிழித்த கைகளால் சப்பாணி கொட்டவும்! பூதனையின் விஷப்பாலை சுவைத்தவனே! சப்பாணி கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 023 - திருதேரழுந்தூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||023. திருதேரழுந்தூர்|| 
||திருவழுந்தூர் - மாயவரம்|| 
||இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 45 - 1

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1588 - பெரிய திருமொழி - 7.5.1
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ* 
நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர் போலும்* 
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்* 
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1589 - பெரிய திருமொழி - 7.5.2
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள* 
பாரதத்துத் தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவ தேவன் ஊர் போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1590 -  பெரிய திருமொழி - 7.5.3
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐ இரண்டும்* 
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர் போலும்* 
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்* 
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1591 - பெரிய திருமொழி - 7.5.4
வெள்ளத்துள் ஓர் ஆல் இலை மேல் மேவி* அடியேன் மனம் புகுந்து* 
என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர் போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1592 - பெரிய திருமொழி - 7.5.5
பகலும் இரவும் தானே ஆய்ப்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர் போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1593 - பெரிய திருமொழி - 7.5.6
ஏடு இலங்கு தாமரை போல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர் போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1594 - பெரிய திருமொழி - 7.5.7
மாலைப் புகுந்து மலர் அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து* 
என் நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர் போலும்*
வேலைக் கடல் போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1595 - பெரிய திருமொழி - 7.5.8
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து* 
என் நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர் போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்* 
ஆடகத்தின் அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1596 - பெரிய திருமொழி - 7.5.9
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்தப்* போன புனிதர் ஊர் போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1597 - பெரிய திருமொழி - 7.5.10
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட*
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை* சொல்லப் பாவம் நில்லாவே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1598 - பெரிய திருமொழி - 7.6.1
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானைத்* தழல் ஆழி வலத்தானை*
செங் கமலத்து அயன் அனையார்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டு கொண்டேனே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1599 - பெரிய திருமொழி - 7.6.2
கோ ஆனார் மடியக்* கொலை ஆர் மழுக் கொண்டருளும்*
மூவா வானவனை* முழு நீர் வண்ணனை அடியார்க்கு*
ஆஆ என்று இரங்கித்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
தேவாதி தேவனை * யான் கண்டு கொண்டு திளைத்தேனே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1600 - பெரிய திருமொழி - 7.6.3
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* 
அணி அழுந்தூர் உடையானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1601 - பெரிய திருமொழி - 7.6.4
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று பொன்றாமை* 
அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை* அன்று ஆவின் நறு நெய்* 
அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் நின்றானை * 
அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1602 - பெரிய திருமொழி - 7.6.5
கஞ்சனைக் காய்ந்தானைக்* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை * அடியேன் கண்டு கொண்டேனே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1603 - பெரிய திருமொழி - 7.6.6
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தான் அவனுக்கும்* 
உணர்வதனுக்கு அரியானை* அழுந்தூர் மறையோர்கள்* 
அடிபணியும் கரியானை * அடியேன் கண்டு கொண்டு களித்தேனே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1604 - பெரிய திருமொழி - 7.6.7
திரு வாழ் மார்வன் தன்னைத்* திசை மண் நீர் எரி முதலா*
உரு ஆய் நின்றவனை* ஒலி சேரும் மாருதத்தை*
அரு ஆய் நின்றவனைத்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கரு ஆர் கற்பகத்தைக்* கண்டு கொண்டு களித்தேனே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1605 - பெரிய திருமொழி - 7.6.8
நிலை ஆள் ஆக* என்னை உகந்தானை* 
நில மகள் தன் முலை ஆள் வித்தகனை* முது நான்மறை வீதிதொறும்*
அலை ஆர் கடல் போல் முழங்கும்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கலை ஆர் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1606 - பெரிய திருமொழி - 7.6.9
பேரானைக்* குடந்தைப் பெருமானை* 
இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள்* 
மலர் மங்கை நாயகனை* ஆரா இன் அமுதைத்* 
தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கார் ஆர் கரு முகிலைக் * கண்டு கொண்டு களித்தேனே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1607 - பெரிய திருமொழி - 7.6.10
திறல் முருகன் அனையார்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அற முதல்வன் அவனை* அணி ஆலியர் கோன் மருவார்*
கறை நெடு வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐ இரண்டும்*
முறை வழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வான் உலகே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1608 - பெரிய திருமொழி - 7.7.1
திருவுக்கும் திரு ஆகிய செல்வா* தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா*
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே* உலகு உண்ட ஒருவா திரு மார்பா*
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை என்றால்*
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து* 
ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1609 - பெரிய திருமொழி - 7.7.2
பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி*
பாவை பூமகள் தன்னொடும் உடனே வந்தாய்* 
என் மனத்தே மன்னி நின்றாய்* மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா பௌழியா தைத்திரியா* சாம வேதியனே நெடுமாலே*
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்* 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்