About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 19 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 153

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 153

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 15

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ ஸுராஸுர க³ந்த⁴ர்வம்‌
ஸயக்ஷோரக³ ராக்ஷஸம்‌|
ஜக³த்வஸே² வர்த்ததேத³ம்‌
க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம்||


தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.17 

யஸ்த் வாத் மரதி ரேவ ஸ்யாது³
ஆத்ம த்ருப் தஸ்²ச மாநவ:|
ஆத்மந் யேவ ச ஸந்துஷ்டஸ்
தஸ்ய கார்யம் ந வித்³யதே||

  • யஸ் - யாரெருவன் 
  • து - ஆனால் 
  • ஆத்மரதிர் - தன்னில் மகிழ்கிறானோ 
  • ஏவ - நிச்சயமாக 
  • ஸ்யாது³ - இருக்கிறான் 
  • ஆத்ம த்ருப்தஸ்² - ஆத்ம திருப்தியுற்று 
  • ச - மேலும் 
  • மாநவஹ - மனிதன் 
  • ஆத்மநி - தன்னில் 
  • ஏவ - மட்டும் 
  • ச - மேலும் 
  • ஸந்துஷ்டஸ் - பூரணமாக இருத்தல் 
  • தஸ்ய - அவனுக்கு 
  • கார்யம் - கடமை 
  • ந - இல்லை 
  • வித்³யதே - இருப்பது

ஆனால், யாரொருவன் ஆத்ம திருப்தியுற்று, தன்னில் மகிழ்கிறானோ, மேலும், அம்மனிதன் தன்னில் மட்டும் பூரணமாக இருக்கிறனோ, அவனுக்கு, கடமைகள் இருப்பது இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.10

ந யத்³வசஸ்² சித்ர பத³ம் ஹரேர் யஸோ²
ஜக³த் பவித்ரம் ப்ரக்³ருணீத கர்ஹிசித்|
தத்³வாயஸம் தீர்த² முஸ²ந்தி மாநஸா
ந யத்ர ஹம்ஸா நிரமந்த்யு ஸி²க்க்ஷயா:||

  • சித்ர பத³ம் - அழகான பதங்களோடு கூடியதான
  • யத்³ வசஸ்² - எந்த வாக்கானது
  • ஜக³த் பவித்ரம் - உலகை பரிசுத்தமாக்கக் கூடிய
  • ஹரேர் யஸோ² - ஸ்ரீ வாஸுதேவனது கீர்த்தியை
  • கர்ஹிசித் - ஓர் இடத்திலும்
  • ந  ப்ரக்³ருணீத - சொல்லவில்லையோ
  • தத்³ - அப்படிப்பட்ட வாக்கை
  • வாயஸம் தீர்த²ம் - எச்சில் குழியாகவே
  • உஸ²ந்தி - எண்ணுகிறார்கள்
  • மாநஸா -  ஏனென்றால் ஸத்வ குண பூயிஷ்டமான மனத்தை உடையவர்களும் 
  • உஸி²க்க்ஷயாஹ - அழகான பரப்பிரும்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களுமான
  • ஹம்ஸா - பரம ஹம்ச பரிவ் ராஜகர்களான ஸன்யாஸிகள்
  • யத்ர - அந்த வாக்கில்
  • ந நிரமந்த்யு - சந்தோஷம் அடைவதில்லை

எச்சிலைத் தின்னும் காக்கைகள் இருக்குமிடத்திற்கு, மானஸஸரஸ்ஸில் விளையாடும் அன்னப் பறவைகள் வருமா? அது போல, அழகான வர்ணனைகள் இருந்தும் அனைத்து உலகையும் பரிசுத்தமாக்கும் வாசுதேவனின் பெருமை கூறப்படாத நூலை, பகவானது திருவடித் தாமரையில் பக்தி பூண்ட, சத்துவ குணம் படைத்த பெரியோர்கள் ஒருக்காலும் கேட்க மாட்டார்களே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.88

புநராக்² யாயிகாம் ஜல்பந் 
ஸுக்³ரீவ ஸஹி தஸ்²ததா|
புஷ்பகம் தத் ஸமாருஹ்ய 
நந்தி³ க்³ராமம் யயௌ ததா³|| 

  • ததா³ - பின்பு
  • ஸுக்³ரீவ -  ஸுக்ரீவனுடன்
  • ஸஹிதஸ்² -  கூடினவராய்
  • தத் -  அந்த
  • புஷ்பகம் -  புஷ்பக விமானத்தில்
  • ஸமாருஹ்ய -  எழுந்தருளி
  • ததா -  அப்பொழுது
  • ஆக்²யாயிகாம் -  பூர்வ வ்ருந்தாந்தத்தை
  • புநர் - மறுபடியும்
  • ஜல்பந் -  சொல்லிக் கொண்டு
  • நந்தி³ க்³ராமம் - நந்தி கிராமத்தை 
  • யயௌ - அடைந்தார்

ஸுக்ரீவனுடன் கூடிய ஸ்ரீராமர், புஷ்பக விமானத்தில் ஏறி, காடுகளில் தான் வாழ்ந்து கழித்த பழைய வரலாற்றை மீண்டும் சொன்ன படியே நந்திக் கிராமத்திற்குச் சென்றார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 128 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 128 - அரவணையான் ஆயரேறு
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்

அரவு அணையாய் ஆயர் ஏறே!* 
அம்மம் உண்ணத் துயில் எழாயே* 
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்* 
இன்றும் உச்சி கொண்டதாலோ*
வரவுங் காணேன்; வயிறு அசைந்தாய்* 
வன முலைகள் சோர்ந்து பாயத்* 
திரு உடைய வாய் மடுத்துத்* 
திளைத்து உதைத்துப் பருகிடாயே| (2)

  • அரவு அணையாய்! - ஆதிசேஷன் மீது சயனிப்பவனே!
  • ஆயர் ஏறே! - இடையர்களுக்குத் தலைவனே!
  • அம்மம் உண்ண - பால் பருகுவதற்கு
  • துயிலெழாயே! - தூக்கம் தெளிந்து படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும் 
  • இரவும் உண்ணாது - நீ நேற்று இரவும் பால் உண்ணாமல்
  • உறங்கி நீ போய் - தூங்கிப் போனாய்
  • இன்றும் - இன்றைய தினமும்
  • உச்சி கொண்டது - பொழுது விடிந்து உச்சிப் போய் விட்டது
  • ஆல் - ஆதலால்
  • வரவும் காணேன் - இருப்பினும் நீ எழுந்து வருவதைக் காணோம், உனக்குப் பசியில்லை என்றா
  • வயிறு அசைந்தாய் - வயிறு தளர்ந்தாய்
  • வன முலைகள் - எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் நெறித்து
  • சோர்ந்து பாய - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
  • திரு உடைய - அழகை உடைய
  • வாய் மடுத்து - உன் வாயை வைத்து
  • திளைத்து - செருக்கி
  • உதைத்து - கால்களாலே செல்லமாக உதைத்துக் கொண்டு
  • பருகிடாயே - பால் உண்பாய்

பாம்பைப் படுக்கையாகக் கொண்டவனும், இடையர்களின் தலைவனுமான கண்ணன் இரவு முழுதும் முலைப்பால் அருந்தாமலே உறங்கிவிட, பகலாகியும் பால் உண்ண வராமல் இருந்ததைக் கண்டு யசோதை, கண்ணா! விழித்துக் கொள்! நீயே எழுந்து வந்து, பால் நிரம்பிய என்னுடைய முலைகளில் உன் அழகிய திருவாயை பொருத்தி கால்களை உதைத்தவாறே பாலை நன்றாகப் பருக வேண்டும், என்கிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோவிந்தராஜன், பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்
  • பெருமாள் உற்சவர் - தேவாதி தேவன்
  • தாயார் மூலவர் - புண்டரீகவல்லி 
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - போக ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - புண்டரீக ஸாஸ்ஸு, 12 தீர்த்தங்கள்
  • விமானம் - ஸாத்வீக
  • ப்ரத்யக்ஷம் - சிவன், தில்லை மூவாயிரவர், வ்யாக்ர பாதர்
  • ஆகமம் - வைகாநஸம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 2 ஆழ்வார்கள் (குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்)
  • பாசுரங்கள் - 32

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

--------------------
ஸ்தல புராணம்

மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப் போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்த போது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்ற படியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்த படி இருப்பது சிறப்பு. உற்சவர் தேவாதி தேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக் கூடத்துள்ளான் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ர சபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடி மரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோப முத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, "தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்," என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து மோக்ஷம் கொடுத்தார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒரு சமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ர பாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக் கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்த ராஜரை வணங்கி மோக்ஷம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.

அசுர குலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், "தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் ஸ்வாமி எழுந்தருள வேண்டும்' என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள் புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் "தில்லை நகர்' எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கஜேந்திர வரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணு கோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.

கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டனர். அவர் தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப் போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக் காட்டினார். பார்வதி தேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும் படி இருவரும் ஆடிக் கொண்டிருக்க இறுதியில் தன் வலக் காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு. பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 96

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 41

ஸ்கந்தம் 03

கபிலர் தொடர்ந்து ஜீவனின் நிலைமையை விளக்குகிறார்.

கருப்பைக்குள் ஞானத்தோடு இருக்கும்‌ ஜீவன் வெளியில் வந்ததும் அனைத்தையும் மறந்து விடுகிறது.

குழந்தையின் எண்ணத்தை றிந்து வளர்க்கத் தெரியாதவர்களால் வளர்க்கப்படும் அக்குழந்தை அது பசியால் அழும்போது வயிற்றுவலி என்று நினைத்து வேப்பெண்ணெய்யையும், வயிற்று வலியால்‌அழும் போது பசியென்று பாலையும் ‌கொடுக்கிறார்கள்.

எதையும் சொல்லத் தெரியாமல், பரிதாபமாகக் கஷ்டப்படுகிறது.

வியர்வையால் உண்டாகும் புழு பூச்சிகள் கடிக்கும்போது சொறிந்துகொள்ளவோ, எழுந்து உட்காரவோ சக்தியற்று விளங்குகிறது. இவ்வாறு ஐந்து வயது வரை குழந்தைப் பருவமும், சிறுபிள்ளைப்பருவமும் (பௌகண்டம் ஐந்து முதல் பதினாறு வயது வரை) கழிகிறது. பின் யௌவனமான காளைப்பருவத்தில் விதம்விதமான விருப்பங்களால் அலைக்கழிக்கப்படுகிறான்.

அவை கிட்டாமல் கோபமடைகிறான். சாதிக்க முடியாமல் போனால் துக்கமடைகிறான்.


வயது ஆக ஆக, கர்வமும் கோபமும் வளர்கிறது. இவனைப் போன்று சுக போகங்களைத் தேடி அலைபவர்களுடன் பகைமை கொள்கிறான். அது அவன் அழிவிற்கே காரணமாகிறது.

அறியாமையால் புத்தி மாறாட்டம்‌கொண்டு பஞ்ச பூதங்களுடைய இவ்வுடலைத்தான் என்று எண்ணுகிறான்.

இவ்வுடல் கிழட்டுத்தனம், நோய் போன்ற பல துன்பங்களுக்கு ஆளாகிறது. அது அறியாமை மற்றும் கர்மத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஜீவாத்மா அவ்வுடலைப் பற்றிக் கொண்டு நிற்கிறது.

அதைக் காப்பாற்றப் பல கர்மங்களைச் செய்கிறது. கர்மங்களின் பயனாக உடல் கிடைக்கிறது. அதைக் காக்க மீண்டும் கர்மங்கள். இப்படிக் கர்மங்களாலேயே கட்டப்பட்டு திரும்ப திரும்ப பிறவித்தளையில் உழல்கிறது.

வயிற்றுக்காகவும் இன்பசுகத்திற்காகவும் பாடுபடும் ஜீவன் பாவாத்மாக்களோடு நட்புகொண்டு பாவச் செயல்களில் ஈடுபடுவானாகில் நரகத்தையே அடைகிறான்.


தீயோர் இணக்கத்தால் உண்மையுணர்தல், அகமும் புறமும் தூய்மையாக்கும் சௌசம், தயை, நாவடக்கம், பரமபுருஷார்த்தத்தில் செல்லும்‌ மனம், தனதான்யமாகிற செல்வம், தவறான செயல்களைக் கண்டு வெட்கம், புகழ், பொறுமை, புலனடக்கம், மேன்மை பற்றிய சிந்தனை அனைத்தும் பாழ்படும். ஆகவே, தீய செயல்கள் புரிவோர், உடலே ஆன்மா என்ற பற்றுடையோர், பெண்கள் பின் அலைவோர், மனநிறைவற்ற அஸத்துக்கள் ஆகியோருடன் ஒருபோதும்‌ நட்பு கொள்ளக்கூடாது.

மற்ற சேர்க்கையால் ஏற்படும் தீமையைவிட பெண்வழிச் சேர்க்கையால் ஏற்படும் தீமை மிக அதிகம்.

ப்ரும்மா முதல் அவரால் படைக்கப்பட்ட ரிஷிகள், தேவர்கள் அனைவரும் பெண்ணுருவான மாயையால் பாதிக்கப்படுபவர்கள்தாம்.

மேலும்‌ பெண்ணாசையின் தீமைகளை விளக்கினார் கபிலர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்