About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம். Show all posts
Showing posts with label ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம். Show all posts

Friday, 2 January 2026

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

பஞ்சாநந ஆப்³ஜ ப⁴வ ஷண்முக² வாஸ வாத்³யாஹ்
த்ரை விக்ரமாதி³ சரிதம் விபு³தா⁴ஹ் ஸ்துவந்தி|
பா⁴ஷாபதிஹ் பட²தி வாஸர ஸுத்³தி⁴ மாராத்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||

  • பஞ்சாநந - ஐந்து முகங்களையுடையவர் (சிவன்)
  • ஆப்³ஜ ப⁴வ - தாமரையில் பிறந்தவர் (பிரம்மா)
  • ஷண்முக² - ஆறு முகங்களையுடையவர் (முருகன்)
  • வாஸ - வாசம் செய்பவர், இருப்பவர்
  • வாத்³யாஹ் - முதலானோர், போன்றவர்கள்
  • த்ரை விக்ரம - திரிவிக்கிரமன் (விஷ்ணுவின் வாமன அவதாரம்)
  • ஆதி³ - முதலான
  • சரிதம் - சரித்திரம், மகிமை, செயல்கள்
  • விபு³தா⁴ஹ் - தேவர்கள், ஞானிகள்
  • ஸ்துவந்தி - துதிக்கின்றனர், புகழ்கின்றனர்
  • பா⁴ஷாபதி - வாக்கின் தலைவர், பிரம்மா (அல்லது குரு கிரகம் எனவும் பொருள் கொள்ளலாம்)
  • ஹ் - அவர்
  • பட²தி - படிக்கிறார், ஓதுகிறார்
  • வாஸர - நாள்
  • ஸுத்³தி⁴  - தூய்மை, சுத்தம்
  • மாராத் - அருகில் இருந்து, தொடர்ந்து
  • ஸேஷாத்³ரி - சேஷ மலை (திருமலை)
  • ஸேக²ர - சிகரம், உச்சி
  • விபோ⁴  - எல்லாம் வல்ல இறைவனே
  • தவ - உன்னுடைய
  • ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், சுப்ரபாதம்

ஸேஷாத்ரி மலையின் நாயகனே! தேவர்களில் சிறந்தவரும், நல்ல அறிவும் உள்ளவருமான சிவபெருமான், நான்முகன், முருகப் பெருமான், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் மூன்று அடிகளால் ஓங்கி நின்று உலகளந்த உன்னுடைய த்ரிவிக்ரம அவதார சரிதங்களை போற்றித் துதிக்கின்றனர். தேவ குருவாகிய ப்ரஹஸ்பதியும் வணக்கத்துடன், உடன் இருந்து திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் முதலியவற்றை விளக்கும் பஞ்சாங்கத்தை படிக்கின்றார், நீ துயில் எழுந்து திருச்செவி சாற்ற வேண்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

அத்ரி ஆதி³ ஸப்த ருஷயஸ் ஸ முபாஸ்ய ஸந்த்⁴யாம்
ஆகாஸ ஸிந்து⁴ கமலாநி மநோஹ ராணி|
ஆதா³ய பாத³யுக³ம் அர்ச்சயிதும் ப்ரபந்நாஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ!⁴ தவ ஸுப்ரபா⁴தம்||

  • அத்ரி - அத்ரி முனிவர்
  • ஆதி³ - முதலான, போன்ற
  • ஸப்த - ழு
  • ருஷயஸ் - ரிஷிகள், முனிவர்கள்
  • ஸ முபாஸ்ய - நன்கு வழிபட்டு, தியானித்து
  • ஸந்த்⁴யாம் - சந்தியா கால வழிபாடு (காலை/மாலை சந்தி நேர பூஜை)
  • ஆகாஸ - ஆகாயம், வானம்
  • ஸிந்து⁴ - கடல்
  • கமலாநி - தாமரை மலர்கள்
  • மநோஹ ராணி - மனதைக் கவரும், அழகான
  • ஆதா³ய - எடுத்துக் கொண்டு
  • பாத³ யுக³ம் - இரு திருவடிகள்
  • அர்ச்சயிதும் - அர்ச்சனை செய்ய, பூஜிக்க
  • ப்ரபந்நாஹ் - சரணடைந்தவர்கள், வந்தடைந்தவர்கள்
  • ஸேஷாத்³ரி - சேஷ மலை (திருமலை)
  • ஸேக²ர - சிகரம், உச்சி
  • விபோ⁴ - இறைவனே, பெருமானே
  • தவ - உமது, உன்னுடைய
  • ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், நல்விடியல்

ஆதிஸேஷ மலை ஸிகரத்தில் எழுந்தருளி இருக்கும் பரிபூரணனே! அத்ரி முதலான ஏழு முனிவர்களும் ஸந்த்யா வந்தனம் செய்த பின்னர், உன் திருவடிகள் இரண்டையும் மலரிட்டு அர்ச்சிப்பதற்காக, மனத்தை கவரக் கூடிய ஆகாஸ கங்கையில் முளைத்து எழுந்த தாமரை மலர்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். உனக்கு நற்பொழுது புலருக!  வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 2 December 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

தவ ஸுப்ரபா⁴தம் அரவிந்த³ லோசநே
ப⁴வது பிரஸந்ந முக² சந்த்³ர மண்ட³லே|
விதி⁴ ஸங்கரேந்த்³ர வநிதாபி⁴ர் அர்ச்சிதே
விருஷ ஸைலநாத² த³யிதே த³யாநிதே⁴||

  • தவ – உனக்கு, உம்முடைய
  • ஸுப்ரபா⁴தம் – இனிய காலை வணக்கம், நற்காலை வாழ்த்து
  • அரவிந்த³  – தாமரை
  • லோசநே – கண்களை உடையவளே
  • ப⁴வது – ஆகட்டும், உண்டாகட்டும்
  • பிரஸந்ந – தெளிந்த, மகிழ்ச்சியான, கருணை நிறைந்த
  • முக² – முகம்
  • சந்த்³ர – சந்திரன்
  • மண்ட³லே – வட்டம், மண்டலம்
  • விதி⁴ – பிரம்மா (படைப்புக் கடவுள்)
  • ஸங்கர – சிவபெருமான்
  • இந்த்³ர – இந்திரன்
  • வநிதாபி⁴ர் – பெண்களால், தேவியர்களால்
  • அர்ச்சிதே – வணங்கப்பட்டவளே, பூஜிக்கப்பட்டவளே
  • விருஷ – விருஷபம், காளை (இங்கு விருஷாத்ரி மலையைக் குறிக்கும்)
  • ஸைல – மலை
  • நாத² – நாதன், இறைவன்
  • த³யிதே – பிரியமானவளே, அன்புக்குரியவளே
  • த³யா – கருணை
  • நிதே⁴  – களஞ்சியம், பொக்கிஷம்

தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவளே! முழு நிலவு போன்ற தெளிந்த முகம் உடையவளே! நான்முகன், சிவபெருமான், இந்திரன் முதலானவர்களின் துணைவியர்கள் ஆகிய கலைமகள், மலைமகள் (பார்வதி), இந்திராணி (சசி தேவி) ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவளே! அருளுக்கு உறைவிடம் ஆனவளே! திருவேங்கடமுடையானின் அன்பிற்கு உரியவளான திருத்தேவியே! எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 29 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

மாதஸ் ஸமஸ்த ஜக³தாம் மது⁴கைட பா⁴ரேஹ்
வக்ஷோ விஹாரிணி மநோஹர தி³வ்ய மூர்த்தே|
ஸ்ரீ ஸ்வாமிநி, ஸ்ரீத ஜந ப்ரிய தா³ந ஸீலே
ஸ்ரீ வேங்கடேஸ த³யிதே தவ ஸுப்ரபா⁴தம்|| (2)

  • மாதஸ் - தாயே, அம்மையே
  • ஸமஸ்த - முழுவதும், எல்லா
  • ஜக³தாம் - உலகங்களின், பிரபஞ்சத்தின்
  • மது⁴கைட பா⁴ரேஹ் - மது, கைடபன் என்ற அசுரர்களின் பகைவனான விஷ்ணுவின் 
  • வக்ஷோ - மார்பு, திருமார்பு
  • விஹாரிணி - விளையாடுபவளே, வசிப்பவளே
  • மநோஹர - மனதை கவரும், அழகான
  • தி³வ்ய - தெய்வீகமான, புனிதமான
  • மூர்த்தே - உருவமே, திருமேனியே
  • ஸ்ரீ ஸ்வாமிநி - ஸ்ரீயின் தலைவியே, மகாலட்சுமியே
  • ஸ்ரீத ஜந - உன்னைச் சரணடைந்த மக்கள், உன்னை நம்பியவர்கள்
  • ப்ரிய - அன்பான, பிரியமான
  • தா³ந - கொடை, வழங்குதல்
  • சீலே - குணமுடையவளே, இயல்புடையவளே
  • ஸ்ரீ வேங்கடேஸ - ஸ்ரீ வேங்கடேச பெருமாளின்
  • த³யிதே - அன்புக்குரியவளே, பிரியமானவளே
  • தவ - உனது, உம்முடைய
  • ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், நற்காலை வாழ்த்து

எல்லா உலகங்களுக்கும் தாயாக விளங்குபவளே! மது கைடபவர்கள் என்ற இரு அசுரர்களையும் அழித்து அருளிய திருமாலின் வல மார்பினில் விளையாடுபவளே! அனைவரின் உள்ளத்தையும் கவரக் கூடிய திவ்ய வடிவம் உடையவளே! தம்மைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதில் இயல்பான தன்மை உடையவளே! அன்பிற்கு உரியவளே! பிராட்டியே! உனக்கு நற்பொழுது புலருக! கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 2

உத்திஷ்டோ²த் திஷ்ட² கோ³விந்த³
உத்திஷ்ட² க³ருட³த்வஜ|
உத்திஷ்ட² கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்க³ளம் கு³ரு|| (2)

  • உத்திஷ்ட² - எழுந்திரு, விழித்தெழு
  • உத்திஷ்ட² - எழுந்திரு (மீண்டும் வலியுறுத்தல்)
  • கோ³விந்த³ - கோவிந்தா (ஸ்ரீ கிருஷ்ணர், திருமால் பெயர்)
  • உத்திஷ்ட² - எழுந்திரு
  • க³ருட³ - கருடன்
  • த்வஜ - கொடி, கொடியை உடையவன்
  • உத்திஷ்ட² - எழுந்திரு
  • கமலா - தாமரை போன்றவள்; மகாலட்சுமி
  • காந்த - கணவன், அன்புக்குரியவர், பிரியமானவர்
  • த்ரை - மூன்று
  • லோக்யம் - உலகங்கள் (தேவலோகம், பூலோகம், பாதாளம்)
  • மங்க³ளம் - மங்களம், நன்மை, சுபம்
  • கு³ரு - செய், அருள் செய், ஏற்படுத்து

கோவிந்தா! விரைவாகத்  துயில் எழுவாய்! கருடனைக்  கொடியில் கொண்டவனே! பள்ளி  எழுந்தருள்வாய்! செந்தாமரையில் பெருமிதம் கொண்டு வீற்றிருக்கும் திருமகளின் நாயகனே! பள்ளி எழுந்தருள்! மூன்று உலகங்களையும் நீ மங்களம் உடையதாக செய்வாயாக! நீ திருக்கண் விழிக்காவிடில் மூன்று உலகங்களும் செம்மை பெறாது ஒழியும். ஆதலால்  அவைகளை வாழ வைப்பதற்காகவே நீ திருக்கண் மலர வேண்டும்! துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 28 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

கௌசல்யா ஸுப்ரஜா இராம
பூர்வா ஸந்த்⁴யா ப்ரவர்த்ததே|
உத்திஷ்ட² நர ஸார்தூ³ல
கர்த்தவ்யம் தெ³ய்வம் ஆஹ்நிகம்|| (2) 

  • கௌசல்யா - கௌசல்யை (இராமரின் தாய்)
  • ஸுப்ரஜா - நல்ல புதல்வன், சிறந்த மகன்
  • இராம - இராமா!
  • பூர்வா - முன், ஆரம்பமான
  • ஸந்த்⁴யா - சந்தியா காலம் (விடியற்காலை நேரம்)
  • ப்ரவர்த்ததே - தொடங்குகிறது, நடைபெறுகிறது
  • உத்திஷ்ட² - எழுந்திரு
  • நர - மனிதர்களில் சிறந்தவனே, மனிதனே
  • ஸார்தூ³ல - புலி போன்ற வீரனே (சிங்கம் போன்ற பராக்கிரமம் உடையவனே)
  • கர்த்தவ்யம் - செய்ய வேண்டியது
  • தெ³ய்வம் - இறைவனுக்குரிய, தெய்வ சம்பந்தமான
  • ஆஹ்நிகம் - தினசரி கடமைகள், காலை அனுஷ்டானங்கள்

கோஸலையின் நற்புதல்வனே! மாந்தர்களில் உயர்ந்தவனே! இராமபிரானே! ஸூரியன் கிழக்குத் திக்கிலே எழுகின்ற காலைப் பொழுது ஆரம்பம் ஆகிறது. தேவர்கள் முதலானவர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய நித்ய கருமங்கள் அனுஷ்டாநங்கள் செய்யப்பட வேண்டும். ஆதலால் நீ உன் தம்பியுடன் துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம்

பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாகக் கருதப்படுகிறார். இவர் பல கடும் தவங்களையும், யாகங்களையும் புரிந்து வந்தார்.

இவர் வேள்வி நடத்தும் போது தாடகை உள்ளிட்ட அரக்கர்கள் அவரின் வேள்விக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் கலங்கிய விஸ்வாமித்திரர் ஒரு முறை அயோத்தியை ஆண்டு வந்த தசரதனின் அரசவைக்கு வந்து அரக்கர்களிடமிருந்து தங்களின் வேள்வியைக் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வேள்வியைக் காக்க ராமனை அனுப்பி வைக்க வேண்டினார். அதன் படி ராமனையும், லட்சுமணனையும் அனுப்பி வைக்கப்பட்டார்.
வெகுதூரம் விசுவாமித்திரருடன் வனத்தில் நடந்து சென்றனர். நீண்ட நேரம் கால்நடையாகச் சென்றதால் கங்கைக்கரையில் ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அரசகுமாரர்களாக இருதாலும் அதிக கலைப்பு காரணமாக ராம லட்சுணர்கள் வனத்தில் தங்களை மறந்து நன்றாக உறங்கினர்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவர்களை அதிகாலையில் விஸ்வாமித்திரர் எழுப்ப முற்பட்டார். ஆனால் எழுந்திருக்காததால், அவர் கங்கை நதிக்கு சென்று நீராடி, ஜப தபங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டும் திரும்பி வந்தார்.

அப்போதும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். ராம- லட்சுணர்களை எழுப்பத் தொடங்கிய அவர் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருந்தாராம். இருப்பினும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது உருவானது தான் “கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா” எனும் சுப்ரபாதம். தனக்கு தெய்வக் குழந்தையான ராம - லட்சுமணனை எழுப்பும் பாக்கியம் கிடைத்ததே என எண்ணி ஆனந்தம் கொண்டார். ஆனால் அவர்கள் எழுந்திருக்காத நிலையில் தினமும் ராமனை எழுப்பக்கூடிய கெளசல்யா எத்தனை பேறு பெற்றிருப்பார் என நினைத்துக் கொண்டார்.

அதனால் ராமனை தினமும் எழுப்பக் கூடிய ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என சுப்ரபாதத்தைப் பாடி எழுப்பத் தொடங்கினார்.

விசுவாமித்திரர் அவர்களை கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலி போல் மனிதா செய்திடுவாய் இறைகடமை! என கெளசல்யா சுப்ரஜா என்ற அவர்களை எழுப்பக் கூடிய பாடலை விசுவாமித்திரரின் வார்த்தைகளை கொண்டே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

ராமனை மட்டும் இந்த சுப்ரபாதத்தில் குறிப்பிடப்படுகின்றதே ஏன் லட்சுமணனை குறிப்பிடப்படவில்லை என நம்மில் பலருக்கு கேள்வி எழும். அதற்கு காரணம் திருமாலின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம் தான் லட்சுமணன். மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமனை எழுப்பிய அவர், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனை எழுப்பவில்லை. அவரை எழுப்பவும் முடியாது. திருமாலை எழுப்பினால் ஆதிசேஷனும் எழும்பி விடுவார். 
அதனால் தான் லட்சுமணனை இதில் சேர்க்கவில்லை.

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் என்பது திருமலை வேங்கடேஸ்வரப் பெருமானை அதிகாலையில் எழுப்பி, தெய்வீக அருளையும், நல்ல தொடக்கத்தையும் வேண்டிப் பாடப்படும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரத் தொகுப்பாகும். இது "சுப்ரபாதம்" எனப்படும் காலைப் பிரார்த்தனை வகையைச் சார்ந்தது. 29 ஸ்தோத்திரங்கள் கொண்ட சுப்ரபாதம் மற்றும் 11 ஸ்தோத்திரங்கள் கொண்ட ஸ்தோத்ரம் என நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரதிவாதி பயங்கர ஸ்ரீ அனந்தாச்சாரியார் இயற்றினார். இதை தினமும் காலையில் பாராயணம் செய்வது பக்தியை வளர்க்கிறது, எதிர்மறை ஆற்றல்களை விரட்டுகிறது மற்றும் ஆன்மாவை விஷ்ணுவின் அருளுடன் இணைக்கிறது. சமஸ்கிருதத்தில் "சுப்ரபாதம்" என்றால் "சுபமான விடியல்" என்று பொருள். 
ஹஸ்திகிரிநாத அண்ணன் (14 ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீ வைணவ குடும்பத்தில் பிறந்தார், அவருடைய சந்ததியினர் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரின் சீடர்கள். அண்ணன் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் மகனான நயன வரதாச்சாரியாரின் சீடர். காலப்போக்கில் அவர் அனைத்து அறிவுப் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்று ஒரு திறமையான அறிஞரானார். இந்த நேரத்தில், சிறந்த அறிஞரும் வேதாந்தத்தின் நிபுணருமான நரசிம்ம மிஸ்ரா காஞ்சிபுரத்திற்கு வந்து நாயன வரதாச்சாரியாரை ஒரு விவாதத்திற்கு சவால் விடுத்தார். ஆச்சார்யர் விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை; ஆனால் போகாமல் இருப்பது தோல்வியை ஏற்றுக்கொள்வதாகும். என்ன செய்வது என்று தெரியாமல், ஆச்சார்யர் ஒரு குழப்பத்தில் இருந்தார். தனது குருவை ஏதோ தொந்தரவு செய்வதை அண்ணன் கவனித்தார். அவர் தனது குருவை அணுகி அதற்கான காரணத்தைக் கேட்டார். வரதாச்சாரியார் அவரிடம் எல்லாவற்றையும் கூறினார். அண்ணன் தனது குருவை பணிவுடன் வணங்கி, தனக்காக விவாதத்தில் பங்கேற்க அனுமதி கேட்டார். ஆச்சார்யர் சம்மதித்தார். தனது ஆழ்ந்த அறிவு மற்றும் தொடர்புத் திறனால், அண்ணன் எளிதாக விவாதத்தில் வெற்றி பெற்றார். குரு நாயன வரதாச்சாரியார் தனது சீடரின் அற்புதமான நடிப்பைப் பற்றி கேள்விப்பட்டார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஆச்சார்யர், அவருக்கு "பிரதிவாதி பயங்கரர்" (எதிரியை அச்சுறுத்துதல்) என்ற பட்டத்தை வழங்கினார்! 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமானுக்கு அண்ணன் தொடர்ந்து சேவை செய்து வந்தார். திருமலை வெங்கடேசப் பெருமானின் மகிமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அண்ணன், திருமலைக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்ய முடிவு செய்தார். தனது மனைவியுடன் திருமலையை அடைந்தார். அனந்தாழ்வாரின் சந்ததியினருடன் தன்னை இணைத்துக் கொண்டு, வெங்கடேசப் பெருமானின் "அபிஷேக கைங்கர்யத்தில்" ஈடுபட்டார். தினமும் ஆகாச கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து, வழக்கம் மற்றும் பாரம்பரியத்தின் படி தண்ணீரில் நறுமணப் பொருட்களைச் சேர்த்து, பின்னர் அபிஷேகத்திற்காக புரோஹித்தரிடம் தண்ணீரைக் கொடுத்தார். ஒரு நாள், கோயிலுக்கு நீரை எடுத்துச் செல்லும்போது, ​​ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ஒரு பக்தரை சந்தித்தார். பக்தர் ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் மகா துறவி மணவாள மாமுனிகளின் மகிமைகளை விரிவாகக் கூறினார். அண்ணன் மிகவும் மனமுடைந்து, துறவியைப் பற்றி மேலும் கேட்க விரும்பினார். அவர் நேர உணர்வை இழந்தார், மேலும் இறைவனின் அபிஷேகத்திற்காக அவர் எடுத்துச் செல்லும் தண்ணீரைப் பற்றியும் மறந்துவிட்டார். மறுபுறம், அண்ணனுக்காக வீணாகக் காத்திருந்த புரோஹிதர் அவரைத் தேடி வந்தார். அண்ணன் சத்சங்கத்தில் மூழ்கியிருப்பதைக் கண்ட புரோஹிதர், அண்ணனிடமிருந்து தண்ணீர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சடங்குகளை முடிக்க அவசரமாக கோவிலுக்குச் சென்றார். திடீரென்று, மணம் மிக்க பொருட்கள் தண்ணீரில் வழக்கமாகச் சேர்க்கப்படவில்லை என்பதை அண்ணன் உணர்ந்தார். அவர் புரோஹித்தின் பின்னால் ஓடினார், ஆனால் அவர் கருவறையை அடைந்த நேரத்தில், புரோஹிதர் அபிஷேகத்தைத் தொடங்கினார். அண்ணன் தனது சொந்த அலட்சியத்தால் மிகவும் வருத்தப்பட்டார். அவர் அமைதியாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அபிஷேக நீர் விதிவிலக்காக மணம் மிக்கது, உண்மையில் அவை தெய்வீக "சத்சங்கத்தின் நறுமணத்தைக்" கொண்டு வந்ததால் மற்ற நாட்களை விட மணம் மிக்கது என்று அண்ணன் ஒரு தெய்வீகக் குரலைக் கேட்டார்! உண்மையில், அண்ணனின் சேவைகளால் இறைவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

இது எல்லாம் மகா மணவாள மாமுனிவரின் மகிமையால்தான் என்பதை அண்ணன் உணர்ந்தார். துறவியின் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற ஏங்கி, ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்றார். அவர் மாமுனிகளின் சீடரானார், மேலும் அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்ற தீக்ஷைப் பெயர் வழங்கப்பட்டது. ஸ்ரீ வைஷ்ணவ தாசன் தனது குருவிடமிருந்து ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டு, ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பரப்புவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பல அறிவார்ந்த படைப்புகள் ஸ்ரீ வைஷ்ணவ தாசனுக்குச் சொந்தமானவை. அவர் ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த விளக்கவுரையாளராக இருந்ததால், அவர் ஸ்ரீ பாஷ்யச்சாரியார் என்றும் அறியப்பட்டார். 

ஸ்ரீ வைஷ்ணவ தாசனும் மாமுனிகளும் ஒரு யாத்திரையை மேற்கொண்டு இறுதியாக திருமலையை அடைந்தனர். மாமுனிகள் தனது சீடரிடம் வெங்கடேஸ்வரருக்கு ஒரு சுப்ரபாதம் இயற்றச் சொன்னார். ஸ்ரீ வைஷ்ணவ தாசன் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை இயற்றினார், இது நான்கு பிரிவுகளைக் கொண்டது: சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்) மற்றும் மங்கலம் (14 பாடல்கள்). ஆச்சார்யர் தனது சீடரின் இசையமைப்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் ஆண்டு முழுவதும் (ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும் மார்கழி மாதம் தவிர), ஒவ்வொரு நாளும், அதிகாலையில், சுப்ரபாதம் கருவறையில் ஓதப்படும் என்று கட்டளையிட்டார். ஸ்ரீ வைஷ்ணவ தாசனால் இயற்றப்பட்ட வெங்கடேஸ்வரரின் மகிமைகளைக் கொண்ட அழகான சுப்ரபாதம் இன்றுவரை கருவறை திறக்கும் போது பாடப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்