||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||042. திருக்கோவலூர்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 23 பாசுரங்கள்
001. பொய்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
1. முதலாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2158 - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (77) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2167 - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (86) - 1 பாசுரம்
002. பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2251 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
003. திருமங்கையாழ்வார் - 20 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 15 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1138 - 1147 - இரண்டாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1404 - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1542 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1569 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1641 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் - (இரண்டாம் ஆயிரம்) - 3 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2057, 2058 - முதலாம் திருமொழி - 6, 7 பாசுரங்கள் - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2068 - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17) - 1 பாசுரம்
3. சிறிய திருமடல் - (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
4. பெரிய திருமடல் - (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2776 - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம் (64)
--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|
அந்தாதி
தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன*
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு*
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த*
பூங்கோவல் ஆயன் பொருள்|
- தாமரையான் ஆதி ஆய் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் முதலாக
- தாவரங்கள் ஈறு ஆன - தாவரப் பொருள்கள் இறுதியாகவுள்ள
- சேமம் உயிரும் - உலகத்து வாழ்கின்ற ஜீவராசிகளும்
- செகம் அனைத்தும் - அவற்றிற்கெல்லாம் இடமான எல்லா உலகங்களும்
- பூ மடந்தைக்கு ஆம் கோ - தாமரை மலரில் வசிக்கின்ற இலக்குமிக்கு உகந்த தலைவனும்
- அலாயுதன் பின் ஆ அவதரித்த - கலப்பையை ஆயுதமாக உடைய பலராமனுக்குத் தம்பியாகத் திருவவதரித்தவனுமாகிய
- பூ கோவல் ஆயன் - அழகிய திருக்கோவலூர் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளிய ஆயனாரது
- பொருள் - படைப்புப் பொருள்களாம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment