About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

பலச்ருதி

9. அச்யுதஸ் யாஷ்டகம் 
ய: படே²  தி³ஷ்டத³ம் 
ப்ரேமத: ப்ரத் யஹம் 
பூருஷ: ஸஸ் ப்ருஹம்|
வ்ருத்தத: ஸுந்த³ரம் 
கர்த்ரு விஸ்²வம் ப⁴ரம் 
தஸ்ய வஸ்²யோ ஹரிர் 
ஜாயதே ஸத்வரம்||

  • அச்யுதஸ்ய - அச்யுதனுடைய, அழிவில்லாத இறைவனுடைய 
  • அஷ்டகம் - எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தத் துதியை 
  • யஃ - எவன் ஒருவன்
  • படே²த் - படிக்கிறானோ, பாராயணம் செய்கிறானோ
  • தி³ஷ்டத³ம் - விரும்பிய நன்மைகளை, பலன்களைக் கொடுக்கக்கூடிய இந்த ஸ்தோத்திரத்தை  
  • ப்ரேமதஃ - அன்போடு, பக்தியோடு
  • ப்ரத் யஹம் - தினமும், நாள்தோறும்
  • பூருஷஸ் - மனிதன்
  • ஸஸ் ப்ருஹம் - ஆவலோடு, ஈடுபாட்டோடு 
  • வ்ருத்ததஸ் - அமைப்பிலும் சந்தத்திலும்
  • ஸுந்த³ரம் - அழகியதாக இருக்கும், இந்த அஷ்டகத்தை 
  • கர்த்ரு - உலகைப் படைத்தவனும்
  • விஸ்²வம் ப⁴ரம் - அகிலத்தைத் தாங்குபவனுமாகிய, இறைவனைப் பற்றிய துதி  
  • தஸ்ய - அவனுக்கு, அந்தப் பக்தனுக்கு 
  • வஸ்²யோ - வசம் உடையவனாக, கட்டுப்பட்டவனாக
  • ஹரிர் - ஸ்ரீ ஹரி, மகாவிஷ்ணு 
  • ஜாயதே - ஆகிறான்
  • ஸத்வரம் - மிக விரைவில், உடனடியாக

இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும்  வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில்  திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.

||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

9. யதா³ ததா³ யதா² ததா² 
ததை²வ க்ருஷ்ண ஸத் கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்
ததா² க்ருபா விதீ⁴யதாம்|
ப்ரமாணி காஷ்டக த்³வயம்
ஜபத் யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத் ஸ நந்த³ நந்த³னே 
ப⁴வே ப⁴வே ஸு ப⁴க்திமான்||

  • யதா³ - எப்பொழுதெல்லாம்
  • ததா³ - அப்பொழுதெல்லாம்
  • யதா² - எந்தெந்த வழிகளில், எவ்விதமாக 
  • ததா² - அந்தந்த வழிகளில், அவ்விதமாக 
  • ததை²வ - அதேபோலவே
  • க்ருஷ்ண ஸத் கதா² - கிருஷ்ணரின் மகிமை மிக்க உன்னதமான கதைகள், லீலைகள் 
  • மயா - என்னால்
  • ஸதை³வ - எப்போதும், எப்பொழுதும் 
  • கீ³யதாம் - பாடப் பட வேண்டும், துதிக்கப் பட வேண்டும் 
  • ததா² - மேலும், அப்படியே
  • க்ருபா - உமது கருணை, அருள் 
  • விதீ⁴யதாம் - எனக்கு வழங்கப் பட வேண்டும், பொழியப் பட வேண்டும் 
  • ப்ரமாணிக அஷ்டக த்³வயம் - பிரமாணிகா  என்னும் சந்த அமைப்பில் உள்ள இந்த இரண்டு அஷ்டகங்களை, ஸ்தோத்திரங்களை 
  • ஜபதி - உச்சரித்து, ஜபம் செய்து 
  • அதீ⁴த்ய - படித்து, மனனம் செய்து 
  • ய: - எந்தவொரு
  • புமான் - மனிதன், நபர் 
  • ப⁴வேத் - ஆகிறானோ
  • ஸ: - அவன்
  • நந்த³ நந்த³னே - நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணரிடம்
  • ப⁴வே ப⁴வே - பிறவி தோறும், ஒவ்வொரு பிறவியிலும் 
  • ஸு ப⁴க்திமான் - மிகச் சிறந்த பக்தி உடையவனாக
  • ப⁴வேத் - மாறுவான், ஆகிவிடுவான்

என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

||இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருதம் ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூர்ணம்||
|| ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. குஞ்சிதை: குந்தலைர் 
பாஜமானானனம் 
ரத்ன மௌளிம் லஸத் 
குண்ட³லம் க³ண்ட³யோ:|
ஹார கேயூரகம் 
கங்கணப் ப்ரோஜ் வலம் 
கிங்கிணீ மஞ்சுளம் 
ஸ்²யாமளம் தம் ப⁴ஜே||

  • குஞ்சிதைஹ் - வளைந்த, சுருண்ட 
  • குந்தலைர் - தலை முடியால், கூந்தலால்
  • பாஜமான ஆனனம் - பிரகாசிக்கும் முகத்தை உடையவரை
  • ரத்ன - ரத்தினங்கள் பதித்த
  • மௌளிம் - கிரீடத்தை அணிந்தவரை
  • லஸத் - ஒளிர்கின்ற, பிரகாசிக்கின்ற
  • குண்ட³லம் - காதணிகள்
  • க³ண்ட³யோ: - கன்னங்களில், பிரதிபலிப்பவரை 
  • ஹார - முத்து மாலைகள், நெக்லஸ்கள்
  • கேயூரகம் - தோள்வளைகள், அணிகலன் 
  • கங்கண - கைகளில் அணியும் காப்புகள், வளையல்கள்
  • ப்ரோஜ் வலம் - மிக அதிகமாக பிரகாசிப்பவரை
  • கிங்கிணீ - சதங்கைகளின், கால் மணிகளின்
  • மஞ்சுளம் - இனிய ஓசையை உடையவரை
  • ஸ்²யாமளம் - கருநீல நிறமுடையவரை, மேகவண்ணனை 
  • தம் - அந்த இறைவனை
  • பஜே - நான் வணங்குகிறேன், துதிக்கிறேன்

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற  குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள்  தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. வித³க்³த⁴ கோ³பிகா மனோ
மனோஜ்ஞ தல்ப ஸா²யினம்
நமாமி குஞ்ஜ கானனே 
ப்ரவ்ரத்³த⁴ வன்ஹி பாயினம்|
கிஸோ²ர காந்தி ரஞ்ஜிதம்
த்³ருக³ஞ்ஜனம் ஸுஸோ²பி⁴தம்
க³ஜேந்த்³ர மோக்ஷ காரிணம்
நமாமி ஸ்ரீ விஹாரிணம்||

  • வித³க்³த⁴ - புத்திசாலியான, சாமர்த்தியமுள்ள
  • கோ³பிகா - கோபியர்களின்
  • மனோ - மனதைக் கவர்ந்தவனே! 
  • மனோஜ்ஞ - அழகான, மனதிற்கு இனிய
  • தல்ப - படுக்கையில், இங்கு இலைகள் அல்லது மலர் படுக்கை 
  • ஸா²யினம் - பள்ளிகொண்டிருப்பவனே, துயில்பவனே!
  • நமாமி - நான் வணங்குகிறேன்  
  • குஞ்ஜ - கொடிகள் சூழ்ந்த, புதர்கள் நிறைந்த
  • கானனே - காட்டில், பிருந்தாவனத்தில் 
  • ப்ரவ்ரத்³த⁴ - பெருகி வளர்ந்த, வேகமாகப் பரவிய
  • வன்ஹி - காட்டுத்தீயை
  • பாயினம் - குடித்தவனே, காட்டுத் தீயை விழுங்கி கோபியர்களைக் காத்தவனே! 
  • கிஸோ²ர - இளமைப் பருவத்தின், சிறுவனுடைய
  • காந்தி - ஒளியால், தேஜஸால் 
  • ரஞ்ஜிதம் - பிரகாசிப்பவனே, அழகு செய்பவனே!  
  • த்³ருக்³ - கண்களில்
  • அஞ்ஜனம் - மை தீட்டப் பெற்று 
  • ஸுஸோ²பி⁴தம் - மிக அழகாகக் காட்சியளிப்பவனே! 
  • க³ஜேந்த்³ர - கஜேந்திரன் என்ற யானைக்கு
  • மோக்ஷ - முக்தியை, விடுதலையை 
  • காரிணம் - அளித்தவனே! 
  • நமாமி - நான் வணங்குகிறேன் 
  • ஸ்ரீ - லக்ஷ்மி தேவியுடன், ராதையுடன்  கூடி, மங்களகரமாக
  • விஹாரிணம் - லீலைகள் புரிந்து விளையாடுபவனே! 

நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் - கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. வித்³யுது³த்³ யோதவத் 
ப்ரஸ்பு²ரத் வாஸஸம் 
ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் 
ப்ரோல்ல ஸத்³ விக்³ரஹம்|
வன்யயா மாலயா 
ஸோ²பி⁴தோ ர:ஸ்த²லம் 
லோஹி தாங் க்⁴ரித்³ வயம் 
வாரி ஜாக்ஷம் ப⁴ஜே||

  • வித்³யுது³த்³ யோதவத் - மின்னலின் ஒளியைப் போல
  • ப்ரஸ்பு²ரத் - பிரகாசிக்கின்ற, ஒளி வீசுகின்ற
  • வாஸஸம் - ஆடையை அணிந்திருப்பவர்
  • ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் - மழைக் காலத்து மேகத்தைப் போல, கருமையானவர் 
  • ப்ரோல்ல ஸத்³ - மிக அதிகமாக விளங்குகின்ற, ஒளி வீசுகின்ற
  • விக்³ரஹம் - திருமேனியை உடையவர், உடலமைப்பைக் கொண்டவர் 
  • வன்யயா - காட்டுப் பூக்களால் ஆன
  • மாலயா - மாலையினால்
  • ஸோ²பி⁴தோ - அழகு பெற்ற, விளங்குகின்ற
  • உரஸ் ஸ்த²லம் - மார்பகப் பகுதியை உடையவர்
  • லோஹி தாங் க்⁴ரித்³வயம் - சிவந்த இரு திருவடிகளைக் கொண்டவர்
  • வாரி ஜாக்ஷம் - தாமரை மலர் போன்ற கண்களை உடையவர்
  • வயம் - நாங்கள் அனைவரும்

ப⁴ஜே - அத்தகைய இறைவனை  வணங்குகிறோம், வழிபடுகிறோம்
மின்னலின் ஒளி போல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழை காலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளி சிந்தும்  திருமார்புடையவனே, சிவந்த பாதங்களை உடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. ஸமஸ்த கோ³ப நந்த³னம்
ஹ்ருதாம்பு³ஜைக மோத³னம்
நமாமி குஞ்ஜ மத்⁴யக³ம்
ப்ரஸன்ன பா⁴நு  ஸோ²ப⁴னம்|
நிகாம காம தா³யகம்
த்³ரு க³ந்த சாரு ஸாயகம்
ரஸால வேணு கா³யகம்
நமாமி குஞ்ஜ நாயகம்||

  • ஸமஸ்த - எல்லா, அனைத்து
  • கோ³ப - கோபியர்கள் மற்றும் இடையர்களுக்கு
  • நந்த³னம் - மகிழ்ச்சியை அளிப்பவரை, மகிழ்விப்பவரை 
  • ஹ்ருத் - இதயம் ஆகிய
  • அம்பு³ஜ - தாமரைக்கு
  • ஏக - ஒப்பற்ற, ஒரே
  • மோத³னம் - மகிழ்ச்சியைத் தருபவரை, மலர்ச்சியைத் தருபவரை  
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • குஞ்ஜ - பூஞ்சோலையின்,  மண்டபத்தின் 
  • மத்⁴யக³ம் - நடுவில் வீற்றிருப்பவரை
  • ப்ரஸன்ன - பிரகாசமான, புன்னகை பூத்த 
  • பா⁴நு - சூரியனைப் போன்ற
  • ஸோபனம் - மங்களகரமான ஒளியைக் கொண்டவரை 
  • நிகாம - வேண்டுமளவு, நிறைய 
  • காம - விருப்பங்களை
  • தா³யகம் - வழங்குபவரை, கொடுப்பவரை 
  • த்³ருக்³ - கண்கள் ஆகிய
  • அந்த - கடைக் கோடியிலிருந்து, கடைக்கண் பார்வையிலிருந்து 
  • சாரு - அழகான
  • ஸாயகம் - அம்புகளைத் தொடுப்பவரை, கடைக்கண் பார்வை என்னும் அம்பால் ஈர்ப்பவரை  
  • ரஸால - இனிமையான
  • வேணு - புல்லாங்குழலை
  • கா³யகம் - இசைப்பவரை, பாடுவரை 
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • குஞ்ஜ - பூஞ்சோலையின்
  • நாயகம் - தலைவரை, கிருஷ்ணரை 

கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

6. தே⁴னுகா ரிஷ்டகோ 
நிஷ்டக்ருத்³ த்³வேஷிணாம் 
கேஸி²கா கம்ஸ ஹ்ருத் 
வம்ஸி²கா வாத³க:|
பூதனா கோபக 
ஸூரஜா கே²லனோ 
பா³ல கோ³பாலக: 
பாது மாம் ஸர்வதா³||

  • தே⁴னுகா - தேனுகாசுரன் எனும் அரக்கன் 
  • அரிஷ்ட - அரிஷ்டாசுரன் எனும் அரக்கன் 
  • கோ - பசுக்கள்
  • நிஷ்டக்ருத்³ - துயரத்தை நீக்கியவர், அல்லது காப்பவர் 
  • த்³வேஷிணாம் - பகைவர்களை
  • கேஸி²கா - கேசி, எனும் அரக்கன் 
  • கம்ஸ - கம்சன்
  • ஹ்ருத் - ஆகியோரின்  உயிரை எடுத்தவர்
  • வம்ஸி²கா - புல்லாங்குழல்
  • வாத³கஃ - வாசிப்பவர்
  • பூதனா - பூதனை எனும் அரக்கிக்கு 
  • கோபக - கோபம் கொண்டவர், அல்லது தண்டித்தவர் 
  • ஸூரஜா - யமுனை நதிக்கரையில்
  • கே²லனோ - விளையாடியவர்
  • பா³ல - குழந்தை வடிவ
  • கோ³பாலகஃ - கோபாலன், பசுக்களை காப்பவர் 
  • பாது - காக்கட்டும்
  • மாம் - என்னை
  • ஸர்வதா³ - எப்போதும்

தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே,  வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி  மகிழ்கின்றவனே, பால கோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

6. கு³ணாகரம் ஸுகா²கரம்  
க்ருபாகரம் க்ருபாபரம்
ஸுரத்³விஷன்னிகந்த³னம்
நமாமி கோ³பனந்த³னம்|
நவீனகோ³பனாக³ரம்
நவீனகேலிலம்படம்
நமாமி மேக⁴ஸுந்த³ரம்
தடி³த்ப்ரபா⁴லஸத்படம்||

  • கு³ணாகரம் - நற்பண்புகளின் இருப்பிடமானவரை
  • ஸுகா²கரம் - பேரின்பத்தை அளிப்பவரை
  • க்ருபாகரம்  - கருணை புரிபவரை
  • க்ருபாபரம்  - கருணையே வடிவானவரை
  • ஸுரத்³ விஷன் நிகந்த³னம் - தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரை
  • நமாமி - வணங்குகிறேன்
  • கோ³ப நந்த³னம் - நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணரை
  • நவீன கோ³ப நாக³ரம் - ஆயர்பாடியில் இருக்கும் இளமையான, அழகான தலைவனை
  • நவீன கேலி லம்படம் - புத்தம் புதிய லீலைகளை, விளையாட்டுகளை  புரிவதில் ஆர்வம் உள்ளவரை
  • நமாமி - வணங்குகிறேன்
  • மேக⁴ ஸுந்த³ரம் - நீல மேகத்தைப் போல அழகான நிறம் கொண்டவரை
  • தடி³த் ப்ரபா⁴ லஸத் படம் - மின்னலின் ஒளியைப் போல பிரகாசிக்கும் பீதாம்பரத்தை, மஞ்சள் ஆடையை  உடுத்தியிருப்பவரை

நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

5. ராக்ஷஸ க்ஷோபி⁴த: 
ஸீதயா ஸோ²பிதோ 
த³ண்ட³ காரண்ய பூ⁴ 
புண்யதா காரண:|
லக்ஷ்மணோ னான்விதோ 
வானரை: ஸேவிதோ:
அக³ஸ்த்ய ஸம்பூஜிதோ 
ராக⁴வ: பாது மாம்||

  • ராக்ஷஸ க்ஷோபி⁴தஸ் - அரக்கர்களை நடுங்கச் செய்தவர், அரக்கர்களை அழித்தவர்
  • ஸீதயா - சீதா பிராட்டியோடு
  • ஸோ²பிதோ - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
  • த³ண்ட³ காரண்ய - தண்டகாரண்யம் என்னும்
  • பூ⁴ - பூமிக்கு, காட்டிற்கு 
  • புண்யதா - புனிதத்தன்மையை, நன்மையைக் கொடுத்த
  • காரணஹ - காரணமானவர்
  • லக்ஷ்மணோ - லட்சுமணனால்
  • அன்விதோ - எப்போதும்  பின் தொடரப்பட்டவர், லட்சுமணனைத் துணையாகக் கொண்டவர்
  • வானரைஸ் - வானரங்களால், குரங்குப் படையினரால் 
  • ஸேவிதோஹோ - வணங்கப்பட்டவர், சேவை செய்யப்பட்டவர்
  • அக³ஸ்த்ய - அகத்திய முனிவரால்
  • ஸம்பூஜிதோ - மிகச் சிறப்பாக வழிபடப்பட்டவர்
  • ராக⁴வஃ - ரகு வம்சத்தில் பிறந்த அந்த ஸ்ரீராமன்
  • பாது - காப்பாற்றட்டும்
  • மாம் - என்னை

விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால்  தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண்டாடப் பட்டவனே, அகஸ்தியரால்  பூஜிக்கப் பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

5. பு⁴வோ ப⁴ராவ தாரகம்
ப⁴வாப்³தி⁴ கர்ண தா⁴ரகம்
யஸோ² மதீ கிஸோ²ரகம்
நமாமி சித்த சோரகம்|
த்³ரு க³ந்த காந்த ப⁴ங்கி³னம்
ஸதா³ ஸதா³லி ஸங்கி³னம்
தி³னே தி³னே நவம் நவம்
நமாமி நந்த³ஸம்ப⁴வம்||

  • பு⁴வோ - பூமியின்
  • ப⁴ர - பாரத்தை
  • அவதாரகம் - இறக்கியவரை, குறைத்தவரை  
  • ப⁴வ - பிறவி என்னும்
  • அப்³தி - கடலை கடக்க உதவும்
  • கர்ண தா⁴ரகம் - மாலுமியை, கப்பலோட்டியை
  • யஸோ² மதீ - யசோதை அன்னையின்
  • கிஸோ²ரகம் - பாலனை, சிறுவனை  
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • சித்த - உள்ளத்தை, மனதை 
  • சோரகம் - திருடுபவரை, கள்ளனை  
  • த்³ரு க³ந்த - கடைக்கண் பார்வையில்
  • காந்த - அழகான 
  • ப⁴ங்கி³னம் - வளைவுகளைக், லீலைகளைக்  கொண்டவரை 
  • ஸதா³ - எப்போதும்
  • ஸத்³ - நல்லவர்களான, பக்தர்களான, கோபியர்களான 
  • அலி - வண்டுகளின்
  • ஸங்கி³னம் - கூட்டத்தோடு இருப்பவரை 
  • தி³னே தி³னே - நாளுக்கு நாள், ஒவ்வொரு நாளும் 
  • நவம் நவம் - புதிய புதிய வடிவமாய், புதுமையாக  தோன்றுபவரை 
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • நந்த³ - நந்தகோபருக்கு
  • ஸம்ப⁴வம் - மகனாகப் பிறந்தவரை

கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. க்ருஷ்ண கோ³விந்த³ ஹே ராம நாராயண 
ஸ்ரீபதே வாஸுதே³வா ஜித ஸ்ரீநிதே⁴|
அச்யுதானந்த ஹே மாத⁴வா தோ⁴க்ஷஜ 
த்³வாரகா நாயக த்³ரௌபதீ³ ரக்ஷக||

🎵ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 4🙏

  • க்ருஷ்ண - இருண்ட நிறமுடையவன், கவர்ந்திழுப்பவன், கண்ணன் 
  • கோ³விந்த - பசுக்களைக் காப்பவன், பூமியைக் மீட்டவன்
  • ஹே - ஓ!
  • ராம - மனதிற்கு மகிழ்ச்சி தருபவன்
  • நாராயண - நாரங்களை, ஜீவன்களை  இருப்பிடமாகக் கொண்டவன், பரம்பொருள்
  • ஸ்ரீபதே - லட்சுமியின் மணாளனே, செல்வத்தின் அதிபதியே 
  • வாசுதே³வா - வசுதேவரின் மகனே, அனைத்து உலகிலும் வசிப்பவனே
  • அஜித - யாராலும் வெல்லப்பட முடியாதவனே
  • ஸ்ரீநிதே⁴ - மங்களம் மற்றும் செல்வத்தின் இருப்பிடமே
  • அச்யுத - நழுவாதவன், தன் பக்தர்களை என்றும் கைவிடாதவன்
  • ஆனந்த - எல்லையற்ற பேரின்ப வடிவமானவனே
  • ஹே - ஓ! 
  • மாத⁴வ - லட்சுமியின் கணவனே, அறிவின் அதிபதியே
  • அதோ⁴க்ஷஜ - புலன்களுக்கு எட்டாதவனே, தலைசிறந்தவனே 
  • த்³வாரகா - துவாரகை நகரத்தின்
  • நாயக - தலைவனே
  • த்³ரௌபதீ³ - திரௌபதியை
  • ரக்ஷக - ஆபத்திலிருந்து காப்பாற்றியவனே, பாதுகாத்தவனே

ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றி கொள்ள முடியாதவனே,  அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, துவாரகா நாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு  நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. ஸதை³வ பாத³ பங்கஜம்
மதீ³ய மானஸே நிஜம்
த³தா⁴ன முக்த மாலகம்
நமாமி நந்த³ பா³லகம்|
ஸமஸ்ததோ³ஷஸோ²ஷணம்
ஸமஸ்த லோக போஷணம்
ஸமஸ்த கோ³ப மானஸம்
நமாமி நந்த³லாலஸம்||

  • ஸதை³வ - எப்போதும், எக்காலத்திலும்
  • பாத³ - திருவடிகளை, பாதங்களை
  • பங்கஜம் - தாமரை போன்ற பாத பங்கஜம் என்றால் தாமரைத் திருவடிகளை
  • மதீ³ய - என்னுடைய
  • மானஸே - மனதிலே
  • நிஜம் - நிலையாக, உண்மையாக
  • த³தா⁴ன - வைத்திருப்பவனும்
  • முக்த மாலகம் - முத்தாரங்களை, முத்து மாலைகளை  அணிந்திருப்பவனுமான
  • நமாமி - வணங்குகிறேன்
  • நந்த³ பா³லகம் - நந்தகோபனின் பாலனை, குழந்தையான கிருஷ்ணனை 
  • ஸமஸ்த - அனைத்து, எல்லா
  • தோஷ - குற்றங்களையும், பாவங்களையும், குறைகளையும்
  • ஸோஷணம் - வற்றச் செய்பவனை, அழிப்பவனை 
  • ஸமஸ்த - உலகிலுள்ள அனைத்து
  • லோக - உலகங்களையும், உயிர்களையும்
  • போஷணம் - காப்பவனை, ஊட்டி வளர்ப்பவனை 
  • ஸமஸ்த - எல்லா 
  • கோ³ப - கோபியர்களின், ஆயர்பாடி மக்களின்
  • மானஸம் - மனதைக் கவர்ந்தவனை, மனதில் வாழ்பவனை 
  • நமாமி - வணங்குகிறேன்
  • நந்த³ லாலஸம் - நந்தகோபனின் அன்பிற்குரியவனும், விளையாட்டுகளில் பிரியமுள்ளவனுமான கிருஷ்ணனை

தன் கமல பாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. விஷ்ணவே ஜிஷ்ணவே 
ஸ²ங்கனே சக்ரிணே 
ருக்மிணீ ராகி³ணே 
ஜானகீ ஜானயே|
வல்லவீ  வல்லபா⁴யார் 
சிதா யாத்மனே 
கம்ஸ வித்⁴வம் ஸினே 
வம்ஸி²னே தே நம:||

  • விஷ்ணவே - எங்கும் நிறைந்திருப்பவருக்கு
  • ஜிஷ்ணவே - என்றும் வெற்றி பெறுபவருக்கு
  • ஸ²ங்கனே - பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவருக்கு
  • சக்ரிணே - சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவருக்கு
  • ருக்மிணீ - ருக்மிணி தேவியின் மீது
  • ராகி³ணே - அன்பு, காதல்  கொண்டவருக்கு
  • ஜானகீ - ஜானகி தேவியின், சீதையின் 
  • ஜானயே - கணவராக இருப்பவருக்கு
  • வல்லவீ - கோபியர்களின்
  • வல்லபா⁴ய - அன்பிற்குரிய தலைவருக்கு
  • அர்ச்சிதாய - யாவராலும் பூஜிக்கப்படுபவருக்கு
  • ஆத்மனே - எல்லா உயிர்களின் ஆன்மாவாக விளங்குபவருக்கு
  • கம்ஸ - கம்ஸனை
  • வித்⁴வம் ஸினே - அழித்தவருக்கு
  • வம்ஸி²னே - புல்லாங்குழல் வாசிப்பவருக்கு
  • தே - அத்தகைய உமக்கு
  • நம - நமஸ்காரம், வணக்கம் 

எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே,  பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின்  நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. கத³ம்ப³ ஸூன குண்ட³லம்
ஸு சாரு க³ண்ட³ மண்ட³லம்
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்
நமாமி க்ருʼஷ்ண து³ர்லப⁴ம்|
யஸோ²த³யா ஸ மோத³யா
ஸ கோ³பயா ஸ நந்த³யா
யுதம் ஸுகை²க தா³யகம்
நமாமி கோ³ப நாயகம்||

  • கத³ம்ப³ ஸூன - கடம்ப மலர்களாலான 
  • குண்ட³லம் - காதணிகளை அணிந்திருப்பவரை
  • ஸு சாரு - மிகவும் அழகான
  • க³ண்ட³ மண்ட³லம் - கன்னப் பிரதேசங்களைக் கொண்டவரை
  • வ்ரஜ அங்க³னா - விரஜ பூமியின், ஆயர்பாடியின் கோபியர்களுக்கு
  • ஏக வல்லப⁴ம் - ஒரே தலைவராக, பிரியமானவராக விளங்குபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • க்ருʼஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • து³ர்லப⁴ம் - பக்தி இல்லாதவர்களால் அடைவதற்கு அரியவரை
  • யஸோ²த³யா - யசோதா தேவியுடனும்
  • ஸ மோத³யா - மகிழ்ச்சியுடனும்
  • ஸ கோ³பயா - கோபாலர்களுடனும், இடைச் சிறுவர்களுடனும்
  • ஸ நந்த³யா - நந்தகோபருடனும்
  • யுதம் - கூடி இருப்பவரை
  • ஸுக² ஏக தா³யகம் - தூய்மையான ஆனந்தத்தை மட்டுமே தருபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • கோ³ப நாயகம் - ஆயர்களின் தலைவரான அந்த கிருஷ்ணரை

கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

2. அச்யுதம் கேஸ²வம் 
ஸத்யபா⁴மா த⁴வம் 
மாத⁴வம் ஸ்ரீத⁴ரம் 
ராதி⁴கா ராதி⁴தம்|
இந்தி³ரா மந்தி³ரம் 
சேதஸா ஸுந்த³ரம் 
தே³வகீ நந்த³னம் 
நந்த³ஜம் ஸந்த³தே⁴||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், என்றும் வீழாதவன்
  • கேஸ²வம் - அழகான தலை முடி உடையவன், கேசி என்ற அரக்கனை அழித்தவன்
  • ஸத்யபா⁴மா த⁴வம் - சத்யபாமாவின் கணவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் கணவன், அறிவுக்கு அதிபதி
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியைத் தன் மார்பில் தாங்குபவன்
  • ராதி⁴கா ராதி⁴தம் - ராதையால் ஆராதிக்கப்படுபவன், வழிபடப்படுபவன்
  • இந்தி³ரா மந்தி³ரம் - லட்சுமி தேவி வசிக்கும் இருப்பிடம்
  • சேதஸா ஸுந்த³ரம் - மனதால் நினைக்க அழகாக இருப்பவன், தூய்மையான உள்ளம் கொண்டவன்
  • தே³வகி நந்த³னம் - தேவகியின் மைந்தன், தேவகிக்கு மகிழ்ச்சி அளிப்பவன்
  • நந்த³ஜம் - நந்தகோபனின் மகன்
  • ஸந்த³தே⁴ - எப்போதும் வணங்குகிறேன், மனதாரத் துதிக்கிறேன்

அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்ய பாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால்  பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா  உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

2. மனோஜ க³ர்வ மோசனம்
விஸா²ல லோல லோசனம்
விதூ⁴த கோ³ப ஸோ²சனம்
நமாமி பத்³ம லோசனம்|
கரார விந்த³ பூ⁴த⁴ரம்
ஸ்மிதாவ லோக ஸுந்த³ரம்
மஹேந்த்³ரமான தா³ரணம்
நமாமி க்ருஷ்ண வாரணம்||

  • மனோஜ - மன்மதனுடைய, காமதேவனுடைய
  • க³ர்வ - அகந்தையை, கர்வத்தை
  • மோசனம் - அழித்தவரை, நீக்கியவரை
  • விஸா²ல - பரந்த, பெரிய
  • லோல - சஞ்சலமான, அசைந்து கொண்டிருக்கும், கருணை ததும்பும்
  • லோசனம் - கண்களை உடையவரை
  • விதூ⁴த - போக்கப்பட்ட, துடைத்தெறியப்பட்ட
  • கோ³ப - கோபியர்களின், ஆயர்பாடி மக்களின்
  • ஸோ²சனம் - துக்கத்தை, சோகத்தை உடையவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • பத்³ம - தாமரை போன்ற
  • லோசனம் - கண்களை உடையவரை
  • கர - கைகளாகிய
  • அரவிந்த³ - தாமரை மலரினால்
  • பூ⁴த⁴ரம் - மலையைத் தாங்கியவரை, கோவர்த்தன கிரியைச் சுமந்தவரை
  • ஸ்மித - புன்னகையுடனும்
  • அவலோக - பார்க்கும் பார்வையினாலும்
  • ஸுந்த³ரம் - அழகானவரை
  • மஹேந்த்³ர - தேவேந்திரனுடைய
  • மான - கர்வத்தை
  • தா³ரணம் - பிளந்தவரை, அழித்தவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • க்ருஷ்ண - கிருஷ்ணனாகிய
  • வாரணம் - மத யானையை

மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

1. அச்யுதம் கேஸ²வம் ராம நாராயணம் 
க்ருஷ்ண தா³மோத³ரம் வாஸுதே³வம் ஹரிம்|
ஸ்ரீத⁴ரம் மாத⁴வம் கோ³பிகா வல்லப⁴ம் 
ஜானகீ நாயகம் ராமச்சந்த்³ரம் ப⁴ஜே||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், தன் நிலையில் இருந்து என்றும் வீழாதவன் 
  • கேஸ²வம் - கேசி என்ற அரக்கனை அழித்தவன், அழகான தலைமுடி உடையவன் 
  • ராம நாராயணம் - ராமனாக அவதரித்த நாராயணன்
  • க்ருஷ்ண - அனைவரையும் தன் பால் ஈர்க்கும் கிருஷ்ணன், கருமை நிறத்தவன்
  • தா³மோத³ரம் - யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்ட கண்ணன்
  • வாஸுதே³வம் - வசுதேவரின் மைந்தன், எங்கும் நிறைந்திருப்பவன்
  • ஹரிம் - பாவங்களைப் போக்குபவன், திருமால்
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியை தன் மார்பில் தாங்கியவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் மணாளன், அறிவுக்கு அதிபதி
  • கோ³பிகா வல்லப⁴ம் - கோபியர் குலப் பெண்களின் அன்பிற்குரிய தலைவன்
  • ஜானகீ நாயகம் - ஜனகரின் மகளான சீதையின் கணவன்
  • ராமச்சந்த்³ரம் - சந்திரன் போன்ற குளுமையான முகமுடைய ராமபிரான்
  • ப⁴ஜே - இப்படிப்பட்ட இறைவனை நான் வணங்குகிறேன், துதிக்கிறேன் 

அழிவில்லாதவனும், கேசி அரக்கனை அழித்தவனும், ராமபிரானாக வந்த நாராயணனும், அனைவரையும் ஈர்க்கும் கிருஷ்ணனும், வயிற்றில் கயிறு கட்டப்பட்ட தாமோதரனும், வசுதேவர் மைந்தனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், லட்சுமியை மார்பில் தாங்கிய ஸ்ரீதரனும், மாதவனும், கோபிகைகளின் அன்பிற்குரியவனும், ஜானகியின் நாயகனுமாகிய ராமச்சந்திர மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||