ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
5. ராக்ஷஸ க்ஷோபி⁴த:
ஸீதயா ஸோ²பிதோ
த³ண்ட³ காரண்ய பூ⁴
புண்யதா காரண:|
லக்ஷ்மணோ னான்விதோ
வானரை: ஸேவிதோ:
அக³ஸ்த்ய ஸம்பூஜிதோ
ராக⁴வ: பாது மாம்||
- ராக்ஷஸ க்ஷோபி⁴தஸ் - அரக்கர்களை நடுங்கச் செய்தவர், அரக்கர்களை அழித்தவர்
- ஸீதயா - சீதா பிராட்டியோடு
- ஸோ²பிதோ - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
- த³ண்ட³ காரண்ய - தண்டகாரண்யம் என்னும்
- பூ⁴ - பூமிக்கு, காட்டிற்கு
- புண்யதா - புனிதத்தன்மையை, நன்மையைக் கொடுத்த
- காரணஹ - காரணமானவர்
- லக்ஷ்மணோ - லட்சுமணனால்
- அன்விதோ - எப்போதும் பின் தொடரப்பட்டவர், லட்சுமணனைத் துணையாகக் கொண்டவர்
- வானரைஸ் - வானரங்களால், குரங்குப் படையினரால்
- ஸேவிதோஹோ - வணங்கப்பட்டவர், சேவை செய்யப்பட்டவர்
- அக³ஸ்த்ய - அகத்திய முனிவரால்
- ஸம்பூஜிதோ - மிகச் சிறப்பாக வழிபடப்பட்டவர்
- ராக⁴வஃ - ரகு வம்சத்தில் பிறந்த அந்த ஸ்ரீராமன்
- பாது - காப்பாற்றட்டும்
- மாம் - என்னை
விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால் தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண்டாடப் பட்டவனே, அகஸ்தியரால் பூஜிக்கப் பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment