About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. வித்³யுது³த்³ யோதவத் 
ப்ரஸ்பு²ரத் வாஸஸம் 
ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் 
ப்ரோல்ல ஸத்³ விக்³ரஹம்|
வன்யயா மாலயா 
ஸோ²பி⁴தோ ர:ஸ்த²லம் 
லோஹி தாங் க்⁴ரித்³ வயம் 
வாரி ஜாக்ஷம் ப⁴ஜே||

  • வித்³யுது³த்³ யோதவத் - மின்னலின் ஒளியைப் போல
  • ப்ரஸ்பு²ரத் - பிரகாசிக்கின்ற, ஒளி வீசுகின்ற
  • வாஸஸம் - ஆடையை அணிந்திருப்பவர்
  • ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் - மழைக் காலத்து மேகத்தைப் போல, கருமையானவர் 
  • ப்ரோல்ல ஸத்³ - மிக அதிகமாக விளங்குகின்ற, ஒளி வீசுகின்ற
  • விக்³ரஹம் - திருமேனியை உடையவர், உடலமைப்பைக் கொண்டவர் 
  • வன்யயா - காட்டுப் பூக்களால் ஆன
  • மாலயா - மாலையினால்
  • ஸோ²பி⁴தோ - அழகு பெற்ற, விளங்குகின்ற
  • உரஸ் ஸ்த²லம் - மார்பகப் பகுதியை உடையவர்
  • லோஹி தாங் க்⁴ரித்³வயம் - சிவந்த இரு திருவடிகளைக் கொண்டவர்
  • வாரி ஜாக்ஷம் - தாமரை மலர் போன்ற கண்களை உடையவர்
  • வயம் - நாங்கள் அனைவரும்

ப⁴ஜே - அத்தகைய இறைவனை  வணங்குகிறோம், வழிபடுகிறோம்
மின்னலின் ஒளி போல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழை காலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளி சிந்தும்  திருமார்புடையவனே, சிவந்த பாதங்களை உடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment