About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. கத³ம்ப³ ஸூன குண்ட³லம்
ஸு சாரு க³ண்ட³ மண்ட³லம்
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்
நமாமி க்ருʼஷ்ண து³ர்லப⁴ம்|
யஸோ²த³யா ஸ மோத³யா
ஸ கோ³பயா ஸ நந்த³யா
யுதம் ஸுகை²க தா³யகம்
நமாமி கோ³ப நாயகம்||

  • கத³ம்ப³ ஸூன - கடம்ப மலர்களாலான 
  • குண்ட³லம் - காதணிகளை அணிந்திருப்பவரை
  • ஸு சாரு - மிகவும் அழகான
  • க³ண்ட³ மண்ட³லம் - கன்னப் பிரதேசங்களைக் கொண்டவரை
  • வ்ரஜ அங்க³னா - விரஜ பூமியின், ஆயர்பாடியின் கோபியர்களுக்கு
  • ஏக வல்லப⁴ம் - ஒரே தலைவராக, பிரியமானவராக விளங்குபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • க்ருʼஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • து³ர்லப⁴ம் - பக்தி இல்லாதவர்களால் அடைவதற்கு அரியவரை
  • யஸோ²த³யா - யசோதா தேவியுடனும்
  • ஸ மோத³யா - மகிழ்ச்சியுடனும்
  • ஸ கோ³பயா - கோபாலர்களுடனும், இடைச் சிறுவர்களுடனும்
  • ஸ நந்த³யா - நந்தகோபருடனும்
  • யுதம் - கூடி இருப்பவரை
  • ஸுக² ஏக தா³யகம் - தூய்மையான ஆனந்தத்தை மட்டுமே தருபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • கோ³ப நாயகம் - ஆயர்களின் தலைவரான அந்த கிருஷ்ணரை

கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment