About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. விஷ்ணவே ஜிஷ்ணவே 
ஸ²ங்கனே சக்ரிணே 
ருக்மிணீ ராகி³ணே 
ஜானகீ ஜானயே|
வல்லவீ  வல்லபா⁴யார் 
சிதா யாத்மனே 
கம்ஸ வித்⁴வம் ஸினே 
வம்ஸி²னே தே நம:||

  • விஷ்ணவே - எங்கும் நிறைந்திருப்பவருக்கு
  • ஜிஷ்ணவே - என்றும் வெற்றி பெறுபவருக்கு
  • ஸ²ங்கனே - பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவருக்கு
  • சக்ரிணே - சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவருக்கு
  • ருக்மிணீ - ருக்மிணி தேவியின் மீது
  • ராகி³ணே - அன்பு, காதல்  கொண்டவருக்கு
  • ஜானகீ - ஜானகி தேவியின், சீதையின் 
  • ஜானயே - கணவராக இருப்பவருக்கு
  • வல்லவீ - கோபியர்களின்
  • வல்லபா⁴ய - அன்பிற்குரிய தலைவருக்கு
  • அர்ச்சிதாய - யாவராலும் பூஜிக்கப்படுபவருக்கு
  • ஆத்மனே - எல்லா உயிர்களின் ஆன்மாவாக விளங்குபவருக்கு
  • கம்ஸ - கம்ஸனை
  • வித்⁴வம் ஸினே - அழித்தவருக்கு
  • வம்ஸி²னே - புல்லாங்குழல் வாசிப்பவருக்கு
  • தே - அத்தகைய உமக்கு
  • நம - நமஸ்காரம், வணக்கம் 

எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே,  பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின்  நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment