ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
4. க்ருஷ்ண கோ³விந்த³ ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதே³வா ஜித ஸ்ரீநிதே⁴|
அச்யுதானந்த ஹே மாத⁴வா தோ⁴க்ஷஜ
த்³வாரகா நாயக த்³ரௌபதீ³ ரக்ஷக||
🎵ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 4🙏
- க்ருஷ்ண - இருண்ட நிறமுடையவன், கவர்ந்திழுப்பவன், கண்ணன்
- கோ³விந்த - பசுக்களைக் காப்பவன், பூமியைக் மீட்டவன்
- ஹே - ஓ!
- ராம - மனதிற்கு மகிழ்ச்சி தருபவன்
- நாராயண - நாரங்களை, ஜீவன்களை இருப்பிடமாகக் கொண்டவன், பரம்பொருள்
- ஸ்ரீபதே - லட்சுமியின் மணாளனே, செல்வத்தின் அதிபதியே
- வாசுதே³வா - வசுதேவரின் மகனே, அனைத்து உலகிலும் வசிப்பவனே
- அஜித - யாராலும் வெல்லப்பட முடியாதவனே
- ஸ்ரீநிதே⁴ - மங்களம் மற்றும் செல்வத்தின் இருப்பிடமே
- அச்யுத - நழுவாதவன், தன் பக்தர்களை என்றும் கைவிடாதவன்
- ஆனந்த - எல்லையற்ற பேரின்ப வடிவமானவனே
- ஹே - ஓ!
- மாத⁴வ - லட்சுமியின் கணவனே, அறிவின் அதிபதியே
- அதோ⁴க்ஷஜ - புலன்களுக்கு எட்டாதவனே, தலைசிறந்தவனே
- த்³வாரகா - துவாரகை நகரத்தின்
- நாயக - தலைவனே
- த்³ரௌபதீ³ - திரௌபதியை
- ரக்ஷக - ஆபத்திலிருந்து காப்பாற்றியவனே, பாதுகாத்தவனே
ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றி கொள்ள முடியாதவனே, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, துவாரகா நாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு நமஸ்காரம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment