About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
  • பத்³ம – தாமரை
  • பத்ர – இதழ்
  • அக்ஷம் – கண்களை உடையவரை
  • நீல – நீல நிறமுள்ள
  • ஜீமூத – மேகத்திற்கு
  • ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
  • யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
  • ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment