ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
3. லோகா வனாயாத் தலீலம்
பூஜி தானேக தேவேந்த்ர லோகைக பாலம்|
ஸ்ரீ தேவகீ புண்ய பாலம்
ஆஹ்ரு தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்||
- லோகா – உலகங்களை
- அவநாய – காப்பதற்காக, இரட்சிப்பதற்காக
- ஆத்த லீலம் – லீலைகளை, அவதாரங்களை எடுத்தவரே
- பூஜித – வணங்கப்படுபவரே, பூஜிக்கப்படுபவரே
- அனேக – பல வகையான
- தேவேந்த்ர – தேவர்களின் தலைவனான இந்திரனால்
- லோக – உலகங்களுக்கு
- ஏக பாலம் – ஒப்பற்ற ஒரே காவலராக, தலைவராக இருப்பவரே
- ஸ்ரீ தேவகீ – மங்களகரமான தேவகி தேவியின்
- புண்ய பாலம் – புண்ணியத்தின் வடிவமான குழந்தையே, மகனே
- ஆஹ்ருத – கவர்ந்து இழுத்தவரே, கொண்டு வரப்பட்டவரே
- அனேக – பல தரப்பட்ட
- கோபீ – கோபிகா ஸ்திரீகளின், ஆயர்பாடி பெண்களின் மனதை
- ஸுவர்ண ஆப – தங்கம் போன்ற பிரகாசமான ஒளியுடைய
- சேலம் – ஆடைகளை அணிந்திருப்பவரே
உலகங்களைக் காப்பதற்காகப் பல லீலைகளைப் புரிந்தவரும், இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் மனதைக் கவர்ந்தவரும், பொன்னிற ஆடையை உடுத்தியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை, ஸ்ரீ பார்த்த சாரதியை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment