About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. பா ஹுத்வயோ பேத தேஹம்  
பாஞ்சஜந்யாக் ய சங்கஸ் புரத்தக்ஷ பாஹும்|
ஸ்ரீ காருடஸ் வீய வாஹம் 
புத்ர பௌத்ராதி ஸம்பூர்ண திவ்யஸ் வகேஹம்||  

  • பாஹு த்வயம் – இரண்டு கைகள்
  • உபேத – கொண்ட, பொருந்திய
  • தேஹம் – திருமேனியை கொண்டவர் 
  • பாஞ்சஜந்ய – பாஞ்சஜன்யம் என்னும் பெயர் கொண்ட
  • ஆக்ய – பெயருடைய
  • சங்க – சங்கானது
  • ஸ்புரத் – விளங்குகின்ற, பிரகாசிக்கின்ற
  • தக்ஷ – வலது
  • பாஹும் – வலது கையில் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்திப் பிரகாசிப்பவர்
  • ஸ்ரீ காருட – கருட பகவானை
  • ஸ்வீய – தன்னுடைய
  • வாஹம் – வாகனமாகக் கொண்டவர்
  • புத்ர – பிள்ளைகள்
  • பௌத்ர – பேரன்கள்
  • ஆதி – முதலானவர்களுடன்
  • ஸம்பூர்ண – நிறைந்து விளங்கும்
  • திவ்ய – தெய்வீகமான, மங்களகரமான
  • ஸ்வ – தன்னுடைய
  • கேஹம் – இல்லத்தை அருளுபவர்

இரு கரங்களை உடைய திருமேனி கொண்டவரும், வலது கையில் பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்கினை ஏந்திப் பிரகாசிப்பவரும், கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட பெருமானை,  ஸ்ரீ பார்த்தசாரதியை பூஜிக்கிறேன் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment