About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

5. வாமே கரே சாரு சக்ரம் 
வாரணேந் த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம் சப்த நக்ரம்|
காருண்ய ஸம்பூர்ண நேத்ரம் 
ஸ்வீய ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்||  

  • வாமே - இடது பக்கத்தில்
  • கரே - கையில்
  • சாரு - அழகான
  • சக்ரம் - சக்கரத்தை ஏந்தியவனும்
  • வாரணேந்த்ர - யானைகளின் அரசனான கஜேந்திரனை
  • ஆர்த்த - துன்புறுத்திய
  • ஸஞ்சின்ன - துண்டித்த, பிளந்த
  • ஸம் - நன்றாக
  • சப்த - ஒலித்த, கத்திய
  • நக்ரம் - முதலையை அழித்தவனும்
  • காருண்ய - கருணை
  • ஸம்பூர்ண - நிறைந்த
  • நேத்ரம் - கண்களை உடையவனும்
  • ஸ்வீய - தன்னுடைய
  • ஸெளந்தர்ய - அழகால்
  • ஸம்பூர்ண - நிறைந்தவனும் ஆகிய
  • காமாக்ய - காமாக்யா தேவியின்
  • புத்ரம் - மகனை வணங்குகிறேன் 

இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணை மிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment